மேலும் அறிய

தஞ்சாவூர் : ”மாஸ்க் இல்லையா? உள்ள வராதே!” : கொரோனா விழிப்புணர்வு தரும் தலையாட்டி பொம்மைகள்..

தலையாட்டி பொம்மைக்கு பெயர் பெற்ற ஊர் தஞ்சாவூர். இந்த மண்ணின் மகத்துவத்துக்கு ஏற்ற வகையில் இந்த பொம்மை இங்கு மட்டுமே தயாரிக்கப்பட்டு வருவதால், இதற்கு புவிசார் குறியீடும் பெறப்பட்டு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. வீடுகள், நிறுவனங்களில் வரவேற்பு அரைகளில் அலங்கரித்துக் கொண்டிருந்த "அரை அடி உயரம்" கொண்ட தலையாட்டி பொம்மைகளை 10 அடி உயரத்துக்கு வடிவமைத்து அதனை தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் வைத்து வரவேற்கும் பொம்மைகளாக மாற்றியுள்ளது மாவட்ட நிர்வாகம். 

தலையாட்டி பொம்மைக்கு பெயர் பெற்ற ஊர் தஞ்சாவூர். இந்த மண்ணின் மகத்துவத்துக்கு ஏற்ற வகையில் இந்த பொம்மை இங்கு மட்டுமே தயாரிக்கப்பட்டு வருவதால், இதற்கு புவிசார் குறியீடும் பெறப்பட்டு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. வீடுகள், நிறுவனங்களில் வரவேற்பு அறைகளில் அலங்கரித்துக் கொண்டிருந்த "அரை அடி உயரம்" கொண்ட தலையாட்டி பொம்மைகளை 10 அடி உயரத்துக்கு வடிவமைத்து அதனை தஞ்சாவூர் மாவடத்தின் முக்கிய சாலைகளில் வைத்து வரவேற்கும் பொம்மைகளாக மாற்றியுள்ளது மாவட்ட நிர்வாகம். 
 
இந்த பொம்மைகளை சுவாமிமலையைச் சேர்ந்த சிற்ப கலைஞர் ஒருவர் செய்துவழங்கி வருகிறார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதலில் இந்த பெரிய அளவு தலையாட்டி பொம்மை வைக்கப்பட்டுள்ளதை பார்த்த பல்வேறு தனியார் நிறுவனங்களும், இதே போன்று தங்களது நிறுவனத்தில் வாயில் முன் வைக்க விரும்பி அதற்கான ஆர்டரையும் கொடுத்து வருகின்றனர். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையில் ராஜா, ராணி என இரண்டு உள்ளது. இந்த இரண்டு பொம்மைகளும் தற்போது பிரமாண்டமாக மழை, வெயில் அடித்தாலும், வர்ணம் மாறாமல் இருக்குமாறு பைபரால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
 
கொரோனா விழிப்புணர்வு: மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இந்த பெரியஅளவு தலையாட்டி பொம்மைகளில் " நோ மாஸ்க், நோ என்ட்ரி" என வாசகத்தை மாவட்ட நிர்வாகம் அணிவித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து சிற்ப கலைஞர் துரை.ராஜாபீர்பால் கூறுகையில், நான் திருச்சியை பூர்வீகமாக கொண்டாலும், கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியில் சிற்ப துறையில் படித்துவிட்டு சுவாமிமலையில் வசித்து வருகிறேன். சிலைகள் செய்வது, பெரிய அளவிலான பொம்மைகள் செய்து வருகிறேன். மகாமகத் திருவிழாவின் போது கும்பகோணம் அரசலாற்றின் பாலக்கரையில் சாலையின் இருபுறமும் யானை பொம்மைகளை தயாரித்து நிறுவினேன்.

தஞ்சாவூர் : ”மாஸ்க் இல்லையா? உள்ள வராதே!” : கொரோனா விழிப்புணர்வு தரும் தலையாட்டி பொம்மைகள்..
அதே போல் தஞ்சாவூர் அரண்மனை முகப்பு, தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் யானை பொம்மைகளை தயாரித்து அமைத்துள்ளேன். தஞ்சாவூருக்கென்று பெயர் பெற்று விளங்கும் தலையாட்டி பொம்மைகளை பலரது வீட்டுக்குள்தான் இருக்கிறது. இதன் பாரம்பரியம், கைவினையின் நேர்த்தியை, ஏன் பொதுமக்கள் எல்லோரது பார்வையில் படும்படி பொது இடத்தில் வைக்கக்கூடாது என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. இதை தஞ்சாவூர் மாவட்டத்தின் முந்தைய ஆட்சியராக இருந்த கோவிந்தராவிடம் ஒருமுறை கூறியபோது, முதலில் ஒரு பொம்மையை வடிவமைத்து தாருங்கள் பார்ப்போம் என்றர், உடனடியாக ஒரு மாத காலத்தில் 10 அடி உயரத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தயாரித்து கொடுத்தேன். 
 
இதை பார்த்து நன்றாக இருக்கு எனக் கூறியதும், மாவட்டத்தின், மாநகரின் வரவேற்பு எல்லைகள், ரவுண்டானாவில் வைக்க 10 தலையாட்டி பொம்மைகள் செய்து கொடுத்துள்ளேன்.தற்போது இந்த பொம்மைகளை பார்த்துவிட்டு பலரும் பெட்ரோல் பங்க் மற்றும் தனியார் நிறுவனங்களில் வரவேற்பு பொம்மையாக வைக்க விரும்பி அணுகியுள்ளனர். வரவேற்பு அறையில் அரை அடியில் முடங்கி கிடந்த இந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை தற்போது, பிரமாண்டமாய் தயாரித்து தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்கு உயிர் கொடுத்து வருகிறேன் என்றார். ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒவ்வொரு அடையாளம் அதன் பெருமையை உணர்த்தும் வகையில் இருக்கும். அதே போன்று தஞ்சாவூர் மாவட்டம் என்றாலே தஞ்சை பெரிய கோயில், அதற்கு அடுத்தாற்போல் தலையாட்டி பொம்மைதான். விழிப்புணர்வுக்காக பொம்மைகளை பயன்படுத்துவதை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
Embed widget