மேலும் அறிய

சொத்துக்காக வீட்டை விட்டு அடித்து துரத்திய மகன் - தற்கொலைக்கு அனுமதி கேட்டு பெற்றோர் மனு

சொத்துக்காக மகன் வீட்டை விட்டு அடித்து துரத்தியதால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு பெற்றோர் மனு.

தஞ்சாவூர்: சொத்துக்களை பறித்து கொள்வதற்காக துன்புறுத்தி வீட்டை விட்டு மகன் வெளியேற்றியதால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கணவன், மனைவி இருவரும் தஞ்சை கோட்டாட்சியர் (பொ) பழனிவேலிடம் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டம், கள்ளப்பெரம்பூர், சேத்தி கிராமம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (61). ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர். இவரது மனைவி மேரி லலிதா (51). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

இந்நிலையில் சந்திரசேகரன் மற்றும் அவரது மனைவி மேரி லலிதா ஆகியோர் தஞ்சாவூர் கோட்டாட்சியர் (பொ) பழனிவேலுவிடம் நேற்று மனுவை அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: எனது மகளின் கணவர் இறந்து விட்டதால், குழந்தையுடன் எங்களுடன் வசித்து வந்தார்.

எனது மகனுக்கு திருமணம் முடிந்து சில நாட்களில் மாமனார் வீட்டோடு சென்று விட்டார். தற்போது எனது கணவர் சந்திரசேகரன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வரும் பென்ஷன் தொகையை வைத்துதான் வாழ்ந்து வருகிறோம்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் எங்களின் மகன் என்னையும், எனது கணவர் மற்றும் மகள், அவரது குழந்தைகளைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து துன்புறுத்தினார். மேலும் எங்களை வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டை பூட்டி விட்டார். இதனால் எனது மகள் குழந்தையுடன் உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டார். பின்னர் சில நாட்களுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் அந்த வீட்டிற்கு சென்றாம். இதனையறிந்த எனது மகன் மற்றும் மருமகள், அவரது உறவினர்கள் அங்கு வந்து எங்களை வீட்டை விட்டு வெளியேற்றி, வீட்டினை பூட்டி விட்டு, சொத்துக்களை எங்களது பெயரில் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினர். இதனால் பயந்து போய் தற்போது சமயபுரம் மற்றும் மாரியம்மன் கோயிலில் கடந்த ஒன்றரை மாதங்களாக வசித்து வருகின்றோம்.

தற்போது இருவருக்கும் உடல் நிலை மிகவும் மோசமாகி வருகிறது. எனவே என் மகனிடம் இருந்து எங்களின் வீடு, ஆவணங்கள், தங்க நகைகள், பணம் ஆகியவற்றை மீட்டு தர வேண்டும் என முதல்வரின் தனிப்பிரிவு உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. மருமகளின் உறவினர், காவல் துறையில் இருப்பதால், எங்கள் மீது பொய் புகார் தந்து எனது மகளின் மீது விபச்சார வழக்குப் பதிந்து விடுவதாக மிரட்டுகின்றனர்.

எனவே, எங்களுக்கு அந்த வீடு மற்றும் எனது மகன் எடுத்துச் சென்ற அனைத்து பொருட்களை மீட்டுத் தர வேண்டும் அல்லது நாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget