மேலும் அறிய

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பரப்புரை நடைபயணம்: மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு அறிவிப்பு

காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24ம் தேதி முதல் 29ம் தேதி  வரை பரப்புரை நடைபயணம்

தஞ்சாவூர்: காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24ம் தேதி முதல் 29ம் தேதி  வரை பரப்புரை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பரப்புரை நடை பயணம் 24ம் தேதி தொடக்கம்

காவிரி டெல்டா மாவட்டங்கள் ஆகிய வேளாண் மண்டலத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் செப்டம்பர் 24 பூம்புகாரில் பரப்புரை நடை பயணம் துவங்கி செப்டம்பர் 29 தஞ்சாவூரில் வந்து நிறைவடைகிறது. பரப்புரை நடை பயண அனுமதிக்காக இன்று மதியம் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன் தலைமையில் நிர்வாகி சித்ரா ஜெயராமன், மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஓ.சேக் அலாவுதீன், திராவிடர் விடுதலைக் கழக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் தெ.மகேஷ் ஆகியோர் தஞ்சை மாவட்ட எஸ்.பி.,யை சந்தித்து ப கோரிக்கையை அளித்தனர். பின்னர்  மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:


10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பரப்புரை நடைபயணம்: மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு அறிவிப்பு

விவசாயமே முதன்மைத் தொழில்

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயமே முதன்மைத் தொழிலாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நெல்பயிர்கள் மற்றும் உளுந்து, பயறு, பருத்தி உட்பட சாகுபடிகளும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளில் ஓஎன்ஜிசி  எண்ணெய் கிணறு தோண்டுதல், மற்றும் மீத்தேன், ஷேல்கேஸ்,  ஹைட்ரோ கார்பன், நிலக்கரி உட்பட விவசாயத்திற்கு எதிரான திட்டங்களால் விவசாயம் அழிந்து,  டெல்டா பகுதி பாலைவனம் ஆகிற சூழ்நிலைகள் வந்தபோது, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தோழமை அமைப்புகளுடன் மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தி, விவசாயத்துக்கு எதிரான பாதிப்புத் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த சென்னையை சேர்ந்த 5 பேர்- முதல்வர் நிவாரண நிதி வழங்கல்

நிலத்தடி நீர்த் தொகுப்பை பாழ்படுத்தும் வேலைகள்

மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் - 2020 நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பழைய எண்ணெய் - எரிவாயுக் கிணறுகளை மராமத்து செய்வதாக கூறிக்கொண்டு, நிலத்தடி நீர்த் தொகுப்பை மேலும் பாழ்படுத்தும் வேலைகள் முயற்சிக்கப்படுகின்றன. விவசாய நிலங்களில் விவசாய மல்லாத தொழிலகங்கள் நிறுவப்படுவதற்குமான சூழல் எழுந்துள்ளது. இந்நிலையில் காவிரிப் படுகை முழுவதையும் பாதுகாக்கப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

காவிரி படுகை மாவட்டங்கள் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி படுகையில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்கள் மட்டுமே நடைபெற வேண்டும், வேளாண் மண்டலம் எக்காரணம் கொண்டும் தொழில் மண்டலமாக ஆகக்கூடாது, காவிரி படுகையில் உள்ள        ஏரி,குளம்,பாசன கால்வாய்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நீர்நிலைகள் மீட்கப்பட வேண்டும், காவிரி படுகை முழுவதும் நீர் பாசன கட்டமைப்பு,        நீர் மேலாண்மை செயல்பாடுகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

விளைநிலங்களாகவே தொடர வேண்டும்

விளைநிலங்கள் விளைநிலங்களாகவே தொடர பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24ம் தேதி பூம்புகாரில் பரப்புரை நடைப்பயணம் துவங்கி மயிலாடுதுறை, குத்தாலம், கும்பகோணம், பாபநாசம் வழியாக 29ம் தேதி தஞ்சாவூர் வந்து நிறைவடைகிறது. 

மத்திய, மாநில அரசுகள் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பரப்புரை நடைப்பயணம் நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தமிழக வரலாற்றிலேயே நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது யார் ஆட்சிக்காலத்தில் தெரியுங்களா?
தமிழக வரலாற்றிலேயே நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது யார் ஆட்சிக்காலத்தில் தெரியுங்களா?
கம்பீர அணிவகுப்பு... தஞ்சையில் கலெக்டர் ரேவதி தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
கம்பீர அணிவகுப்பு... தஞ்சையில் கலெக்டர் ரேவதி தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Embed widget