மேலும் அறிய

மிரட்டும் மருமகள்...தீக்குளிக்க முயன்ற மாமியார் - தஞ்சையில் பரபரப்பு

உயிர் வாழவே பயமாக உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். எனவே எனது மருமகள் யோகவதி மற்றும் அவருடன் வந்து பிரச்னை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சாவூர்:  நெற் பயிர்களை சேதப்படுத்தி வயலில் தனக்கும் பங்கு இருக்கிறது என்று கூறி மிரட்டும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாமியார் உள்பட 3 பேர் தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளே விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்து வந்த நிலையில் வெளியே இந்த பரபரப்பு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கக்கரை கிராமத்தை சேர்ந்த பிச்சையப்பன் என்பவரின் மனைவி மணியம்மாள் (75), அவரது மகன் சரபோஜி (40), அவரது மனைவி செந்தமிழ் செல்வி (38) ஆகிய 3 பேரும் சாகுபடி செய்த நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்த அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெயை தங்களின் மீது ஊற்றிக் கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனை பார்த்து பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த போலீசார் உடனடியாக அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். பின்னர் தண்ணீரை அந்த மூன்று பேர் மீது ஊற்றினர். பின்னர் அவர்களிடம் போலீசார் எதற்காக இப்படி செய்தீர்கள் என்று விசாரித்தனர். அப்போது மணியம்மாள் கூறியதாவது:

நாங்கள் எங்கள் ஊரில் இரண்டரை ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளோம். விவசாயத்தை நம்பியே நாங்கள் உள்ளோம். இந்நிலையில் எனது மகன் நடராஜன் என்பவர் இறந்து விட்டார். அவரது மனைவி யோகவதி என்பவர் வயலில் தனக்கும் பங்கு இருக்கிறது என்று கூறி சிலருடன் வந்து பயிரிட்ட நெற்பயிர்களை பிடுங்கி சேதப்படுத்தினார். மேலும் நிலத்தை முழுமையாக தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி மிரட்டி தாக்கினார். இது குறித்து ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

உயிர் வாழவே பயமாக உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். எனவே எனது மருமகள் யோகவதி மற்றும் அவருடன் வந்து பிரச்னை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடன் வாங்கி சாகுபடி செய்துள்ள நிலையில் அறுவடையின் போது எவ்வித இடையூறும் ஏற்படாத அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து போலீசார் தீக்குளிக்க முயன்ற 3 பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலெக்டர் அலுவலகம் உள்ளே விவசாயிகள் கூட்டம் நடந்து வந்த நிலையில் வெளியில் இதுபோன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. சேதப்படுத்தப்பட்ட நெற் பயிரை காட்டி மூதாட்டி மணியம்மாள் கண்ணீர் விட்டு கதறி அழுததும் பார்த்தவர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது.

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
IPL 2025 Coach:
IPL 2025 Coach: "பாண்டிங் முதல் பதானி வரை" 10 அணிக்கும் பயிற்சியாளர்கள் யார்? யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMDK Alliance DMK | Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்Nagpur Violence | பற்றி எரியும் மகாராஷ்டிரா இந்துக்கள் இஸ்லாமியர்கள் மோதல் படத்தால் வந்த பஞ்சாயத்துADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
IPL 2025 Coach:
IPL 2025 Coach: "பாண்டிங் முதல் பதானி வரை" 10 அணிக்கும் பயிற்சியாளர்கள் யார்? யார்?
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
India Post GDS Result: இந்திய அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள்; ஜிடிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
India Post GDS Result: இந்திய அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள்; ஜிடிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Embed widget