மேலும் அறிய

மிரட்டும் மருமகள்...தீக்குளிக்க முயன்ற மாமியார் - தஞ்சையில் பரபரப்பு

உயிர் வாழவே பயமாக உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். எனவே எனது மருமகள் யோகவதி மற்றும் அவருடன் வந்து பிரச்னை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சாவூர்:  நெற் பயிர்களை சேதப்படுத்தி வயலில் தனக்கும் பங்கு இருக்கிறது என்று கூறி மிரட்டும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாமியார் உள்பட 3 பேர் தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளே விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்து வந்த நிலையில் வெளியே இந்த பரபரப்பு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கக்கரை கிராமத்தை சேர்ந்த பிச்சையப்பன் என்பவரின் மனைவி மணியம்மாள் (75), அவரது மகன் சரபோஜி (40), அவரது மனைவி செந்தமிழ் செல்வி (38) ஆகிய 3 பேரும் சாகுபடி செய்த நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்த அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெயை தங்களின் மீது ஊற்றிக் கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனை பார்த்து பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த போலீசார் உடனடியாக அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். பின்னர் தண்ணீரை அந்த மூன்று பேர் மீது ஊற்றினர். பின்னர் அவர்களிடம் போலீசார் எதற்காக இப்படி செய்தீர்கள் என்று விசாரித்தனர். அப்போது மணியம்மாள் கூறியதாவது:

நாங்கள் எங்கள் ஊரில் இரண்டரை ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளோம். விவசாயத்தை நம்பியே நாங்கள் உள்ளோம். இந்நிலையில் எனது மகன் நடராஜன் என்பவர் இறந்து விட்டார். அவரது மனைவி யோகவதி என்பவர் வயலில் தனக்கும் பங்கு இருக்கிறது என்று கூறி சிலருடன் வந்து பயிரிட்ட நெற்பயிர்களை பிடுங்கி சேதப்படுத்தினார். மேலும் நிலத்தை முழுமையாக தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி மிரட்டி தாக்கினார். இது குறித்து ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

உயிர் வாழவே பயமாக உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். எனவே எனது மருமகள் யோகவதி மற்றும் அவருடன் வந்து பிரச்னை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடன் வாங்கி சாகுபடி செய்துள்ள நிலையில் அறுவடையின் போது எவ்வித இடையூறும் ஏற்படாத அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து போலீசார் தீக்குளிக்க முயன்ற 3 பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலெக்டர் அலுவலகம் உள்ளே விவசாயிகள் கூட்டம் நடந்து வந்த நிலையில் வெளியில் இதுபோன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. சேதப்படுத்தப்பட்ட நெற் பயிரை காட்டி மூதாட்டி மணியம்மாள் கண்ணீர் விட்டு கதறி அழுததும் பார்த்தவர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது.

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Jio SpaceX Deal: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | CuddaloreJyotika on Vijay | ”என் புருஷன் கேவலமா போயிட்டாரா குப்பை படத்த கொண்டாடுறாங்க” விஜயை சீண்டிய ஜோதிகா?EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Jio SpaceX Deal: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
Chennai Car Parking Rules: ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
Batlagundu Tollgate : அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்! வத்தலக்குண்டுவில் பரபரப்பு.. நடந்தது என்ன?
Batlagundu Tollgate : அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்! வத்தலக்குண்டுவில் பரபரப்பு.. நடந்தது என்ன?
Embed widget