மேலும் அறிய

29 ஆண்டுகளுக்கு முன் காணால் போன ஐம்பொன்சிலைகள் உலோக திருமேனி மையத்தில் வைப்பு

மாயமானதாக கூறப்பட்ட சிலைகள் 29 ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிலைகள் ஒரிஜினல் சிலைகள் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது 

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அருகே சன்னியாசி பனங்குடி கிராமத்தில் உள்ள தாளரணேசுஸ்வரர் கோவிலில், கடந்த 1992ம் ஆண்டு ஆடிப்பூர அம்மன் மற்றும் விநாயகர் உலோக சிலை உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போனது. இது குறித்து திட்டச்சேரி போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் 1993ஆம் ஆண்டு சிலை கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் வழக்கை முடித்தனர். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவில், பல்வேறு மாவட்டங்களில் இருந்த அனைத்து சிலை திருட்டு வழக்குகளும் கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் உள்பட அனைத்து வழக்கையும் சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு மாற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து சிலைகள் மாயமாகி வழக்குப்பதிவு செய்யப்பட்டு  ஆவணங்கள் இல்லாத வழக்குகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தமிழக டி.ஜி.பி.,சைலேந்திரபாபு உத்தரவிட்டார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., ராஜாராம் தலைமையில் இன்ஸ்பெக்டர் இந்திரா, எஸ்.ஐக்கள் தமிழ்செல்வன், பாலச்சந்திரன் அடங்கிய போலீசார் நடத்திய விசாரணையில், திட்டச்சேரி சிலை வழக்கில் ஆவணங்கள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.


29 ஆண்டுகளுக்கு முன் காணால் போன ஐம்பொன்சிலைகள் உலோக திருமேனி மையத்தில் வைப்பு

இதில், திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில் பல்வேறு கோவிலுக்கு செந்தமான சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்து அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மற்ற சிலைகளுக்கு ஆவணங்கள் இருந்த நிலையில், அங்கிருந்த ஆடிப்பூர அம்மன் சிலை, விநாயகர் சிலைகள் ஆவணங்கள் இல்லாமல் இருந்ததும், 1992 ஆண்டுக்கு முன் மாயமானதாக கருதப்பட்ட ஆடிப்பூர அம்மன்,விநாயகர் சிலை என தெரியவந்தது. இதையடுத்து அந்த இரு சிலைகளும் மீட்கப்பட்டு நேற்று முன்தினம் திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் கொண்டு செல்லப்பட்டது. இதனை  தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு பார்வையிட்டார்.


29 ஆண்டுகளுக்கு முன் காணால் போன ஐம்பொன்சிலைகள் உலோக திருமேனி மையத்தில் வைப்பு

பின்னர்  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில்,  இரண்டு சிலைகளையும், தலைமை குற்றவியியல் நீதித்துறை நடுவர் நீதிமற்றத்தில் முன்பு ஒப்படைக்கப்பட்டது.  இதனை விசாரணை செய்த நீதிபதி சண்முகப்பிரியா, இரண்டு சிலைகளையும் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க உத்தவிட்டார். இதனால் சிலைகள் போலீசார் பாதுகாப்பாகவுடன், சிலைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் கூறுகையில், மாயமானதாக கூறப்பட்ட சிலைகள் 29 ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிலைகள் ஒரிஜினல் சிலைகள் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது.  1992 ஆண்டு திருடுபோய் பின் மீட்கப்பட்டு பாதுகாப்பு கருதி திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. அதற்கான ஆவணங்கள் மாயமான நிலையில் அந்த ஆண்டில் சிலைகளை மாட்டு வண்டியில் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிலைகளை கொண்டு சென்ற 80 வயது முதியவர் மற்றும் அந்த ஆண்டில் பணியிலிருந்த டிஎஸ்பி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோயிலுக்கு எழுதிய கடிதம் மூலம் துப்பு துலக்கப்பட்டது. இந்த சிலைகளை மீட்டு அவ்வூர் பொதுமக்கள் பொதுமக்களிடம் காட்டியபோது தங்கள் கோயில் சிலை எனக் தெரிவித்தனர் என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Shibu Soren: மூன்று முறை முதலமைச்சராகி, 308 நாட்கள் பதவி வகித்த ஷிபு சோரன் காலமானார் - என்ன காரணம்?
Shibu Soren: மூன்று முறை முதலமைச்சராகி, 308 நாட்கள் பதவி வகித்த ஷிபு சோரன் காலமானார் - என்ன காரணம்?
வரலாற்றில் முதல்முறை; 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடம் அறிமுகம்- எதற்கு தெரியுமா?
வரலாற்றில் முதல்முறை; 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடம் அறிமுகம்- எதற்கு தெரியுமா?
O Panneerselvam: ஓபிஎஸ்-ஐ எப்படியாவது சமாதானப்படுத்துங்க.. அதிமுக - பாஜக கூட்டணி துடிப்பது ஏன்?
O Panneerselvam: ஓபிஎஸ்-ஐ எப்படியாவது சமாதானப்படுத்துங்க.. அதிமுக - பாஜக கூட்டணி துடிப்பது ஏன்?
கேரளாவில் கனமழை எச்சரிக்கை: அடுத்த 4 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! பாதுகாப்பாக இருங்கள்!
கேரளாவில் கனமழை எச்சரிக்கை: அடுத்த 4 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! பாதுகாப்பாக இருங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்
திமுகவில் கோஷ்டி பூசல்! மாநகராட்சி கூட்டத்தில் மோதல்! KN நேரு Vs அன்பில்! | Anbil Mahesh Vs KN Nehru
”பாமக தலைவர் அன்புமணி தான்”தேர்தல் ஆணையம் அதிரடி!கதறும் ராமதாஸ் ஆதரவாளர்கள்! | Anbumani Vs Ramadoss
பாலியல் குற்றச்சாட்டு வாய் திறந்த விஜய் சேதுபதி சைபர் க்ரைமில் புகார் | Vijay Sethupathi Sexual Harassment

