மேலும் அறிய

தஞ்சாவூர்: அண்ணன், தம்பி கொலை வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக ஆள்மாறாட்டம் - 2 பேர் கைது

ஆள்மாறாட்டம், நீதிமன்ற பதிவேட்டை போலியாக தயாரித்தல் நேர்மையற்ற முறையில் இணங்கச் செய்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் பூமிநாதன் மகன்கள் கூலித் தொழிலாளிகளான அருண்குமார் (28), அரவிந்த் (25), ரவி மகன் சந்தோஷ் (22), இவர்கள் மூவரும், 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி அதே பகுதி அய்யாகோயில் என்ற இடத்தில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது சோழபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த சோ.காரல் மார்க்ஸ் (30) என்பவரும், அவரது நண்பர்கள் ராஜேஷ், நரேஷ், பங்கு சதீஷ் ஆகிய நால்வரும் சேர்ந்து அரிவாளால் அருண்குமார், அரவிந்த், சந்தோஷ் ஆகியோரை அரிவாளால் வெட்டினர்.இதில் அருண்குமார் அதே இடத்தில் இறந்தார். படுகாயமடைந்த அரவிந்த், சந்தோஷ் ஆகியோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அரவிந்த் உயிரிழந்தார்.  அரிவாளால்  வெட்டிய நான்கு பேரும் தப்பி ஓடிவிட்டனர். அருண் குமாருக்கும், காரல் மார்க்சுக்கும் முன்விரோதம் காரணமாக இந்த இரட்டை கொலை நடைபெற்றுள்ளதாக திருப்பனந்தாள் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து திருப்பனந்தாள் போலீஸார் கொலை வழக்குப் பதிந்து, கொலையில் தொடர்புடைய கார்ல் மார்க்ஸ், ராஜேஷ், நரேஷ், பிறையரசன், சதீஷ், விக்னேஷ் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

தஞ்சாவூர்: அண்ணன், தம்பி கொலை வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக ஆள்மாறாட்டம் - 2 பேர் கைது

பின்னர், இந்த இரட்டை கொலை வழக்கு திருவிடைமருதூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு திருவிடைமருதூர் கோர்ட்டிற்கு  வந்தது. அப்போது, கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரையும் ஜாமீன் எடுப்பதற்காக குமரங்குடியை சேர்ந்த நாகப்பன் மகன் காசிராமன் (53) மற்றும் அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் பாலு (53) ஆகிய இருவரும் கோர்ட்டிற்கு வந்தனர். அப்போது, கோர்ட்டில், தான் குற்றவாளிகளுக்கு ரத்த சொந்தம் என்று கூறி, ஆவணங்களை சமர்ப்பித்தனர்.


தஞ்சாவூர்: அண்ணன், தம்பி கொலை வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக ஆள்மாறாட்டம் - 2 பேர் கைது

ஆவணங்களையும், இருவரையும் விசாரணை செய்த கோர்ட், இருவரும் போலியாக ஆவணங்களை வழங்கியதும், ஆள்மாற்றாட்டம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து திருவிடைமருதூர் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட் நீதிபதி நிலவரசன்,  காசிராமன் மற்றும் பாலு இருவர் மீதும் வழக்கு பதிந்து, சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருவிடைமருதுார் போலீசார், காசிராமன், பாலு மீது, ஆள்மாறாட்டத்தால் ஏமாற்றுவது, நீதிமன்றத்தின் பதிவுக் கட்டு அல்லது பொதுப் பதிவேடு முதலியவற்றைப் போலியாக தயாரித்தல், ஏமாற்றும் பொருட்டுப் போலியாகத் தயார் செய்தல், ஏமாற்றுதலும் பொருளை கொடுப்பதற்கு நேர்மையற்ற முறையில் இணங்கச் செய்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் தொடர்புடையவர்கள், போலியாக ஆவணம் தயாரித்து, ஆள்மாற்றாட்டம் செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு
இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Embed widget