மேலும் அறிய

Tanjore Big temple: வாட்டி வதைக்கும் வெயில்... தஞ்சை பெரியகோவிலில் புல்வெளியை பாதுகாக்க தண்ணீர் தெளிக்கும் பணி

தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் உள்ள புல்களை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க தண்ணீர் தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்: அக்னி நட்சத்திரம் முடிந்த பல நாட்கள் கடந்த நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையாததால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் உள்ள புல்களை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க தண்ணீர் தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அக்னி நட்சத்திரம் முடிந்தும் தஞ்சையில் அனல் காற்றுடன் மக்களை சுட்டெரித்து வரும் வெயில் 100 டிகிரியை கடந்து கொளுத்தி வருகிறது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த மே மாதம் 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி நிறைவடைத்தது. இந்த 25 நாட்களும் கத்திரி வெயில் காலத்தில் பொதுமக்கள் வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு சூரியகதிர்கள் சுட்டெரித்தது.

பொதுவாகவே அக்னி நட்சத்திர காலங்களில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும். அக்னி நட்சத்திரம் முடிந்ததும் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் முடித்த பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்தபடி இல்லை.

இந் நிலையில் தஞ்சையில் கடந்த 2 நாட்களாகவே வெயில் 100 டிகிரியை தாண்டி மக்களை வாட்டி வதைத்தது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அனல் காற்றுடன் வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சாலையில் நடந்து சென்றவர்கள் பலர் குடையை பிடித்தபடி நடந்து சென்றனர். அதேநேரத்தில் சில ஆண்கள் தலையில் துண்டை போர்த்தியபடியும், பெண்கள் சேலை முந்தானையாலும், துண்டாலும் தலையை மூடியபடி சென்றனர்.

அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைத்து வருகின்றனர். மேலும் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வெயிலின் பிடியில் சிக்கி தவித்தனர். கோவிலுக்கு வந்த பெரும்பாலானவர்கள் நிழல் இருக்கும் இடத்தில் அமர்த்து இளைப்பாறினர். வெயிலினால் கோவில் வளாகத்தில் உள்ள புற்களை பாதுகாக்க தண்ணீர் தெளிக்கும் பணியும் நடந்தது.

கொளுத்தும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் பலர் தர்பூசணி பழம்,  நுங்கு வாங்கி சாப்பிட்டனர். மேலும் பழக்கடைகளில் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதேபோல் குளிர்ச்சி தரக்கூடிய, தாகத்தை தணிக்க கூடிய இளநீர், பழச்சாறு வகைகள், கரும்பு சாறு உள்ளிட்ட ஜூஸ் வகைகளையும் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சாப்பிட்டனர்.

கடந்த 16ம் தேதி கல்லணை திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் தண்ணீர் வர ஆரம்பித்தால் வெயிலின் தாக்கம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் தண்ணீர் வரும் நிலையில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து வெப்பம் தணிந்து விடும் என்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram News | செம்மண் குவாரி ஊழல்அத்துமீறிய பாமக நிர்வாகி கண்டுகொள்ளாத கனிமவளத்துறைAnnamalai SP Velumani | அ.மலைக்கு ராஜ மரியாதை!மீண்டும் துளிர்க்கும் கூட்டணி?கடும் அப்செட்டில் EPSNainar Nagendran in TVK: TVK - வில் நயினார் - குஷ்பூ?தட்டித்தூக்கிய தவெக விஜய்! அப்செட்டில் பாஜக!Dad Son Ear Piercing Ceremony : ’’அப்பாவுக்கும் காது குத்தனும்’’அடம்பிடித்த சிறுவன்ஆசையை நிறைவேற்றிய தந்தை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? -  திருமாவளவன் சொல்வது என்ன?
திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? - திருமாவளவன் சொல்வது என்ன?
தாம்பரத்திற்கு நாளை முதல் பஸ் இல்லை.. அப்செட்டில் தென் மாவட்ட மக்கள்!
தாம்பரத்திற்கு நாளை முதல் பஸ் இல்லை.. அப்செட்டில் தென் மாவட்ட மக்கள்!
அமைச்சர் சொல்வது சிரிப்பாக உள்ளது; இது கூடவா தெரியாது? ஸ்டாலின் கேட்ட அதே கேள்விதான்: அண்ணாமலை ரிப்ளை!
அமைச்சர் சொல்வது சிரிப்பாக உள்ளது; இது கூடவா தெரியாது? ஸ்டாலின் கேட்ட அதே கேள்விதான்: அண்ணாமலை ரிப்ளை!
TN Rain: இன்று இரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: லிஸ்ட் இதோ.!
Embed widget