மேலும் அறிய

தஞ்சையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மண்சட்டி ஏந்தி யாசகம் பெறும் நூதன போராட்டம்

நெல் கொள்முதல் நிலைய பருவகால பணியாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்யக்கோரி மண் சட்டி ஏந்தி யாசகம் பெறும் நூதன போராட்டம் தஞ்சையில் நடந்தது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கையில் மண்சட்டி ஏந்தி பொதுமக்களிடம் யாசகம் பெறும் நூதன போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு கூட்டமைப்பு மாநிலத் தலைவர்  பிரபு தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் தயாளன், மாநில துணைச் செயலாளர் பாரதி, மாநில துணைப் பொருளாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பருவ கால பணியாளர்களாக சொற்ப ஊதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு எடையிழப்பு எனக் கூறி லட்சகணக்கில் அபராதம் விதித்ததை நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை 48 மணி நேரத்துக்குள் இயக்கம் செய்யாமல் எடை இழப்பு எனக்கூறி கொள்முதல் பணியாளர்கள் மீது துறைரீதியாக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும். மேலும் மீண்டும் பணிபுரிய வாய்ப்புகள் வழங்க வேண்டும். இயக்கம் செய்யாத கொள்முதல் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தஞ்சையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மண்சட்டி ஏந்தி யாசகம் பெறும் நூதன போராட்டம்

கொள்முதல் நிலைய பணியாளர்களிடம் உயர் அதிகாரிகள் முறைகேடாக கட்டாய பண வசூலில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சேமிப்புக் கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்பட்ட நெல் இறங்கிய மறுநாள் சம்மந்தப்பட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.

கொள்முதல் பணிக்குத் தேவையான எழுது பொருட்களை நிர்வாகமே உரிய நேரத்தில் வழங்க வேண்டும். பருவகால பணியாளர்களின் சம்பளத்தை பிரதி மாதம் 1- ம் தேதியிலிருந்து 10-ம் தேதிக்குள் அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்த வேண்டும். சேமிப்புக் கிடங்குகளில் எடைப் பாலத்தை கண்காணிக்க கண்காணிப்புக் கருவிகளை பொருத்த வேண்டும். தற்காலிக பணியாளர்களை பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு எடைப்பாலத்தில் முறைகேடு செய்து எடையிழப்பை ஏற்படுத்தும் சில தர ஆய்வாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கையில் மண்சட்டி ஏந்தி பொதுமக்களிடம் யாசகம் பெறும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
Breaking News LIVE, July 5: தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹூட்டை கடந்த வெயில்
Breaking News LIVE, July 5: தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹூட்டை கடந்த வெயில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
Breaking News LIVE, July 5: தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹூட்டை கடந்த வெயில்
Breaking News LIVE, July 5: தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹூட்டை கடந்த வெயில்
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Bajaj Freedom CNG Bike: உலகின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்திய அமைச்சர் கட்கரி - சிறப்பம்சங்கள், விலை?
Bajaj Freedom CNG Bike: உலகின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்திய அமைச்சர் கட்கரி - சிறப்பம்சங்கள், விலை?
Annamalai vs EPS: “ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட்” போட்டுடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!
Annamalai vs EPS: “ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட்” போட்டுடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!
Embed widget