மேலும் அறிய

சொத்துக்காக வீட்டை விட்டு அடித்து துரத்திய மகன் - தற்கொலைக்கு அனுமதி கேட்டு பெற்றோர் மனு

சொத்துக்காக மகன் வீட்டை விட்டு அடித்து துரத்தியதால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு பெற்றோர் மனு.

தஞ்சாவூர்: சொத்துக்களை பறித்து கொள்வதற்காக துன்புறுத்தி வீட்டை விட்டு மகன் வெளியேற்றியதால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கணவன், மனைவி இருவரும் தஞ்சை கோட்டாட்சியர் (பொ) பழனிவேலிடம் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டம், கள்ளப்பெரம்பூர், சேத்தி கிராமம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (61). ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர். இவரது மனைவி மேரி லலிதா (51). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

இந்நிலையில் சந்திரசேகரன் மற்றும் அவரது மனைவி மேரி லலிதா ஆகியோர் தஞ்சாவூர் கோட்டாட்சியர் (பொ) பழனிவேலுவிடம் நேற்று மனுவை அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: எனது மகளின் கணவர் இறந்து விட்டதால், குழந்தையுடன் எங்களுடன் வசித்து வந்தார்.

எனது மகனுக்கு திருமணம் முடிந்து சில நாட்களில் மாமனார் வீட்டோடு சென்று விட்டார். தற்போது எனது கணவர் சந்திரசேகரன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வரும் பென்ஷன் தொகையை வைத்துதான் வாழ்ந்து வருகிறோம்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் எங்களின் மகன் என்னையும், எனது கணவர் மற்றும் மகள், அவரது குழந்தைகளைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து துன்புறுத்தினார். மேலும் எங்களை வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டை பூட்டி விட்டார். இதனால் எனது மகள் குழந்தையுடன் உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டார். பின்னர் சில நாட்களுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் அந்த வீட்டிற்கு சென்றாம். இதனையறிந்த எனது மகன் மற்றும் மருமகள், அவரது உறவினர்கள் அங்கு வந்து எங்களை வீட்டை விட்டு வெளியேற்றி, வீட்டினை பூட்டி விட்டு, சொத்துக்களை எங்களது பெயரில் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினர். இதனால் பயந்து போய் தற்போது சமயபுரம் மற்றும் மாரியம்மன் கோயிலில் கடந்த ஒன்றரை மாதங்களாக வசித்து வருகின்றோம்.

தற்போது இருவருக்கும் உடல் நிலை மிகவும் மோசமாகி வருகிறது. எனவே என் மகனிடம் இருந்து எங்களின் வீடு, ஆவணங்கள், தங்க நகைகள், பணம் ஆகியவற்றை மீட்டு தர வேண்டும் என முதல்வரின் தனிப்பிரிவு உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. மருமகளின் உறவினர், காவல் துறையில் இருப்பதால், எங்கள் மீது பொய் புகார் தந்து எனது மகளின் மீது விபச்சார வழக்குப் பதிந்து விடுவதாக மிரட்டுகின்றனர்.

எனவே, எங்களுக்கு அந்த வீடு மற்றும் எனது மகன் எடுத்துச் சென்ற அனைத்து பொருட்களை மீட்டுத் தர வேண்டும் அல்லது நாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget