மேலும் அறிய

கொள்ளிடம் ஆற்றில் இரண்டாவது பம்ப் ஹவுஸ் அமைப்பதை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

4 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு நல்ல மழை பெய்த காரணத்தால் ஆற்றில் தண்ணீர் உள்ளது. இதனால் மீண்டும் பம்ப் ஹவுஸ் அமைக்க போர்வெல் போட்டு வருகின்றனர். இரண்டாவது பம்ப் ஹவுஸ் அமைத்தால் தட்டுப்பாடு ஏற்படும்

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடக்கும் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது  இதனால் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தங்களது மனுக்களை சேர்ப்பித்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டம் திருச்சினம்பூண்டியை சேர்ந்த கிராம பொதுமக்கள் அளித்த மனுவில்,திருச்சினம்பூண்டி ஊராட்சிக்கு எல்லைக்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஒரு பெரிய  நீரேற்று நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நிமிடத்திற்கு 15 ஆயிரம் லிட்டர் வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. மேலும் இந்த கொள்ளிடம் ஆற்றில் மூன்று முறை மணல் குவாரி அமைத்து இங்கிருந்து பெருமளவில் மணல் எடுக்கப்பட்டதால் ஆற்றில் 15 அடி பள்ளம் ஏற்பட்டுவிட்டது.


கொள்ளிடம் ஆற்றில் இரண்டாவது பம்ப் ஹவுஸ் அமைப்பதை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து அதன் காரணமாக இப்பகுதியில் உள்ள கைப் பம்புகள், விவசாய மோட்டார்கள் நீரின்றி மீண்டும் 60 அடி முதல் 100 அடி ஆழம் வரை சென்றதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான காய்ப்பு மரங்கள்  பட்டு போய்விட்டன.கொள்ளிடம் ஆறு இரண்டுமுறை நீரின்றி வறண்டு மீன் வளமும் அழிந்துவிட்டது. இந்நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு காலப் கட்டத்தில் குவாரி மற்றும் மற்றொரு பம்ப் ஹவுஸ் அமைக்க அரசு மேற்கொண்ட முயற்சியை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் இரண்டாவது பம்ப் ஹவுஸ் அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது. 2019 ம் ஆண்டில் இங்கிருந்த மணல்குவாரியும் எடுக்கப்பட்டது.


கொள்ளிடம் ஆற்றில் இரண்டாவது பம்ப் ஹவுஸ் அமைப்பதை கைவிட கிராம மக்கள் கோரிக்கை
தற்போது 4 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு நல்ல மழை பெய்த காரணத்தால் ஆற்றில் தண்ணீர் உள்ளது. இதனால் மீண்டும் பம்ப் ஹவுஸ் அமைக்க போர்வெல் போட்டு வருகின்றனர். இந்த இரண்டாவது பம்ப் ஹவுஸ் அமைக்கப்பட்டு நீர் உறிஞ்சப்பட்டால் எங்கள் வளமான பகுதி நிச்சயம் பாதித்து தண்ணீர் தட்டுப்பாட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர். எனவே விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க இரண்டாவது கௌஸ் அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


கொள்ளிடம் ஆற்றில் இரண்டாவது பம்ப் ஹவுஸ் அமைப்பதை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

 இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்,கொள்ளிடம் ஆற்றில் ராட்ஷத பம்ப் அமைக்க கூடாது என பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அதன் குவாரி அமைக்க கூடாது எனவும் தெரிவித்தோம். இந்நிலையில், இரண்டாவதாக ராட்ஷத பம்ப் அமைத்து வருகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விடும். முதல் முறை போடப்பட்ட ராட்ஷத பம்பால் தற்போது நிலத்தடி நீர் குறைந்துள்ளது. இதனால் வருங்காலங்களில் விவசாயம் பாதிக்கும். ஆறுகளில் ராட்ஷத பம்ப் பொருத்தினால் சுமார் 10 கிலோ மீட்டர் துாரத்திற்கு வேறு எங்கும் பம்ப் அமைக்க கூடாது. ஆனால் விதியை மீறி அமைத்து வருகின்றார்கள். உடனடியாக பம்ப் அமைக்கும் பணியை நிறுத்தாவிட்டால், போராட்டம்செய்யப்படும் என்றனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai on 2026 Election: தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
Apple iPhone SE 4: இந்தியாவில் அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் SE 4: எவ்வளவு விலை, என்னென்ன அம்சங்கள்? – முழு விபரம்
Apple iPhone SE 4: இந்தியாவில் அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் SE 4: எவ்வளவு விலை, என்னென்ன அம்சங்கள்? – முழு விபரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai on 2026 Election: தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
Apple iPhone SE 4: இந்தியாவில் அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் SE 4: எவ்வளவு விலை, என்னென்ன அம்சங்கள்? – முழு விபரம்
Apple iPhone SE 4: இந்தியாவில் அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் SE 4: எவ்வளவு விலை, என்னென்ன அம்சங்கள்? – முழு விபரம்
அதிர்ச்சி வீடியோ! 270 கிலோ எடையை தூக்கும்போது மிஸ்! பவர் லிஃப்டிங் சாம்பியன் யாஷ்டிகா ஆச்சார்யா உயிரிழப்பு
அதிர்ச்சி வீடியோ! 270 கிலோ எடையை தூக்கும்போது மிஸ்! பவர் லிஃப்டிங் சாம்பியன் யாஷ்டிகா ஆச்சார்யா உயிரிழப்பு
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Ind vs Ban : பும்ரா இல்லாத இந்திய அணி! வெற்றியுடன் சாம்பியன்ஸ் டிராபி பயணத்தை தொடங்குமா? வங்கதேசத்துடன் மோதல்!
Ind vs Ban : பும்ரா இல்லாத இந்திய அணி! வெற்றியுடன் சாம்பியன்ஸ் டிராபி பயணத்தை தொடங்குமா? வங்கதேசத்துடன் மோதல்!
Today Power Shutdown Tamilnadu: தமிழகத்தில் இன்று ( 20.02.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்
Today Power Shutdown Tamilnadu: தமிழகத்தில் இன்று ( 20.02.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.