மேலும் அறிய

பால்கனியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை பலியான சோகம் - பெற்றோர் கதறல்..!

அப்பார்ட்மெண்ட்டுகளில் வசிப்பவர்கள் குழந்தைகளை பால்கனியில் விளையாட விடுவதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெசன்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (42).  இவர், நகை கில்ட் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (35). இவர்களுக்கு கோபிகா (4), கேசவ் (3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது தங்கையின் வீட்டில் தனது மகள் கோபிகாவை கடந்த செவ்வாய்கிழமை கொண்டு சென்று விட்டுள்ளார் ராஜா.

கும்பகோணம் பச்சையப்பன் தெருவில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் உள்ளது ராஜாவின் தங்கை வீடு. 4-வது மாடியில் உள்ள அந்த வீட்டின் பால்கனியில் குழந்தை கோபிகா விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். வெளியில் வாகனங்கள் செல்லும் சத்தம் உட்பட பலவற்றால் ஈர்க்கப்பட்ட அந்த குழந்தை எப்படியோ எதிர்பாராதவிதமாக பால்கனியில் இருந்து தவறிக் கீழே விழுந்துள்ளார்.


பால்கனியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை பலியான சோகம் - பெற்றோர் கதறல்..!

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினரின் இதயமே சில விநாடிகள் துடிக்க மறந்துதான் விட்டது. ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுமியை உடன் தூக்கிக் கொண்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி கோபிகாவை அனுப்பி வைத்தனர்.

குழந்தையை அந்த நிலையில் பார்த்து பெற்றோர் கதறிய கதறல் மருத்துவமனையில் இருந்தவர்களை கண்கலங்கச் செய்து விட்டது. திருச்சியில் சேர்க்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை கோபிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கோபிகாவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் கும்பகோணம் அருகே வீட்டு பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிரில் கம்பிகளுக்கு மத்தியில் தலை மாட்டிக் கொண்டு பின்னர் பொதுமக்களின் உடனடி நடவடிக்கையால் மீட்கப்பட்ட சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

அப்பார்ட்மெண்ட்டுகளில் வசிப்பவர்கள் குழந்தைகளை பால்கனியில் விளையாட விடுவதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அருகில் பெற்றோரோ அல்லது உறவினர்களோ இருந்தால் மட்டுமே குழந்தைகளை பால்கனியில் விளையாட அனுமதிக்க வேண்டும். இல்லாவிடில் குழந்தைகளை பால்கனிக்கு அனுமதிக்க கூடாது. குழந்தைகள் உயரத்தில் இருந்து கீழே பார்க்க ஆவல் தூண்டும் போது அதில் உள்ள ஆபத்துக்களை அறியமாட்டார்கள். அவ்வாறு செய்யும் போது கவனம் தவறியோ, கை நழுவியோ விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே இதுபோன்ற விஷயங்களில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget