மேலும் அறிய

தஞ்சாவூர்: மக்காச்சோளத்துக்கு இழப்பீடு கொடுக்காததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மக்காச்சோளத்துக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் மக்காச்சோள பயிர்களை கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டம்

இழப்பீடு கொடுக்காததை கண்டித்து மக்காச்சோள பயிருடன் ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள்:

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மக்காச்சோளத்துக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் மக்காச்சோள பயிர்களை கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சையில் முக்கிய சாகுபடி பயிர் என்றால் அது நெல் மட்டும்தான். இருப்பினும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்காச்சோளம், கம்பு போன்றவற்றையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். மாற்றுப்பயிராக இதை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளத்தின் தாயகம் மத்திய அமெரிக்கா என்று கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அமெரிக்க கண்டம் முழுதும் பரவியது. 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐரோப்பியர்களுக்கு அமெரிக்காவுடன் ஏற்பட்ட தொடர்புகளைத் தொடர்ந்து இது உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது.

தற்போது மக்காச்சோளம் உலகம் முழுவதும் பயிரிடப்படும் ஒரு உணவுத் தானியம் ஆகும். இந்தியா, சீனா, பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் அதிகம் பயிரிடப்படுகிறது. இவற்றைப் பெரும்பாலும் சோளப்பொரி செய்யவே பயன்படுத்துகின்றனர். மக்காச்சோளம் மானாவாரியாக ஆடி (ஜீன் – ஜீலை) மற்றும் புரட்டாசி (செப்டம்பர் – அக்டோபர் ) மாதத்திலும், இறவைப் பயிராக தை (ஜனவரி – பிப்ரவரி) மற்றும் சித்திரை (ஏப்ரல் – மே) மாதத்திலும் சாகுபடி செய்ய ஏற்றது. 60 மற்றும் 70ஆம் நாட்களில் கதிர்கள் ஒரே சீராக வளரத் தொடங்கும். 100ஆம் நாளில் கதிர்களை உரித்துப் பார்த்தால் சிவப்பு நிறத்தில் மணிகள் காணப்படும்.


தஞ்சாவூர்: மக்காச்சோளத்துக்கு இழப்பீடு கொடுக்காததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் உட்பட பல பகுதிகளில் மக்காசோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் இயற்கை இடர்பாடுகளால் மக்காச்சோளம் சாகுபடி பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டமடைகின்றனர். இந்நிலையில் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தஞ்சாவூர் மாவட்ட காவிரி  விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இன்று மக்காச்சோளத்திற்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாயி ஆனந்தி தலைமை வகித்தார். கோரிக்களை முன் வைத்து சங்க செயலாளர் சுந்தரவிமல்நாதன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடுகளை காப்பீடு நிறுவனங்கள் உரிய நேரத்தில் வழங்குவதில்லை. காலதாமதமாக வழங்கினாலும் அதனை விவசாயிகளுக்கு வட்டியுடன் வழங்க வேண்டும் என 2019 -ம் ஆண்டு சட்ட திருத்தம் செய்யப்பட்ட போதும், அதனை காப்பீடு நிறுவனங்கள் பின்பற்றவில்லை.


தஞ்சாவூர்: மக்காச்சோளத்துக்கு இழப்பீடு கொடுக்காததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

மேலும் காப்பீடு பற்றிய விவரங்களை விவசாயிகளுக்கு நிறுவனங்கள் தெரியப்படுத்துவதில்லை. இதனை மத்திய, மாநில மற்றும் காப்பீடு நிறுவனங்கள் கண்டு கொள்ளாததை கண்டித்தும், மக்களாச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மக்காச்சோள சாகுபடி செய்த விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர்.பின்னர் கோட்டாட்சியர் லதாவிடம் கோரிக்கை மனுவினை விவசாயிகள் வழங்கினர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget