மேலும் அறிய

சொத்துக்காக வீட்டை விட்டு அடித்து துரத்திய மகன் - தற்கொலைக்கு அனுமதி கேட்டு பெற்றோர் மனு

சொத்துக்காக மகன் வீட்டை விட்டு அடித்து துரத்தியதால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு பெற்றோர் மனு.

தஞ்சாவூர்: சொத்துக்களை பறித்து கொள்வதற்காக துன்புறுத்தி வீட்டை விட்டு மகன் வெளியேற்றியதால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கணவன், மனைவி இருவரும் தஞ்சை கோட்டாட்சியர் (பொ) பழனிவேலிடம் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டம், கள்ளப்பெரம்பூர், சேத்தி கிராமம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (61). ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர். இவரது மனைவி மேரி லலிதா (51). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

இந்நிலையில் சந்திரசேகரன் மற்றும் அவரது மனைவி மேரி லலிதா ஆகியோர் தஞ்சாவூர் கோட்டாட்சியர் (பொ) பழனிவேலுவிடம் நேற்று மனுவை அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: எனது மகளின் கணவர் இறந்து விட்டதால், குழந்தையுடன் எங்களுடன் வசித்து வந்தார்.

எனது மகனுக்கு திருமணம் முடிந்து சில நாட்களில் மாமனார் வீட்டோடு சென்று விட்டார். தற்போது எனது கணவர் சந்திரசேகரன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வரும் பென்ஷன் தொகையை வைத்துதான் வாழ்ந்து வருகிறோம்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் எங்களின் மகன் என்னையும், எனது கணவர் மற்றும் மகள், அவரது குழந்தைகளைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து துன்புறுத்தினார். மேலும் எங்களை வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டை பூட்டி விட்டார். இதனால் எனது மகள் குழந்தையுடன் உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டார். பின்னர் சில நாட்களுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் அந்த வீட்டிற்கு சென்றாம். இதனையறிந்த எனது மகன் மற்றும் மருமகள், அவரது உறவினர்கள் அங்கு வந்து எங்களை வீட்டை விட்டு வெளியேற்றி, வீட்டினை பூட்டி விட்டு, சொத்துக்களை எங்களது பெயரில் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினர். இதனால் பயந்து போய் தற்போது சமயபுரம் மற்றும் மாரியம்மன் கோயிலில் கடந்த ஒன்றரை மாதங்களாக வசித்து வருகின்றோம்.

தற்போது இருவருக்கும் உடல் நிலை மிகவும் மோசமாகி வருகிறது. எனவே என் மகனிடம் இருந்து எங்களின் வீடு, ஆவணங்கள், தங்க நகைகள், பணம் ஆகியவற்றை மீட்டு தர வேண்டும் என முதல்வரின் தனிப்பிரிவு உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. மருமகளின் உறவினர், காவல் துறையில் இருப்பதால், எங்கள் மீது பொய் புகார் தந்து எனது மகளின் மீது விபச்சார வழக்குப் பதிந்து விடுவதாக மிரட்டுகின்றனர்.

எனவே, எங்களுக்கு அந்த வீடு மற்றும் எனது மகன் எடுத்துச் சென்ற அனைத்து பொருட்களை மீட்டுத் தர வேண்டும் அல்லது நாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget