மேலும் அறிய

தஞ்சாவூர் : ”மாஸ்க் இல்லையா? உள்ள வராதே!” : கொரோனா விழிப்புணர்வு தரும் தலையாட்டி பொம்மைகள்..

தலையாட்டி பொம்மைக்கு பெயர் பெற்ற ஊர் தஞ்சாவூர். இந்த மண்ணின் மகத்துவத்துக்கு ஏற்ற வகையில் இந்த பொம்மை இங்கு மட்டுமே தயாரிக்கப்பட்டு வருவதால், இதற்கு புவிசார் குறியீடும் பெறப்பட்டு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. வீடுகள், நிறுவனங்களில் வரவேற்பு அரைகளில் அலங்கரித்துக் கொண்டிருந்த "அரை அடி உயரம்" கொண்ட தலையாட்டி பொம்மைகளை 10 அடி உயரத்துக்கு வடிவமைத்து அதனை தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் வைத்து வரவேற்கும் பொம்மைகளாக மாற்றியுள்ளது மாவட்ட நிர்வாகம். 

தலையாட்டி பொம்மைக்கு பெயர் பெற்ற ஊர் தஞ்சாவூர். இந்த மண்ணின் மகத்துவத்துக்கு ஏற்ற வகையில் இந்த பொம்மை இங்கு மட்டுமே தயாரிக்கப்பட்டு வருவதால், இதற்கு புவிசார் குறியீடும் பெறப்பட்டு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. வீடுகள், நிறுவனங்களில் வரவேற்பு அறைகளில் அலங்கரித்துக் கொண்டிருந்த "அரை அடி உயரம்" கொண்ட தலையாட்டி பொம்மைகளை 10 அடி உயரத்துக்கு வடிவமைத்து அதனை தஞ்சாவூர் மாவடத்தின் முக்கிய சாலைகளில் வைத்து வரவேற்கும் பொம்மைகளாக மாற்றியுள்ளது மாவட்ட நிர்வாகம். 
 
இந்த பொம்மைகளை சுவாமிமலையைச் சேர்ந்த சிற்ப கலைஞர் ஒருவர் செய்துவழங்கி வருகிறார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதலில் இந்த பெரிய அளவு தலையாட்டி பொம்மை வைக்கப்பட்டுள்ளதை பார்த்த பல்வேறு தனியார் நிறுவனங்களும், இதே போன்று தங்களது நிறுவனத்தில் வாயில் முன் வைக்க விரும்பி அதற்கான ஆர்டரையும் கொடுத்து வருகின்றனர். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையில் ராஜா, ராணி என இரண்டு உள்ளது. இந்த இரண்டு பொம்மைகளும் தற்போது பிரமாண்டமாக மழை, வெயில் அடித்தாலும், வர்ணம் மாறாமல் இருக்குமாறு பைபரால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
 
கொரோனா விழிப்புணர்வு: மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இந்த பெரியஅளவு தலையாட்டி பொம்மைகளில் " நோ மாஸ்க், நோ என்ட்ரி" என வாசகத்தை மாவட்ட நிர்வாகம் அணிவித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து சிற்ப கலைஞர் துரை.ராஜாபீர்பால் கூறுகையில், நான் திருச்சியை பூர்வீகமாக கொண்டாலும், கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியில் சிற்ப துறையில் படித்துவிட்டு சுவாமிமலையில் வசித்து வருகிறேன். சிலைகள் செய்வது, பெரிய அளவிலான பொம்மைகள் செய்து வருகிறேன். மகாமகத் திருவிழாவின் போது கும்பகோணம் அரசலாற்றின் பாலக்கரையில் சாலையின் இருபுறமும் யானை பொம்மைகளை தயாரித்து நிறுவினேன்.

தஞ்சாவூர் : ”மாஸ்க் இல்லையா? உள்ள வராதே!” : கொரோனா விழிப்புணர்வு தரும் தலையாட்டி பொம்மைகள்..
அதே போல் தஞ்சாவூர் அரண்மனை முகப்பு, தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் யானை பொம்மைகளை தயாரித்து அமைத்துள்ளேன். தஞ்சாவூருக்கென்று பெயர் பெற்று விளங்கும் தலையாட்டி பொம்மைகளை பலரது வீட்டுக்குள்தான் இருக்கிறது. இதன் பாரம்பரியம், கைவினையின் நேர்த்தியை, ஏன் பொதுமக்கள் எல்லோரது பார்வையில் படும்படி பொது இடத்தில் வைக்கக்கூடாது என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. இதை தஞ்சாவூர் மாவட்டத்தின் முந்தைய ஆட்சியராக இருந்த கோவிந்தராவிடம் ஒருமுறை கூறியபோது, முதலில் ஒரு பொம்மையை வடிவமைத்து தாருங்கள் பார்ப்போம் என்றர், உடனடியாக ஒரு மாத காலத்தில் 10 அடி உயரத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தயாரித்து கொடுத்தேன். 
 
இதை பார்த்து நன்றாக இருக்கு எனக் கூறியதும், மாவட்டத்தின், மாநகரின் வரவேற்பு எல்லைகள், ரவுண்டானாவில் வைக்க 10 தலையாட்டி பொம்மைகள் செய்து கொடுத்துள்ளேன்.தற்போது இந்த பொம்மைகளை பார்த்துவிட்டு பலரும் பெட்ரோல் பங்க் மற்றும் தனியார் நிறுவனங்களில் வரவேற்பு பொம்மையாக வைக்க விரும்பி அணுகியுள்ளனர். வரவேற்பு அறையில் அரை அடியில் முடங்கி கிடந்த இந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை தற்போது, பிரமாண்டமாய் தயாரித்து தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்கு உயிர் கொடுத்து வருகிறேன் என்றார். ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒவ்வொரு அடையாளம் அதன் பெருமையை உணர்த்தும் வகையில் இருக்கும். அதே போன்று தஞ்சாவூர் மாவட்டம் என்றாலே தஞ்சை பெரிய கோயில், அதற்கு அடுத்தாற்போல் தலையாட்டி பொம்மைதான். விழிப்புணர்வுக்காக பொம்மைகளை பயன்படுத்துவதை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget