மேலும் அறிய

பால்கனியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை பலியான சோகம் - பெற்றோர் கதறல்..!

அப்பார்ட்மெண்ட்டுகளில் வசிப்பவர்கள் குழந்தைகளை பால்கனியில் விளையாட விடுவதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெசன்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (42).  இவர், நகை கில்ட் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (35). இவர்களுக்கு கோபிகா (4), கேசவ் (3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது தங்கையின் வீட்டில் தனது மகள் கோபிகாவை கடந்த செவ்வாய்கிழமை கொண்டு சென்று விட்டுள்ளார் ராஜா.

கும்பகோணம் பச்சையப்பன் தெருவில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் உள்ளது ராஜாவின் தங்கை வீடு. 4-வது மாடியில் உள்ள அந்த வீட்டின் பால்கனியில் குழந்தை கோபிகா விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். வெளியில் வாகனங்கள் செல்லும் சத்தம் உட்பட பலவற்றால் ஈர்க்கப்பட்ட அந்த குழந்தை எப்படியோ எதிர்பாராதவிதமாக பால்கனியில் இருந்து தவறிக் கீழே விழுந்துள்ளார்.


பால்கனியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை பலியான சோகம் - பெற்றோர் கதறல்..!

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினரின் இதயமே சில விநாடிகள் துடிக்க மறந்துதான் விட்டது. ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுமியை உடன் தூக்கிக் கொண்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி கோபிகாவை அனுப்பி வைத்தனர்.

குழந்தையை அந்த நிலையில் பார்த்து பெற்றோர் கதறிய கதறல் மருத்துவமனையில் இருந்தவர்களை கண்கலங்கச் செய்து விட்டது. திருச்சியில் சேர்க்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை கோபிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கோபிகாவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் கும்பகோணம் அருகே வீட்டு பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிரில் கம்பிகளுக்கு மத்தியில் தலை மாட்டிக் கொண்டு பின்னர் பொதுமக்களின் உடனடி நடவடிக்கையால் மீட்கப்பட்ட சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

அப்பார்ட்மெண்ட்டுகளில் வசிப்பவர்கள் குழந்தைகளை பால்கனியில் விளையாட விடுவதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அருகில் பெற்றோரோ அல்லது உறவினர்களோ இருந்தால் மட்டுமே குழந்தைகளை பால்கனியில் விளையாட அனுமதிக்க வேண்டும். இல்லாவிடில் குழந்தைகளை பால்கனிக்கு அனுமதிக்க கூடாது. குழந்தைகள் உயரத்தில் இருந்து கீழே பார்க்க ஆவல் தூண்டும் போது அதில் உள்ள ஆபத்துக்களை அறியமாட்டார்கள். அவ்வாறு செய்யும் போது கவனம் தவறியோ, கை நழுவியோ விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே இதுபோன்ற விஷயங்களில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
Embed widget