மேலும் அறிய

பூண்டு, தக்காளி விலை உயர்வால் தஞ்சையில் குடும்பத்தலைவிகள் பெரும் கவலை

தஞ்சாவூரில் பூண்டு மற்றும் தக்காளி விலை உயர்ந்துள்ளதால் குடும்பத் தலைவிகள் கவலையில் உள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பூண்டு மற்றும் தக்காளி விலை உயர்ந்துள்ளதால் குடும்பத் தலைவிகள் கவலையில் உள்ளனர். சமையலுக்கு முக்கியமாக தேவைப்படும் பூண்டு, தக்காளி ஆகியவை கடந்த சில மாதங்களாக விலை உயர்வும் பின்னர் குறைவதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது பல வாரங்களாக இறங்கு முகத்தில் இருந்த பூண்டு, தக்காளி விலை விர்ரென்று உயர்ந்து வருகிறது. 

நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தை
 
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு திருவையாறு, கண்டியூர், திருப்பூந்துருத்தி, பள்ளிஅக்ரஹாரம், மருங்குளம், வேங்கராயன்குடிகாடு, கொல்லாங்கரை, கண்டிதம்பட்டு, நடுவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தோட்ட சாகுபடி செய்யும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை தினசரி அதிகாலையிலேயே கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.

அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில்  பூண்டும் ஒன்று. சைவம், அசைவம் என இரண்டிலுமே பூண்டின் தேவை காலத்திற்கும் மாறாதது. தமிழ்நாட்டில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு பயிரிடப்பட்டாலும், மாநிலத்தின் பெரும்பான்மையான தேவையை ஈடுசெய்வதற்கு, மற்ற மாநிலங்களில் இருந்து பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

பூண்டு வரத்து மீண்டும் குறைந்துள்ளது

ஆண்டுதோறும் ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை செய்யப்படும். இந்நிலையில் பூண்டின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து வெகுவாக குறைந்ததால் கடந்த சில மாதங்களாக  பூண்டின் விலை அதிகளவில் இருந்தது. ஏறுமுகத்தில் சென்ற பூண்டின் விலை பின்னர், படிப்படியாக குறைந்தது. தற்போது தஞ்சை உழவர் சந்தைக்கு பூண்டு வரத்து மீண்டும் குறைந்துள்ளது. இதன் காரணமாக அதன் விலை மீண்டும் ஏறுமுகத்தில் சென்றுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பூண்டு விலை 1 கிலோ ரூ.220க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், வடமாநிலங்களில் இருந்து வரும் பூண்டின் வரத்தும் குறைந்துள்ளதால், அதன் விலை உச்சம் தொட்டுள்ளது.

சில்லறை கடைகளில் ரூ.300க்கு விற்பனை

சில்லறை விற்பனை கடைகளில் பூண்டு கிலோ ரூ.300க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முக்கியமாக குடும்பத் தலைவிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதேபோல் தஞ்சையில் வரத்து குறைவால்  தக்காளி விலை அதிகரித்துள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தக்காளிலை குறைவான அளவில் வாங்கிச் செல்கின்றனர்.


பூண்டு, தக்காளி விலை உயர்வால் தஞ்சையில் குடும்பத்தலைவிகள் பெரும் கவலை

தக்காளி விலை உயர்வு

தஞ்சையில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, மராட்டியும், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. 

இதேபோல் தஞ்சையில் இருந்தும் வெளியூர்களுக்கு காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். ஓசூர், தளிக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் தக்காளி தஞ்சைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தினமும் 3 ஆயிரம் பெட்டிகளில் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் வரத்து குறைந்த காரணத்தால் கடந்த சில நாட்களாக தஞ்சையில் தக்காளி விலை அதிகரித்து வருகிறது.  

ரூ.70 ஐ தொட்ட தக்காளி விலை

காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலையை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த இல்லத்தரசிகள் தக்காளியை வழக்கமாக வாங்கும் அளவை காட்டிலும் குறைந்த அளவே வாங்கி சென்றனர். இதேபோல் உணவகங்களுக்கு காய்கறி வாங்குபவர்களும் தக்காளியை குறைந்த அளவே வாங்கி சென்றனர். இதேபோல் முருங்கைக்காய், பீன்ஸ், அவரைக்காய் ஆகியவற்றின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. ரூ.96க்கு விற்ற முருங்கைக்காய் நேற்று ரூ.110க்கும், ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ்ரூ.146க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
Embed widget