மேலும் அறிய

Tanjore Big temple: வாட்டி வதைக்கும் வெயில்... தஞ்சை பெரியகோவிலில் புல்வெளியை பாதுகாக்க தண்ணீர் தெளிக்கும் பணி

தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் உள்ள புல்களை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க தண்ணீர் தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்: அக்னி நட்சத்திரம் முடிந்த பல நாட்கள் கடந்த நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையாததால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் உள்ள புல்களை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க தண்ணீர் தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அக்னி நட்சத்திரம் முடிந்தும் தஞ்சையில் அனல் காற்றுடன் மக்களை சுட்டெரித்து வரும் வெயில் 100 டிகிரியை கடந்து கொளுத்தி வருகிறது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த மே மாதம் 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி நிறைவடைத்தது. இந்த 25 நாட்களும் கத்திரி வெயில் காலத்தில் பொதுமக்கள் வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு சூரியகதிர்கள் சுட்டெரித்தது.

பொதுவாகவே அக்னி நட்சத்திர காலங்களில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும். அக்னி நட்சத்திரம் முடிந்ததும் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் முடித்த பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்தபடி இல்லை.

இந் நிலையில் தஞ்சையில் கடந்த 2 நாட்களாகவே வெயில் 100 டிகிரியை தாண்டி மக்களை வாட்டி வதைத்தது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அனல் காற்றுடன் வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சாலையில் நடந்து சென்றவர்கள் பலர் குடையை பிடித்தபடி நடந்து சென்றனர். அதேநேரத்தில் சில ஆண்கள் தலையில் துண்டை போர்த்தியபடியும், பெண்கள் சேலை முந்தானையாலும், துண்டாலும் தலையை மூடியபடி சென்றனர்.

அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைத்து வருகின்றனர். மேலும் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வெயிலின் பிடியில் சிக்கி தவித்தனர். கோவிலுக்கு வந்த பெரும்பாலானவர்கள் நிழல் இருக்கும் இடத்தில் அமர்த்து இளைப்பாறினர். வெயிலினால் கோவில் வளாகத்தில் உள்ள புற்களை பாதுகாக்க தண்ணீர் தெளிக்கும் பணியும் நடந்தது.

கொளுத்தும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் பலர் தர்பூசணி பழம்,  நுங்கு வாங்கி சாப்பிட்டனர். மேலும் பழக்கடைகளில் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதேபோல் குளிர்ச்சி தரக்கூடிய, தாகத்தை தணிக்க கூடிய இளநீர், பழச்சாறு வகைகள், கரும்பு சாறு உள்ளிட்ட ஜூஸ் வகைகளையும் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சாப்பிட்டனர்.

கடந்த 16ம் தேதி கல்லணை திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் தண்ணீர் வர ஆரம்பித்தால் வெயிலின் தாக்கம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் தண்ணீர் வரும் நிலையில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து வெப்பம் தணிந்து விடும் என்கின்றனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
Gautam Gambhir:
Gautam Gambhir: "நான் காரணமில்லை!” டெஸ்ட் அணியில் இடம்பெறாத ஸ்ரேயாஸ் .. அஜித் அகர்கரை மறைமுகமாக கைகாட்டிய கம்பீர்
ஆபத்தில் மகன், நெஞ்சை தொற்றிய பயம், திடீரென வந்த இருட்டு - கணவனை காப்பாற்றாத மனைவியின் பக்தி
ஆபத்தில் மகன், நெஞ்சை தொற்றிய பயம், திடீரென வந்த இருட்டு - கணவனை காப்பாற்றாத மனைவியின் பக்தி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
Gautam Gambhir:
Gautam Gambhir: "நான் காரணமில்லை!” டெஸ்ட் அணியில் இடம்பெறாத ஸ்ரேயாஸ் .. அஜித் அகர்கரை மறைமுகமாக கைகாட்டிய கம்பீர்
ஆபத்தில் மகன், நெஞ்சை தொற்றிய பயம், திடீரென வந்த இருட்டு - கணவனை காப்பாற்றாத மனைவியின் பக்தி
ஆபத்தில் மகன், நெஞ்சை தொற்றிய பயம், திடீரென வந்த இருட்டு - கணவனை காப்பாற்றாத மனைவியின் பக்தி
TN weather Reoprt:  5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் கனமழை? வானிலை மையம் எச்சரிக்கை
TN weather Reoprt: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் கனமழை? வானிலை மையம் எச்சரிக்கை
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Embed widget