அருமையான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை... பயணிகள் மகிழ்ச்சி
ராமேஸ்வரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்திருச்சி வழியாக இயக்கப்படுகிறது. இதுவரை வாரத்திற்கு மூன்று நாட்கள் இயங்கி வந்த இந்த ரயில், இனி வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்கப்படும்.

தஞ்சாவூர்: ராமேஸ்வரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இனி வாரத்திற்கு 4 நாட்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதற்கு திருச்சி எம்.பி., துரை வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் மார்ச் 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் திருச்சியையும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் சேர்ந்த பயணிகளுக்கு கூடுதல் வசதி கிடைக்கும்.
ராமேஸ்வரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்திருச்சி வழியாக இயக்கப்படுகிறது. இதுவரை வாரத்திற்கு மூன்று நாட்கள் இயங்கி வந்த இந்த ரயில், இனி வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்கப்படும். ராமேஸ்வரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 3ம் தேதி முதல் வியாழன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களுடன் செவ்வாய் கிழமையும் கூடுதலாக இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் மார்ச் 4ம் தேதி முதல் திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களுடன் புதன் கிழமையும் கூடுதலாக இயக்கப்படும். ரயிலின் பெட்டிகளின் அமைப்பு, நேரம் மற்றும் நிறுத்தங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ வரவேற்றுள்ளார். திருச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் வழக்கமாக்கப்பட்டதையும், ராமேஸ்வரம்-திருப்பதி ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டதையும் அவர் முக்கிய வளர்ச்சிகளாகக் குறிப்பிட்டுள்ளார். இது திருச்சியைச் சேர்ந்த மக்களுக்குப் பயனளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கூறுகையில், ரயில்வே துறையில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த ரயில் சேவை தினசரி இயக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மீட்டர் கேஜ்-ல் இருந்து பிராட்கேஜ் மாற்றத்திற்குப் பிறகு இந்த ரயில் வாரத்திற்கு மூன்று நாட்களாக குறைக்கப்பட்டது. அதற்கு முன்பு இது தினசரி சேவையாக இருந்தது. இந்த ரயில் சேவை தினசரி இயக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்-திருப்பதி ரயிலின் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ரயில் திருப்பதிக்கு காலை 10.10 மணிக்கு சென்று சேர்கிறது. முதலில், இது திருப்பதிக்கு காலை 6 மணியளவில் செல்லும் இது பக்தர்களுக்கு வசதியாக இருந்தது. ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் நேரத்தை சற்று முன்னதாக மாற்றியமைத்து, ரயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவையின் அதிர்வெண் அதிகரிப்பு, திருச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் வழக்கமாக்கப்பட்டது போன்ற அறிவிப்புகள் திருச்சியைச் சேர்ந்த மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே வாரியத்தின் இந்த முடிவு, பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ஆன்மீக தலங்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு இந்த கூடுதல் சேவை மிகவும் உதவியாக இருக்கும்.
Before You Go
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
ட்ரெண்டிங் செய்திகள்






















