மேலும் அறிய

தஞ்சாவூர்: அண்ணன், தம்பி கொலை வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக ஆள்மாறாட்டம் - 2 பேர் கைது

ஆள்மாறாட்டம், நீதிமன்ற பதிவேட்டை போலியாக தயாரித்தல் நேர்மையற்ற முறையில் இணங்கச் செய்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் பூமிநாதன் மகன்கள் கூலித் தொழிலாளிகளான அருண்குமார் (28), அரவிந்த் (25), ரவி மகன் சந்தோஷ் (22), இவர்கள் மூவரும், 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி அதே பகுதி அய்யாகோயில் என்ற இடத்தில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது சோழபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த சோ.காரல் மார்க்ஸ் (30) என்பவரும், அவரது நண்பர்கள் ராஜேஷ், நரேஷ், பங்கு சதீஷ் ஆகிய நால்வரும் சேர்ந்து அரிவாளால் அருண்குமார், அரவிந்த், சந்தோஷ் ஆகியோரை அரிவாளால் வெட்டினர்.இதில் அருண்குமார் அதே இடத்தில் இறந்தார். படுகாயமடைந்த அரவிந்த், சந்தோஷ் ஆகியோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அரவிந்த் உயிரிழந்தார்.  அரிவாளால்  வெட்டிய நான்கு பேரும் தப்பி ஓடிவிட்டனர். அருண் குமாருக்கும், காரல் மார்க்சுக்கும் முன்விரோதம் காரணமாக இந்த இரட்டை கொலை நடைபெற்றுள்ளதாக திருப்பனந்தாள் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து திருப்பனந்தாள் போலீஸார் கொலை வழக்குப் பதிந்து, கொலையில் தொடர்புடைய கார்ல் மார்க்ஸ், ராஜேஷ், நரேஷ், பிறையரசன், சதீஷ், விக்னேஷ் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

தஞ்சாவூர்: அண்ணன், தம்பி கொலை வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக ஆள்மாறாட்டம் - 2 பேர் கைது

பின்னர், இந்த இரட்டை கொலை வழக்கு திருவிடைமருதூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு திருவிடைமருதூர் கோர்ட்டிற்கு  வந்தது. அப்போது, கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரையும் ஜாமீன் எடுப்பதற்காக குமரங்குடியை சேர்ந்த நாகப்பன் மகன் காசிராமன் (53) மற்றும் அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் பாலு (53) ஆகிய இருவரும் கோர்ட்டிற்கு வந்தனர். அப்போது, கோர்ட்டில், தான் குற்றவாளிகளுக்கு ரத்த சொந்தம் என்று கூறி, ஆவணங்களை சமர்ப்பித்தனர்.


தஞ்சாவூர்: அண்ணன், தம்பி கொலை வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக ஆள்மாறாட்டம் - 2 பேர் கைது

ஆவணங்களையும், இருவரையும் விசாரணை செய்த கோர்ட், இருவரும் போலியாக ஆவணங்களை வழங்கியதும், ஆள்மாற்றாட்டம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து திருவிடைமருதூர் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட் நீதிபதி நிலவரசன்,  காசிராமன் மற்றும் பாலு இருவர் மீதும் வழக்கு பதிந்து, சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருவிடைமருதுார் போலீசார், காசிராமன், பாலு மீது, ஆள்மாறாட்டத்தால் ஏமாற்றுவது, நீதிமன்றத்தின் பதிவுக் கட்டு அல்லது பொதுப் பதிவேடு முதலியவற்றைப் போலியாக தயாரித்தல், ஏமாற்றும் பொருட்டுப் போலியாகத் தயார் செய்தல், ஏமாற்றுதலும் பொருளை கொடுப்பதற்கு நேர்மையற்ற முறையில் இணங்கச் செய்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் தொடர்புடையவர்கள், போலியாக ஆவணம் தயாரித்து, ஆள்மாற்றாட்டம் செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Embed widget