மேலும் அறிய

திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு

கண்டெடுக்கப்பட்ட பெருமாள் மற்றும் அம்பாள் கற்சிலைகள் திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

தஞ்சாவூர்: திருவையாறு அருகே விவசாயத் தோட்டத்தில் மீன் குட்டை அமைப்பதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது, பூமிக்கடியில் இருந்து 2 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

திருவையாறு அருகே சிறுபுலியூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். விவசாயியான இவர், தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் மீன் குட்டை அமைக்க முடிவு செய்தார். இதற்காக நேற்று முன்தினம் மாலை பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. தோண்டி எடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு குட்டையைச் சுற்றிலும் கரை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு

பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தபோது, திடீரென பூமிக்கடியில் இருந்து கற்கள் போன்ற பொருட்கள் தென்பட்டன. இதனைப் பார்த்த பொக்லைன் இயந்திரத்தை இயக்கியவர் உடனடியாக பணியை நிறுத்தினார். இதையடுத்து அய்யப்பன் மற்றும் அங்கு இருந்தவர்கள், அந்த இடத்தில் என்ன இருக்கிறது என்பதை அறியும் வகையில் கைகளாலும், கடப்பாரை உள்ளிட்ட கருவிகளாலும் கவனமாக மண்ணை அகற்றினர்.

அப்போது மண்ணுக்குள் 2 கற்சிலைகள் புதைந்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சுற்றிலும் இருந்த மண்ணை அகற்றியபோது, சுமார் இரண்டரை அடி உயரம் கொண்ட பெருமாள் சிலையும், ஒன்றரை அடி உயரம் கொண்ட அம்பாள் சிலையும் இருப்பது தெரியவந்தது. இதனால் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.

பூமிக்கடியில் இருந்து சிலைகள் கிடைத்த தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் சிலைகளை மிகவும் பாதுகாப்பாக அங்கிருந்து எடுத்தனர். அவற்றின் மீது இருந்த மண் மற்றும் அழுக்குகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்கள் சிலைகளுக்கு வழிபாடு நடத்தினர்.

இதுகுறித்து உடனடியாக வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அதிகாரிகள் சம்பவ இடம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மேலும், பூமிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 2 கற்சிலைகளையும் உரிய பாதுகாப்புடன் திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, நேற்று கண்டெடுக்கப்பட்ட பெருமாள் மற்றும் அம்பாள் கற்சிலைகள் திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இந்த சிலைகள் எந்த காலத்தைச் சேர்ந்தவை, அவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன, அவை எவ்வாறு அந்த இடத்தில் புதைந்தன என்பது குறித்து அதிகாரிகள் மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்ட பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீன் குட்டை அமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது எதிர்பாராதவிதமாக 2 கற்சிலைகள் கிடைத்த சம்பவம் சிறுபுலியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அப்பகுதி மக்களிடையே வரலாற்று ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு
இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Embed widget