மேலும் அறிய

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு - பல்டி அடித்து போராட்டம் நடத்திய விவசாயிகள்...!

’’காப்பீட்டு தொகையை உடனடியாக கொடுக்க கோரிக்கை’’

கொரோனா காலகட்டத்திற்கு தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர். அப்போது, தமிழக விவசாயிகள் சங்க சார்பில், மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில், பிரதம மந்திரி பயிரின் 2020-21 ஆண்டிற்கான ரபி பருவ நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு, அண்டா, குண்டா பாத்திரங்களை அடகு வைத்து, குறிப்பிட்ட 2020 டிசம்பர் மாதம் 15  தேதிக்குள் செலுத்தி விட்டோம். பிரதமரின் பயிர் காப்பீடு இப்கோ, டோக்கியோ நிறுவனம் ஏமாற்றி விட்டதா என சந்தேகம் எழுகிறது. வாய்கட்டி, முட்டி போட்டு கேட்டாலும் கிடைக்கவில்லை. கூட்டுறவு கடனாக  அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 40 ஆயிரம் வழங்க வேண்டும், நெல் குவிண்டாலுக்கு  2500 ஆகவும், கரும்பு டன் ஒன்றிற்கு  4 ஆயிரம் அறிவிக்க வேண்டும். 


விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு - பல்டி அடித்து போராட்டம் நடத்திய விவசாயிகள்...!

தஞ்சாவூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். வேளாண் விளை நிலமான நஞ்செய் நிலத்தை கையகப்படுத்தி தனியார் வசம் ஒப்படைக்ககூடாது, நஞ்செய் நிலத்திற்கு மனைப்பட்டா வழங்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசுவதற்காக விவசாயி குறை தீர்க்கும் கூட்டத்திற்கு தமிழக விவசாய சங்கத்தை சேர்ந்த 25க்கும்  மேற்பட்டோர் கூட்டரங்கிற்குள் சென்றனர். ஆனால் அமர்வதற்கு இருக்கை இல்லாமல், இடப்பற்றாகுறையாக இருந்ததால், விவசாய சங்கத்தினர் வெளிநடப்பு செய்தனர். காப்பீடு நிலுவை தொகையினை வழங்க வேண்டும், அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளும் வகையில், பெரிய கூட்டரங்கில் குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள், குட்டிகரணம் போட்டு நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு - பல்டி அடித்து போராட்டம் நடத்திய விவசாயிகள்...!

இது குறித்து தமிழக விவசாய சங்க மாநில துணை தலைவர் சுகமாறன் கூறகையில்,

விவசாய குறை தீர்க்கும் கூட்டத்தில் போதுமான இடவசதிகள் இல்லாமல் உள்ளது. இதே போல் மாவட்ட கலெக்டர், நிருபர்களை உள்ளே அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது. நகைகளை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும், விவசாயம் செய்தும், காப்பீடு செலுத்தி 9 மாதங்களாக  இன்சூரன்ஸ் பணம் வழங்காமல் உள்ளனர். இதனை கண்டித்து பல்வேறு நுாதன போராட்டம் செய்து, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நடத்தினாலும், விவசாயிகளை பற்றி கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். எனவே விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்ட நாளில், கோரிக்கை நிறைவேற்றி தர வேண்டும் என குறை தீர்க்கும் கூட்டத்திலிருந்து கண்டன கோஷங்களிட்டு,  வெளிநடப்பு செய்தோம். மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் முன் ஆர்ப்பாட்டம் செய்து, குட்டி கரணம் போட்டு, நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

தலைப்பு செய்திகள்

ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் தந்த சோகம்: சென்டர் மீடியனில் மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் தந்த சோகம்: சென்டர் மீடியனில் மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
விழி கவரும் இயற்கை விசித்திரம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் 'கூந்தல் பனை'!
விழி கவரும் இயற்கை விசித்திரம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் 'கூந்தல் பனை'!
எங்கள் உயிரை கூட விடுவோம்...மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்
எங்கள் உயிரை கூட விடுவோம்...மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்
தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்
தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்

வீடியோ

Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget