மேலும் அறிய

பாரத் நெட் திட்ட கண்ணடி இழைகளை சேதப்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை - தஞ்சை கலெக்டர் எச்சரிக்கை

கண்ணாடி இழையில் எந்த விதமான உலோகப் பொருட்களும் இல்லை. எனவே இதனை திருடிச் சென்று காசாக்கலாம் என்ற தவறான புரிதல் வேண்டாம். 

தஞ்சாவூர்: கிராம ஊராட்சிகளில் அதிவேக இணையதள வசதி வழங்கும் 'பாரத் நெட்' திட்டமானது தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) மூலம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்கும் மற்றும் கண்ணாடி இழைகளை துண்டாக்கும், மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல தடை செய்யும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் அதிவேக இணையதள சேவை வழங்கப்பட உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் அதிவேக இணையதள வசதி வழங்கும் 'பாரத் நெட்' திட்டமானது தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) மூலம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கண்ணாடி இழை (Optical fibre cable) 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைக்கப்படுகிறது. இதுவரை நமது மாவட்டத்தில் உள்ள மொத்தமுள்ள 589 ஊராட்சிகளில் 588 ஊராட்சிகளில் இணைய வசதி வழங்கிட தயார் நிலையில் உள்ளது. இதற்கான RACK / UPS உள்ளிட்ட உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் (VPSC) அல்லது அரசுக் கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது.


பாரத் நெட் திட்ட கண்ணடி இழைகளை சேதப்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை - தஞ்சை கலெக்டர் எச்சரிக்கை

இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையில் வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு சம்பந்த்ப்பட்ட கிராம ஊராட்சியின் செயலாளர் அரசு ஆணையின்படி பொறுப்பாக்கப்பட்டு உள்ளார்.

கண்ணாடி இழை (Optical fibre cable) 85 சதவீதம் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள மின்கம்பங்கள் மூலமாக கொண்டு செல்வதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சிலர் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் கண்ணாடி இழை (Optical fibre cable) கொண்டு செல்லக் கூடாது என தடை செய்கின்றனர். இத்திட்டம் முழுமையான அரசின் திட்டம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். கண்ணாடி இழை மின்சாரத்தை கடத்தாது. எனவே இந்தக் கண்ணாடி இழை ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மின்கம்பங்கள் மூலம் கொண்டு செல்ல பொதுமக்கள் தடை செய்யக் கூடாது.

மேலும் விளைநிலங்களில் உள்ள மின்கம்பங்கள் வழியாக கண்ணாடி இழைகள் இணைக்கப்படும்போது பயிர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது. கண்ணாடி இழையில் எந்த விதமான உலோகப் பொருட்களும் இல்லை. எனவே இதனை திருடிச் சென்று காசாக்கலாம் என்ற தவறான புரிதல் வேண்டாம் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இத்திட்டம் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் அதிவேக இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் POP மையங்களில் பொருத்தப்பட்டுள்ள UPS. Router, Rack மற்றும் கண்ணாடி இழை வலையமைப்பு உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைகளாகும். மேற்கண்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும், கண்ணாடி இழைகளை துண்டாக்கும் மற்றும் மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல தடை செய்யும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடுமையாக எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Embed widget