மேலும் அறிய

டெல்டாவில் மழை ஓய்ந்தது... நிறுத்தப்பட்ட தண்ணீரும் திறக்கப்பட்டது

டெல்டாவில் நேற்று முதல் மழை ஓய்ந்த நிலையில், வயல்களில் தேங்கியிருந்த தண்ணீர் வடிய தொடங்கி விட்டது.

தஞ்சாவூர்: ஃபெங்கால் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழை ஓய்ந்த நிலையில் இன்று மாலை முதல் பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணை காலதாமதமாக கடந்த ஜூலை 28-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததை தொடர்ந்து கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் ஜூலை 31-ம் தேதி முதல் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் குறுவை சாகுபடியை தஞ்சை மாவட்டத்தில் ஆற்றுப்பாசனத்தை நம்பி இருந்த விவசாயிகள் மேற்கொள்ளவில்லை. பம்ப்செட் விவசாயிகள் மட்டும் குறுவை சாகுபடியை மேற்கொண்டு அறுவடையை முடித்தனர். தொடர்ந்து வடகிழக்கு பருவமழை, மேட்டூருக்கு வந்த தண்ணீர் ஆகியவற்றால் விவசாயிகள் நம்பிக்கை அடைந்து சம்பா, தாளடி சாகுபடியில் தீவிரமாக இறங்கினர்.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை முன்னிட்டு, கடந்த நவ.15-ம் தேதியில் இருந்து கனமழை பெய்தது. குறிப்பாக தஞ்சை மாவட்டம் பூதலூர், சித்திரக்குடி, ஆலக்குடி, வல்லம், 8.கரம்பை உட்பட பகுதிகளில் சாகுபடி செய்திருந்த விவசாயிகளுக்கு இந்த மழை பெரும் பயனை அளித்தது. மற்ற பகுதிகளில் டெல்டாவில் பல இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கியது. 

இதையடுத்து, பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் ஆறுகள் வாய்க்காலில் சென்றால், மழைநீர் வடிவதில் காலதாமதம் ஏற்படும், பயிர்கள் பாதிப்பை சந்திக்க கூடும் என்பதால், வயல்களில் தேங்கும் தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக கடந்த நவ.27-ம் தேதி முதல் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கான தண்ணீர் திறப்பது முழுமையாக நிறுத்தப்பட்டது. 
 
இந்நிலையில் டெல்டாவில் நேற்று முதல் மழை ஓய்ந்த நிலையில், வயல்களில் தேங்கியிருந்த தண்ணீர் வடிய தொடங்கி விட்டது. இதையடுத்து பாசனத்திற்காக கல்லணையில் இருந்து வினாடிக்கு காவிரியில் 208 கன அடியும், வெண்ணாற்றில் 202 கன அடியும், கல்லணைக் கால்வாயில் இருந்து 200 கன அடியும், கொள்ளிடத்தில் 712 கன அடியும் இன்று மாலையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக தொடர் மழையின் காரணமாக விவசாயப்பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாத நிலையில் தற்போது வயல்களில் மண்டியுள்ள களைகளை பறிக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மழைநீர் தேங்கி நின்ற பகுதியில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக என்று பார்த்து அதற்கேற்ப உரம் தெளித்தல், பூச்சிக் கொல்லி அடித்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. தற்போது கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அடுத்தடுத்த நாட்களில் விவசாயப்பணிகள் இன்னும் மும்முரம் அடைந்து விடும் என்பதால் விவசாயத் தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயத் தொழிலாளர்கள் தரப்பில் கூறுகையில், கடந்த சில நாட்களாக விவசாயப்பணிகள் ஏதும் இல்லாமல் மழையின் காரணமாக மிகுந்த சிரமத்தில் இருந்து வந்தோம். தற்போது மழை நின்றதால் களைப்பறித்தல், உரம் தெளித்தல் பணிகள் நடக்கத் தொடங்கி விட்டது. இனி தொடர்ந்து வேலை கிடைக்கும் என்பதால் சற்றே நிம்மதி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget