மேலும் அறிய

தஞ்சை மாவட்டத்தில் முதல்முறை... கொலை வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள்

தஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக பெண் ஒருவருக்கு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: சொத்துத் தகராறில் உறவினரை கொன்ற வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது முதல்முறை என்பதும் குறிப்பிட்டத்தக்கது. 

சொத்தில் பங்கு கேட்டு தகராறு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வடசேரியை சேர்ந்த உத்திராபதி. இவரது அண்ணன் ராமமூர்த்தி, தம்பி சின்னப்பா. இந்நிலையில் ராமமூர்த்தி மனைவி பிரேமாவதி (50). சின்னப்பா ஆகியோர் உத்திராபதியிடம் சொத்தில் பங்கு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். 

தூண்டுதலில் நடந்த கொலை
 
இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் பிரேமாவதி துாண்டுதல் பேரில், கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி தனது அண்ணன் உத்திராபதியிடம், சின்னப்பா சொத்துக்கேட்டு தகராறு செய்து வெட்டிக்கொலை செய்தார். இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து உத்திராபதியின் மகள் சுமித்ரா அளித்த புகாரின் பேரில் பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சின்னப்பா மற்றும் கொலைக்கு துாண்டுதலாக இருந்த பிரேமாவதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

2018ம் ஆண்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

இவ்வழக்கு தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு ஏப். 30ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பட்டுக்கோட்டை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கின் முதல் குற்றவாளியான சின்னப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து இரண்டாம் எதிரியான பிரேமாவதி வழக்கில், முதல் நபராக சேர்க்கப்பட்டார். 

இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி

இந்நிலையில் நேற்று பட்டுக்கோட்டை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மணி வழக்கினை விசாரணை செய்து, பிரேமாவதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராத தொகையும் விதித்து தீர்ப்பு கூறினார். கொலை வழக்கில் பெண் ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்படுவது தஞ்சை மாவட்டத்தில் முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் நீதிமன்ற தலைமைக் காவலர் புனிதா ஆகியோரை தஞ்சாவூர் எஸ்.பி., ஆஷிஷ்ராவத் வெகுவாக பாராட்டினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Embed widget