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Shibu Soren: மூன்று முறை முதலமைச்சராகி, 308 நாட்கள் பதவி வகித்த ஷிபு சோரன் காலமானார் - என்ன காரணம்?
Shibu Soren: மூன்று முறை முதலமைச்சராகி, 308 நாட்கள் பதவி வகித்த ஷிபு சோரன் காலமானார் - என்ன காரணம்?
வரலாற்றில் முதல்முறை; 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடம் அறிமுகம்- எதற்கு தெரியுமா?
வரலாற்றில் முதல்முறை; 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடம் அறிமுகம்- எதற்கு தெரியுமா?
O Panneerselvam: ஓபிஎஸ்-ஐ எப்படியாவது சமாதானப்படுத்துங்க.. அதிமுக - பாஜக கூட்டணி துடிப்பது ஏன்?
O Panneerselvam: ஓபிஎஸ்-ஐ எப்படியாவது சமாதானப்படுத்துங்க.. அதிமுக - பாஜக கூட்டணி துடிப்பது ஏன்?
கேரளாவில் கனமழை எச்சரிக்கை: அடுத்த 4 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! பாதுகாப்பாக இருங்கள்!
கேரளாவில் கனமழை எச்சரிக்கை: அடுத்த 4 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! பாதுகாப்பாக இருங்கள்!
India Post: தபால் துறையின் 50 வருட சேவைக்கு முற்றுப்புள்ளி, செப்.1 முதல் கட் - இனிமே இப்படி தான், விலை?
India Post: தபால் துறையின் 50 வருட சேவைக்கு முற்றுப்புள்ளி, செப்.1 முதல் கட் - இனிமே இப்படி தான், விலை?
Madhan Bob: ஆளு பாத்துதான் சாவுக்கு கூட போவீங்களா? மதன்பாப் மறைவிற்கு வராத பிரபலங்கள் - கோபத்தில் ரசிகர்கள்
Madhan Bob: ஆளு பாத்துதான் சாவுக்கு கூட போவீங்களா? மதன்பாப் மறைவிற்கு வராத பிரபலங்கள் - கோபத்தில் ரசிகர்கள்
Top 10 News Headlines: இன்ஸ்டாவில் புதிய கட்டுப்பாடு, ரூ.32,500 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines: இன்ஸ்டாவில் புதிய கட்டுப்பாடு, ரூ.32,500 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - 11 மணி செய்திகள்
US India: போருக்கு காசு கொடுக்கும் இந்தியா - மீண்டும் மீண்டும் சீண்டும் அமெரிக்கா, மோடியின் நட்பு ஓவரா?
US India: போருக்கு காசு கொடுக்கும் இந்தியா - மீண்டும் மீண்டும் சீண்டும் அமெரிக்கா, மோடியின் நட்பு ஓவரா?
Embed widget