மேலும் அறிய

பெருமைக்கு பெருமை சேர்க்கும் முத்தம்மாள் சத்திரம்... இது எங்க இருக்கு?

கருங்கல்லா... காரையும், சுண்ணாம்புமா, செங்கல் வைத்து கட்டணுமா என அனைத்திலும் கைவண்ணத்தை காட்டி கலையம்சத்தோடு கட்டியிருக்காங்க.

தஞ்சாவூர்: ஆக்ராவுக்கு தாஜ்மஹால் பெருமை... நம்ம தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டுக்கு பெருமைன்னா அது முத்தம்மாள் சத்திரம்தான். அது பற்றி தெரிஞ்சுக்குவோமா.

இந்தியாவின் கட்டிடக்கலைஞர்கள் உலக புகழ்பெற்றவர்கள். அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் இன்றும் நம்மவர்களின் திறமைக்கு எடுத்துக்காட்டாக பிரமாண்டமாக, வலுவாக நிலைத்து நிற்கிறது. அதிலும் தமிழகத்தில் கோயில்கள், மாட மாளிகைகள், அரண்மனைகள், சத்திரங்கள் என்று திரும்பும் இடமெல்லாம் வரலாற்று பொக்கிஷங்கள்தான். அண்ணாந்து பார்க்க வைக்கும், அதிசயப்பட வைக்கும் வகையில் நுணுக்கமான கலைத்திறனோடு வடிவமைக்கப்பட்ட அந்த கால கட்டிடங்கள் நம்மவர்கள் ஜாம்பவான்கள் என்று நிரூபிக்கின்றன.

கருங்கல்லா... காரையும், சுண்ணாம்புமா, செங்கல் வைத்து கட்டணுமா என அனைத்திலும் கைவண்ணத்தை காட்டி கலையம்சத்தோடு கட்டியிருக்காங்க. அப்படி அம்சமாக கட்டப்பட்ட ஒன்றுதான் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள மிகவும் பழமையான முத்தம்மாள் சத்திரம். இது நம்ம ஊருக்கு தாஜ்மஹால் என்று சொன்னால் மிகையில்லை.
 
தஞ்சாவூரை மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்த கிபி.1743 முதல் 1837 வரை கட்டிடக்கலைக்கு தகுந்த மரியாதை அளித்துள்ளனர். கட்டிட வல்லுனர்களின் திறமைகளை வெளி கொணர்ந்துள்ளனர். பெரிய, சிறிய சத்திரங்களை தஞ்சாவூர் முதல் தனுஷ்கோடி வரை அமைத்துள்ளனர் என்றால் பார்த்துக்கோங்க. அப்படி கட்டப்பட்ட சத்திரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எதுன்னு தெரிஞ்சுக்குவோம். தஞ்சாவூரில் காஞ்சி வீடு சத்திரம், சிரேயஸ் சத்திரம், சூரக்கோட்டையில் சைதாம்பாள்புரம் சத்திரம், ராசகுமரபாயி சத்திரம், ஒரத்தநாட்டில் முத்தம்மாள் சத்திரம், பட்டுக்கோட்டை காசங்குளச் சத்திரம், மணமேல்குடி திரௌபதாம்பாள்புரம் சத்திரம், மீமிசலில் ராசகுமாரம்பாள் சத்திரம், ராமேசுவரத்தில் ராமேசுவரம் சத்திரம். தனுஷ்கோடியில் சேதுக்கரை சத்திரம் என தஞ்சை- தனுஷ்கோடி வரை 20 சத்திரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இதில் ஒரத்தநாட்டில் உள்ள முத்தம்மாள் சத்திரம் முத்தம்மாள் என்பவரின் நினைவாக 1800-ல் இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டதாம். யாருங்க அந்த முத்தம்மாள் என்கிறீர்களா. இரண்டாம் சரபோஜி மன்னரின் முதல் மனைவியான முத்தம்மாள் சிறு வயதிலேயே இறந்துவிட்டார் அவர் இறப்பதற்கு முன்பு சத்திரம் ஒன்றை அமைக்கும்படி மன்னரிடம் வேண்டிக்கொண்டார். அவருடைய நினைவாக 1800-ல் இரண்டாம் சரபோஜி மன்னரால் இந்த முத்தம்மாள் சத்திரம் கட்டப்பட்டது என இங்குள்ள மராட்டிய கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இதுதாங்க இந்த சத்திரத்தோட பின்னணி. அதாவது ஆக்ராவில் எப்படி ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டினாரோ... அதே போல ஒரத்தநாட்டில் கட்டப்பட்டது இந்த முத்தம்மாள் சத்திரம் என்று தங்களின் ஊர் பெருமையை உரக்க சொல்கின்றனர் ஒரத்தநாடு மக்கள்.

யாத்திரை செல்லும் வழியில் யாத்ரீகர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் தேவையான உணவு, உறைவிடத்துடன் கூடியதாக இந்தச் சத்திரம் இருந்துள்ளது. அழகிய தோரண அமைப்புடைய யானை, குதிரை பூட்டிய தேர் சக்கர வாயில் பகுதியும்,  தூண்கள் தாங்கி நிற்கும் பெரிய முற்றங்களும், ஆங்காங்கே சிவலிங்கமும், மேல்தளத்தில் அழகிய வேலைப்பாட்டுடன் மரத்தால் அமைக்கப்பட்ட தூண்களும், நீர் நிறைந்த கிணறும் மாறாத பழமையை நமக்கு பறைசாற்றுகின்றன.

சத்திரமாகவும் பின்னர் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் பள்ளிக்கூடமாகவும் தொடர்ந்து விடுதி மாணவர்கள் தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பொக்கிஷங்கள் எப்போதும் நமக்கு ஆச்சரியத்தை அளிப்பதைதானே. அதுபோல்தான் கட்டிடக்கலையின் பொக்கிஷங்களான நம் முன்னோர்கள் கட்டிய பழமையான கட்டிடங்கள் நம்ம ஊருக்கு தனி ஸ்பெஷல்தானே. வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் ஒரத்தநாடு வழியே செல்லும் போது நம்ம ஊரு தாஜ்மஹாலாம் முத்தம்மாள் சத்திரத்தையும் விசிட் அடித்துவிட்டு செல்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget