மேலும் அறிய

விதிமுறைகளை மீறி திலகர் திடலில் பட்டாசுக்கடை: அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பட்டாசு கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று மதியம் திலகர் திடலில் அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்: விதிமுறைகளை மீறி தஞ்சாவூர் திலகர் திடலில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பட்டாசு கடையை உடன் அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தஞ்சாவூர் திலகர் திடலில் சட்ட விதிமுறைகளை மீறி பட்டாசு கடை அமைக்க அனுமதி கொடுத்த மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், உடனே அந்தப் பட்டாசு கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று மதியம் திலகர் திடலில் அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திலகர் திடலில் நடந்த ஆர்ப்பாட்டம்
 
மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், மாணவர் அணி செயலாளர் வக்கீல் நல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விதிமுறைகளை மீறி திலகர்திடலில் பட்டாசுக்கடை அமைக்க இடம் அளித்தது தவறு. அருகில் பெரிய கோயில், ஆஸ்பத்திரிகள் உள்ள நிலையில் இதுபோன்று பட்டாசு கடை அமைக்க இடம் கொடுக்கக்கூடாது. எனவே இந்த பட்டாசுக்கடையை உடன் அகற்ற வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தலைமை செயற்குழு உறுப்பினர் விருத்தாச்சலம், ஒன்றிய செயலாளர் மோகன், கோட்டை பகுதி செயலாளர் செந்தில், அம்மா பேரவை செயலாளர் ராமதாஸ், நிர்வாகிகள் பாலு , உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தீபாவளி பண்டிகைக்காக தஞ்சை காந்திஜி சாலை, மணிகூண்டு, கீழவாசல் சாலை போன்ற பகுதிகளில் தற்காலிக தரைக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.‌ ஆனால் கோர்ட்டு உத்தரவுபடி தற்காலிக கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது.

தற்காலிக கடைக்காக பணம் கொடுத்த வியாபாரிகள்

இதனால் வியாபாரிகள் என்ன செய்வதென்று  தெரியாமல் உள்ளனர். மேலும் வியாபாரிகளிடம் பணம் வாங்கிய நபர் இதுவரை திருப்பி கொடுக்கவில்லை. எனவே வியாபாரிகளுக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து  மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டால் முறையான பதில் இல்லை. இதனால் பணம் கொடுத்த வியாபாரிகள் மிகவும் வேதனையில் உள்ளனர். இதுகுறித்து சாலை மறியலும் நடத்தப்பட்டது. இருப்பினும் இதுவரை எவ்வித முறையான பதிலும் இல்லை.

விதிமுறைகளை மீறி பட்டாசு கடை

இது ஒரு புறம் இருக்க திலகர் திடலில் சட்ட விதிமுறைகளை மீறி வர்த்தகத்துக்காக பட்டாசு கடை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி கொடுத்தது ஏன்? திலகர் திடலில் திடலில் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த தான் அனுமதி உண்டு. ஆனால் விதிமுறைகளை மீறி சுற்றிலும் ஆஸ்பத்திரி, தங்கும் விடுதிகள், கோவில்கள் உள்ள பகுதி நிறைந்த திலகர் திடலில் பட்டாசு கடை அமைக்க மாநகராட்சி அனுமதி கொடுத்தது கண்டிக்கத்தக்கது. இதனால் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. எனவே இதை உடன் அகற்ற வேண்டும்.

மாநகராட்சி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்

எனவே உடனடியாக இந்த பட்டாசு கடையை அகற்ற வேண்டும். இல்லையென்றால் வரும் 28-ந் தேதி அ.ம.மு.க‌ பொதுச்செயலாளர் அனுமதியுடன் மாநகராட்சி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் . இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில்  இதுவரை
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில் இதுவரை
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
TVK MDU Conference: முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
Trump Warns Again: 24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
Embed widget