மேலும் அறிய

தஞ்சாவூர்: மூதாட்டியை ஏமாற்றி ஏடிஎமில் இருந்து 70,000 திருடிய 3 பேர் கைது-1.30 லட்சம் பறிமுதல்

’’மூவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தால், சந்தேகமடைந்த போலீசார்  முழுமையாக சோதனை செய்தனர்’’

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரை அடுத்த  வேப்பத்தூர், பாகவதபுரம் பூசாரி தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி ஆனந்தவல்லி (60) இவர் சத்துணவு உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். ஆனந்தவல்லி, திருவிடைமருதூர் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தபோது பணம் எடுக்க தெரியாததால் அருகில் இருந்த நபரிடம் பணம் எடுக்கச் சொல்லி ஏடிஎம் கொடுத்துள்ளார். அந்த நபர் பணம் எடுத்துக் கொடுப்பது போல் தனது ஏடிஎம் கார்டை மாற்றி, கொடுத்து விட்டு, ஆனந்தவல்லியின், ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 70 ஆயிரம் பணம் எடுத்து விட்டு, தலைமறைவாகிவிட்டார். பின்னர், தனது செல்லில், பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி வந்ததையடுத்து, வங்கியில் சென்று கேட்ட போது, கார்டை பயன்படுத்தி, பணம் எடுத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து ஆனந்தவல்லி, திருவிடைமருதுார் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.


தஞ்சாவூர்: மூதாட்டியை ஏமாற்றி ஏடிஎமில் இருந்து 70,000 திருடிய 3 பேர் கைது-1.30 லட்சம் பறிமுதல்  

பின்னர் போலீசார், சிசிடிவி கேமரா பதிவை கண்காணித்தனர். அதில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்தது. திருப்பனந்தாள், திருவிடைமருதூர் பல்வேறு முக்கிய சாலைகளில்  போலீசார்  சிசிடிவி பதிவுகள் கொண்டு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பாக, போலீசார், தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், சோழபுரம்  சோதனை சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர்கள் சுற்றிக்கொண்டிருப்பது போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.


தஞ்சாவூர்: மூதாட்டியை ஏமாற்றி ஏடிஎமில் இருந்து 70,000 திருடிய 3 பேர் கைது-1.30 லட்சம் பறிமுதல்

அதன் பேரில், அவர்களை பிடித்து விசாரித்த போது, ஆண்டிமடம், அய்யூரைச் சேர்ந்த மதியழகன் மகன் சிவானந்தம் (22),  தூத்துக்குடி, கருங்கடல் பகுதியை சேர்ந்த பிரபாகரன் மகன் பீட்டர் பிரபாகரன் (28),  கடலூர், ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் விக்னேஷ் (19) ஆகிய மூன்று பேர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடத்திய போது, மூவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தால், சந்தேகமடைந்த போலீசார்  முழுமையாக சோதனை செய்தனர். அவர்களிடம் 17 வங்கி ஏடிஎம் கார்டுகள்  மற்றும் 1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்ததுடன், 3 பேரையும் கைது செய்தனர். 


தஞ்சாவூர்: மூதாட்டியை ஏமாற்றி ஏடிஎமில் இருந்து 70,000 திருடிய 3 பேர் கைது-1.30 லட்சம் பறிமுதல்

அவர்கள் 3 பேரையும் விசாரணை செய்ததில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், சோழபுரம் பகுதிகளில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வருபவர்களிடம் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து ஏமாற்றி பணம் திருடியுள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் 3 பேரும், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், சோழபுரம் பகுதிகளில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வருபவர்களிடம் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து ஏமாற்றி பணம் திருடியுள்ளனர் என்பது தெரியவந்தது. திருவிடைமருதூர் உட்கோட்ட சோழபுரம் காவல் நிலைய போலீசார்  மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கும்பகோணம் குற்றவியல்நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget