மேலும் அறிய

ராஹத் பஸ் நிறுவன மோசடி வழக்கில் தஞ்சை பிளக்ஸ் நிறுவன உரிமையாளர் கைது

தஞ்சாவூரில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி பங்குதாரர்களாக சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் மோசடி செய்தவரின்  நண்பரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி பங்குதாரர்களாக சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் மோசடி செய்தவரின்  நண்பரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர்  அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் தனது நிறுவனத்தில்  தொழிலில் முதலீடு செய்தால், அதிகளவில் லாபம் தருவதாக கூறி, மாநிலம் முழுவதும் ஏஜென்ட் மூலம் பலரிடம் சுமார் ஒரு லட்சம் முதல்10 லட்சம் வரை கமாலுதீன் வசூல் செய்துள்ளார். ஒரு பேருந்துக்கு 16 பேரை  முதலீடு செய்ய வைத்துள்ளார்.

அதில் வரும் வருமானத்தை பேருந்து பராமரிப்பு, ஓட்டுநர் ஊதியம், உள்ளிட்ட செலவுகள் போக, மீதி வரும் லாபத் தொகையை சரிபங்காக, 16 பேருக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என ஒப்பந்தம் போட்டுள்ளார்.

இதனை அடுத்து தஞ்சாவூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் சிறுக சிறுக சேர்த்த பணத்தை முதலீடு செய்துள்ளனர். மேலும் முதலீடு செய்தவர்களுக்கு மாதம் 2 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை லாப தொகையை வழங்கியுள்ளார். தொடக்கத்தில் லாப பணத்தை முறையாக வழங்கியதால்,  முதலீடு செய்தவர்கள் தங்கள் உறவினர்களையும் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.


ராஹத் பஸ் நிறுவன மோசடி வழக்கில் தஞ்சை பிளக்ஸ் நிறுவன உரிமையாளர் கைது

இந்நிலையில் கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி இரண்டு ஆண்டாக முதலீடு செய்தவர்களுக்கு லாப தொகையை வழங்காமல் சமாளித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ராஹத் தனியார் பஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கமாலுதீன் இறந்து விட்டார். தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தில் பங்கு தொகை வழங்கப்படவில்லை. இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் உரிமையாளரின் மனைவி மற்றும் மகன்களிடம் சென்று தங்களின் முதலீட்டுத் தொகையை திரும்ப தருமாறு வலியுறுத்திய போது ராஹத் பஸ் கம்பெனிக்கும் எங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துவிட்டனர்.

இதையடுத்து பங்குதாரர்கள், ராஹத் நிறுவனத்தின் சொத்து வாரிசுகளான கமாலுதீனின் மனைவி ரேஹானா பேகம், அவரது மகன்களான அப்சல் ரஹ்மான், ஹாரீஸ் ஆகியோரிடம், பணத்தை கேட்டனர். ஆனால், அவர்கள் தர மறுத்து விட்டனர். இது குறித்து பல்வேறு புகார்கள் போலீசாருக்கு வந்தன. வழக்கை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வழக்கை விசாரித்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், டிரான்ஸ்போர்ட் நிறுவன ஊழியர்கள், குடும்பத்தினர் என ஏற்கனவே 13 பேரை கைது செய்துள்ளனர். மேலும் ராஹத் நிறுவனத்திற்கு சொந்தமான 16 பஸ்கள், 8 மினி பஸ்கள், 6 இருசக்கர வாகனங்கள், 16 கார், ஒரு ஜே.சி.பி., 3 டிராக்டர் போன்ற வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், காமலுதீன் நண்பரும், தொழில் பங்குதாரருமான ஹாரீஸ் பிளக்ஸ் உரிமையாளரான, தஞ்சாவூரை சேர்ந்த அங்குராஜ்,41, என்பவர் ராஹத் நிறுவனத்தின் முதலீட்டில் இருந்து சொத்துக்களை வாங்கி குவித்ததும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பொருாளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஹாரீஸ் பிளக்ஸ் உரிமையாளர் அங்குராஜை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சென்னையில் இலவச ஸ்கூபா டைவிங் பயிற்சி! கடல்சார் வேலைவாய்ப்பு கனவா? உடனே விண்ணப்பிக்கவும்
சென்னையில் இலவச ஸ்கூபா டைவிங் பயிற்சி! கடல்சார் வேலைவாய்ப்பு கனவா? உடனே விண்ணப்பிக்கவும்
விமானப் பணி கனவா? தாட்கோ வழங்கும் இலவச பயிற்சி! 3 மாதத்தில் வேலை உறுதி, உடனே விண்ணப்பியுங்கள்!
விமானப் பணி கனவா? தாட்கோ வழங்கும் இலவச பயிற்சி! 3 மாதத்தில் வேலை உறுதி, உடனே விண்ணப்பியுங்கள்!
கவுன்சிலர்களுக்கு சம்பளம் உண்டா? குடிநீர் பிரச்சனை முதல் பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மக்கள் பிரதிநிதிகளின் சம்பளம் இதோ!
கவுன்சிலர்களுக்கு சம்பளம் உண்டா? குடிநீர் பிரச்சனை முதல் பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மக்கள் பிரதிநிதிகளின் சம்பளம் இதோ!
திருமணத்தடையா? சோற்றுத்துறை நாதர் கோயிலில் தீர்வு! நந்தி கல்யாண திருவிழாவுக்கு வாங்க!!!
திருமணத்தடையா? சோற்றுத்துறை நாதர் கோயிலில் தீர்வு! நந்தி கல்யாண திருவிழாவுக்கு வாங்க!!!
ABP Premium

வீடியோ

Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY : நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
Crude Oil Price Hike Vs Trump: செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
Iran Supreme Leader Mojtaba: ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
Hyundai Verna: டிசைன், டெக், சேஃப்டி என 25 அப்டேட்கள் - புது வெர்னா எப்படி இருக்கு? விலையில் என்ன மாற்றம்?
Hyundai Verna: டிசைன், டெக், சேஃப்டி என 25 அப்டேட்கள் - புது வெர்னா எப்படி இருக்கு? விலையில் என்ன மாற்றம்?
Volkswagen New SUV: பிரெஸ்ஸா, வென்யூவுக்கு செக்.! கைலாக் பிளாட்ஃபார்மில் புதிய SUV-ஐ இறக்கும் வோல்க்ஸ்வேகன்
பிரெஸ்ஸா, வென்யூவுக்கு செக்.! கைலாக் பிளாட்ஃபார்மில் புதிய SUV-ஐ இறக்கும் வோல்க்ஸ்வேகன்
Fronx CNG Finance Plan: ரூ.15,000 தான் EMI; மாருதி ஃபிராங்க்ஸ் CNG கார வாங்க எவ்வளவு முன்பணம் கட்டணும் தெரியுமா.? விவரங்கள் இதோ
ரூ.15,000 தான் EMI; மாருதி ஃபிராங்க்ஸ் CNG கார வாங்க எவ்வளவு முன்பணம் கட்டணும் தெரியுமா.? விவரங்கள் இதோ
Anbumani Vs Ramadoss : அவருக்கு 87 வயசாகிடுச்சு.. சரியான முடிவை எடுக்க முடியாது- நீதிமன்றத்தில் போட்டுடைத்த அன்புமணி
அவருக்கு 87 வயசாகிடுச்சு.. சரியான முடிவை எடுக்க முடியாது- நீதிமன்றத்தில் போட்டுடைத்த அன்புமணி
Embed widget