மேலும் அறிய

தஞ்சாவூர்: மூதாட்டியை ஏமாற்றி ஏடிஎமில் இருந்து 70,000 திருடிய 3 பேர் கைது-1.30 லட்சம் பறிமுதல்

’’மூவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தால், சந்தேகமடைந்த போலீசார்  முழுமையாக சோதனை செய்தனர்’’

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரை அடுத்த  வேப்பத்தூர், பாகவதபுரம் பூசாரி தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி ஆனந்தவல்லி (60) இவர் சத்துணவு உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். ஆனந்தவல்லி, திருவிடைமருதூர் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தபோது பணம் எடுக்க தெரியாததால் அருகில் இருந்த நபரிடம் பணம் எடுக்கச் சொல்லி ஏடிஎம் கொடுத்துள்ளார். அந்த நபர் பணம் எடுத்துக் கொடுப்பது போல் தனது ஏடிஎம் கார்டை மாற்றி, கொடுத்து விட்டு, ஆனந்தவல்லியின், ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 70 ஆயிரம் பணம் எடுத்து விட்டு, தலைமறைவாகிவிட்டார். பின்னர், தனது செல்லில், பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி வந்ததையடுத்து, வங்கியில் சென்று கேட்ட போது, கார்டை பயன்படுத்தி, பணம் எடுத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து ஆனந்தவல்லி, திருவிடைமருதுார் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.


தஞ்சாவூர்: மூதாட்டியை ஏமாற்றி ஏடிஎமில் இருந்து 70,000 திருடிய 3 பேர் கைது-1.30 லட்சம் பறிமுதல்  

பின்னர் போலீசார், சிசிடிவி கேமரா பதிவை கண்காணித்தனர். அதில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்தது. திருப்பனந்தாள், திருவிடைமருதூர் பல்வேறு முக்கிய சாலைகளில்  போலீசார்  சிசிடிவி பதிவுகள் கொண்டு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பாக, போலீசார், தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், சோழபுரம்  சோதனை சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர்கள் சுற்றிக்கொண்டிருப்பது போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.


தஞ்சாவூர்: மூதாட்டியை ஏமாற்றி ஏடிஎமில் இருந்து 70,000 திருடிய 3 பேர் கைது-1.30 லட்சம் பறிமுதல்

அதன் பேரில், அவர்களை பிடித்து விசாரித்த போது, ஆண்டிமடம், அய்யூரைச் சேர்ந்த மதியழகன் மகன் சிவானந்தம் (22),  தூத்துக்குடி, கருங்கடல் பகுதியை சேர்ந்த பிரபாகரன் மகன் பீட்டர் பிரபாகரன் (28),  கடலூர், ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் விக்னேஷ் (19) ஆகிய மூன்று பேர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடத்திய போது, மூவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தால், சந்தேகமடைந்த போலீசார்  முழுமையாக சோதனை செய்தனர். அவர்களிடம் 17 வங்கி ஏடிஎம் கார்டுகள்  மற்றும் 1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்ததுடன், 3 பேரையும் கைது செய்தனர். 


தஞ்சாவூர்: மூதாட்டியை ஏமாற்றி ஏடிஎமில் இருந்து 70,000 திருடிய 3 பேர் கைது-1.30 லட்சம் பறிமுதல்

அவர்கள் 3 பேரையும் விசாரணை செய்ததில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், சோழபுரம் பகுதிகளில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வருபவர்களிடம் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து ஏமாற்றி பணம் திருடியுள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் 3 பேரும், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், சோழபுரம் பகுதிகளில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வருபவர்களிடம் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து ஏமாற்றி பணம் திருடியுள்ளனர் என்பது தெரியவந்தது. திருவிடைமருதூர் உட்கோட்ட சோழபுரம் காவல் நிலைய போலீசார்  மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கும்பகோணம் குற்றவியல்நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget