மேலும் அறிய

குடியிருக்க முடியாமல் இடையூறு செய்கின்றனர்; மாற்று இடம் பெற்ற மக்கள் தஞ்சை கலெக்டரிடம் மனு

அரசு தரப்பில் மாற்று இடம் வழங்கப்பட்ட இடத்தில் குடியிருக்கும் தங்களை இடையூறு செய்வது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தஞ்சாவூர்: அரசு தரப்பில் மாற்று இடம் வழங்கப்பட்ட இடத்தில் குடியிருக்கும் தங்களை இடையூறு செய்வது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாராசுரம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் மேற்கு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு மேற்கு பகுதியில் ரயில்வே ஸ்டேஷன் ரோடு புறம்போக்கு இடத்தில் 48 குடும்பத்தை சேர்ந்த நாங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வந்தோம். நாங்கள் குடியிருந்த பகுதி கோயில் தோற்றத்தை மறைப்பதாக கூறி தொல்லியல் துறைக்கு இடம் தேவை என உரிய இழப்பீட்டுத் தொகையுடன் மாற்று இடம் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வழங்கப்பட்டது. 

எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கு குடி பெயர்ந்து 1990 ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறோம். இந்நிலையில் அரண்மனை தேவஸ்தானம் மூலம் எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை அவர்களின் இடம் என கூறி பகுதி கட்டவும், கோயில் திருப்பணிக்கு நன்கொடையும் கேட்கப்பட்டது. மேலும் நாங்கள் அத்து மீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு வாடகை தர வேண்டும். இல்லாவிடில் வேறு நபர்களை குடியமர்த்தி விடுவோம் என்று மிரட்டுகின்றனர். நாங்கள் வசிக்கும் பகுதி முறையாக தொல்பொருள் இலாகா மற்றும் மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில் சர்வே செய்யப்பட்டு வழங்கப்பட்ட பகுதியாகும்.

தற்போது இந்த இடத்தில் மாத வாடகை நிலுவையில் உள்ளது. மேலும் மாதம் வாடகை ரூ.500 வீதம் வருடத்திற்கு ரூ.6000 செலுத்த வேண்டும் எனவும் வற்புறுத்துகின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தனது வீட்டை சுற்றி வேலை அடைத்து பாதை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தனது குடும்பத்துடன் விவசாய கூலி தொழிலாளி ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

ஒரத்தநாடு தாலுகா நெய்வேலி வடபாதி பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி ஜெய்சங்கர் என்பவர் தனது குடும்பத்துடன் வந்து கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

எனது வீட்டை சுற்றி நாலு புறமும் முள்வேலி அடைத்து பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த டிசம்பர் மாதம் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. மேலும் நாங்களும் வேலைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகிறோம். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
CM Stalin:
"ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை நிறுத்துக” - மத்திய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
RahulGandhi On EVM : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
Embed widget