மேலும் அறிய

தஞ்சாவூரில் 10 மாத குழந்தை உயிரிழப்பு; அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு பெற்றோர், உறவினர்கள் போராட்டம்

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அஜாக்கிரதையால் 10 மாத குழந்தை உயிரிழந்ததாக கூறி தஞ்சை ராஜா மிராசுகர் மருத்துவமனையில் குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தஞ்சாவூர்: மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அஜாக்கிரதையால் 10 மாத குழந்தை உயிரிழந்ததாக கூறி தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவமனையில் குழந்தையின் உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை அருகே மடிகை கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு தரணிகா என்ற பத்து மாத குழந்தை உள்ளது. இவர்கள் நேற்று அந்தப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 

இந்நிலையில் தடுப்பூசி செலுத்திய சில மணி நேரத்திலேயே குழந்தையின் உடல் குளிர்ச்சிடைந்துள்ளது. இது குறித்து கீதா தனது கணவர் சதீஷ்குமாருக்கு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் குழந்தையை எடுத்துக் கொண்டு காசநாடு புதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு இருந்த மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து நான்கு ஊசிகள் போட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் குழந்தையின் உடலில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து அந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குழந்தையை தனது காரில் அழைத்துக்கொண்டு தஞ்சாவூருக்கு புறப்பட்டுள்ளார்.

மேலும் அவர் மருத்துவமனைக்கு செல்லும்போது பாதி வழியிலேயே மீண்டும் திரும்பி காசநாடு புத்துருக்கு சென்றதாக கூறப்படுகிறது. குழந்தையின் உடல் உடல்நிலை மேலும் பாதிப்படைய தொடங்கிய நிலையில் மீண்டும் காசநாடு புதூரிலிருந்து தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழந்தைக்கு மேலும் 4 ஊசிகள் போட்டுள்ளனர். இதற்கிடையில் குழந்தையின் நிலை தெரிந்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனை முன்பு திரண்டனர்.

இந்நிலையில் ஊசி செலுத்தி சிறிது நேரத்தில் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளது. இதை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அஜாக்கிரதையால் தான் குழந்தை உயிரிழந்து உள்ளதாக தெரிவித்து மருத்துவமனை வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த தஞ்சை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா மற்றும் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலைந்து செல்லாமல் வெகுநேரம் போராட்டம் செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது.

இதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டு மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Embed widget