மேலும் அறிய

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு கொடுங்கள்... தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

கடும் மழையினால் மூழ்கி சேதமடைந்து, அழுகிப்போன நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்கம் (சிபிஐ சார்பு) சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தஞ்சாவூர்: மழையில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ சார்பு) சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது பெய்த கடும் மழையினால் மூழ்கி சேதமடைந்து, அழுகிப்போன நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்கம் (சிபிஐ சார்பு) சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ. பாஸ்கர் வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளதாவது:


ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு கொடுங்கள்... தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தஞ்சை தெற்கு மாவட்ட குழுவின் சார்பில்  ஒரத்தநாடு, புதூர், பருத்திக்கோட்டை, பொன்னாப்பூர், குலமங்கலம், உரந்தைராயன் குடிக்காடு, ஒக்கநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  அறுவடைக்கு தயாரான நிலையில் மழையால் சேதமடைந்து மூழ்கி அழுகிப்போன நெற்பயிர்களையும், சம்பா பயிருக்காக நடவு நடப்பட்டு மூழ்கி நாற்றுகள் அழுகிப் போன வயல்களையும், நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்காக காத்திருந்து, மழையில் நனைந்து முளைத்து போன நெல் மூட்டைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில்  நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டு மழையினால் நெல் முளைத்து காணப்படுகிறது. அதேபோன்று பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் வயல்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மழை நீரில் மூழ்கி அழுகி கிடக்கிறது. சம்பா பயிருக்காக பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகி உள்ளது. எனவே, தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாமல் உள்ள நெல் மூட்டைகளை உடனடியாக  ஈரப்பதம் பாராது அனைத்து நெல்லினையும்  கொள்முதல் செய்ய வேண்டும்.

குறைந்தது, ஒரு நாளைக்கு 2000 ம் மூட்டைகளாவது கொள்முதல் செய்ய வேண்டும். லாரி தடையில்லாமல் கொள்முதல் செய்த நெல்லை ஏற்றி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கு மற்றும் விவசாயிகளுக்கு படுதா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று, மழைநீரில் மூழ்கிய அறுவடை செய்ய இயலாத வயல்களை முறையாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், சம்பா பயிருக்காக நடவு செய்யப்பட்டு அழுகிப்போன வயல்களையும் ஆய்வு செய்து கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

ஆய்வின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோ. சக்திவேல், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர்  அ.கலியபெருமாள், மாவட்ட குழு உறுப்பினர் சீனி. முருகையன், கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தி. திருநாவுக்கரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Karunas Slams TVK Vijay:
Karunas Slams TVK Vijay: "சூட்டிங் எதாவது கூப்பிட்டா வருவாரு" SIR ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த விஜய்! கருணாஸ் விளாசல்
’’S.I.R. முயற்சிகளை தேர்தல் ஆணையம் நிறுத்திவைக்க வேண்டும், இல்லைன்னா..’’ முதல்வர் எச்சரிக்கை!
’’S.I.R. முயற்சிகளை தேர்தல் ஆணையம் நிறுத்திவைக்க வேண்டும், இல்லைன்னா..’’ முதல்வர் எச்சரிக்கை!
Gen Z-க்களின் அதிரடி முடிவு! இந்த பதவி வேண்டாம்- ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Gen Z-க்களின் அதிரடி முடிவு! இந்த பதவி வேண்டாம்- ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
SIR கூட்டத்திற்கு ஆப்செண்டான தவெக.. ”பயந்தாங்கொளிகள்  வரவில்லை” ஆர்.எஸ் பாரதி அட்டாக்
SIR கூட்டத்திற்கு ஆப்செண்டான தவெக.. ”பயந்தாங்கொளிகள் வரவில்லை” ஆர்.எஸ் பாரதி அட்டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gingee Masthan| கோரிக்கை வைத்த நரிக்குறவர்கள்பாதியில் எழுந்து சென்றமஸ்தான் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
Women forced to prove Menstruation|’’PERIODS-னு ஏமாத்துறீங்களா?PHOTOகாட்டுங்க’’அத்துமீறிய அதிகாரிகள்
கோயிலுக்கு வந்த பக்தர்கள் 9 பேர் நெரிசலில் உயிரிழப்பு நெஞ்சை உருக்கும் காட்சி | Andhra Temple Stampade
OPERATION முக்குலத்தோர்! எடப்பாடி புது வியூகம்! தேர்தல் அறிக்கையில் சம்பவம்
அதிமுகவில் இருந்து OUT! செங்கோட்டையன் நீக்கம்! ஆக்‌ஷன் எடுத்த EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Karunas Slams TVK Vijay:
Karunas Slams TVK Vijay: "சூட்டிங் எதாவது கூப்பிட்டா வருவாரு" SIR ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த விஜய்! கருணாஸ் விளாசல்
’’S.I.R. முயற்சிகளை தேர்தல் ஆணையம் நிறுத்திவைக்க வேண்டும், இல்லைன்னா..’’ முதல்வர் எச்சரிக்கை!
’’S.I.R. முயற்சிகளை தேர்தல் ஆணையம் நிறுத்திவைக்க வேண்டும், இல்லைன்னா..’’ முதல்வர் எச்சரிக்கை!
Gen Z-க்களின் அதிரடி முடிவு! இந்த பதவி வேண்டாம்- ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Gen Z-க்களின் அதிரடி முடிவு! இந்த பதவி வேண்டாம்- ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
SIR கூட்டத்திற்கு ஆப்செண்டான தவெக.. ”பயந்தாங்கொளிகள்  வரவில்லை” ஆர்.எஸ் பாரதி அட்டாக்
SIR கூட்டத்திற்கு ஆப்செண்டான தவெக.. ”பயந்தாங்கொளிகள் வரவில்லை” ஆர்.எஸ் பாரதி அட்டாக்
ஒரு மாணவர்கூட இல்லாத  311 பள்ளிகள்; வெகுவாக சரியும் அரசுப்பள்ளி சேர்க்கை- கல்வித்துறை என்ன செய்ய வேண்டும்?
ஒரு மாணவர்கூட இல்லாத  311 பள்ளிகள்; வெகுவாக சரியும் அரசுப்பள்ளி சேர்க்கை- கல்வித்துறை என்ன செய்ய வேண்டும்?
TVM Karthigai Deepam Spl. Buses: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; 4,764 சிறப்புப் பேருந்துகள் - முழு விவரம் இதோ
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; 4,764 சிறப்புப் பேருந்துகள் - முழு விவரம் இதோ
கிளாட் சட்ட நுழைவுத் தேர்வு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; எப்போது வரை, எப்படி?
கிளாட் சட்ட நுழைவுத் தேர்வு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; எப்போது வரை, எப்படி?
Sengottaiyan: ஜெ. இருக்கும்போதே முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டவர் செங்கோட்டையன்.. திண்டுக்கல் சீனிவாசன் பகீர்
Sengottaiyan: ஜெ. இருக்கும்போதே முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டவர் செங்கோட்டையன்.. திண்டுக்கல் சீனிவாசன் பகீர்
Embed widget