மேலும் அறிய

தஞ்சை: தொடர் விலைவீழ்ச்சி! 143 தென்னை மரங்களை கண்ணீரோடு வெட்டி சாய்த்த விவசாயி!

பிள்ளையை போல் வளர்த்த தென்னை மரங்களை கண்களில் ஈரக்கசிவுடன் வெட்டி விட்டு மாற்றுத் தொழிலில் இறங்கி உள்ளார் தஞ்சாவூரின் தென்னை விவசாயி ஒருவர்.

பிள்ளையை போல் வளர்த்த தென்னை மரங்களை கண்களில் ஈரக்கசிவுடன் வெட்டி விட்டு மாற்றுத் தொழிலில் இறங்கி உள்ளார் தென்னை விவசாயி ஒருவர். இது தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடந்த வேதனை மிகுந்த சம்பவம்.

தேங்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்ததால், வருவாய் இழப்பால் மனமுடைந்த விவசாயி ஒருவர் தனது இரண்டு ஏக்கரில் இருந்த 143 தென்னை மரங்களை மனதில் வலியோடும், கண்ணில் கண்ணீரோடும் வெட்டி அழித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக தென்னை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த கஜா புயலின் போது ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதனால் இதை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எஞ்சிய மரங்களை காப்பாற்றிய விவசாயிகளுக்கு தற்போது தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து அடுத்த சூறாவளி புயல் போல் வெகுவாக பாதித்துள்ளது.

 


தஞ்சை: தொடர் விலைவீழ்ச்சி! 143 தென்னை மரங்களை கண்ணீரோடு வெட்டி சாய்த்த விவசாயி!

இதனால் தென்னை விவசாயமே வேண்டாம் என்று கைவிடும் அளவிற்கு வந்துள்ளனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கீழதிருப்பந்துருந்தி பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (57) என்பவர் தேங்காய் விலை வீழ்ச்சியால் பெரிதாக பாதிக்கப்பட்டார். இவருக்கு கண்டியூரில் சுமார் இரண்டு ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. பெற்ற பிள்ளைகளுக்கும் மேலாக தென்னம்பிள்ளைகளை வளர்த்து அவை உயர்ந்து நின்றதை கண்டு மனம் மகிழ்ந்தவர் இன்று தேங்காய் விலை கடுமையான வீழ்ச்சியடைந்ததால் தான் வளர்த்த 143 தென்னை மரங்களை வெட்டி அழித்து விட்டு மாற்று பயிர்களை சாகுபடி செய்ய திட்டமிட்டார். இதற்காக தென்னை மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். கண்களில் கண்ணீர் வழிய வெட்டுண்டு சாய்ந்த மரங்களை தடவி கொடுத்து வேதனையுடன் அவர் கூறியதாவது; விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் தேங்காயை குறைந்த விலைக்கு வாங்கி சென்று, வெளி சந்தையில் 30 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.


தஞ்சை: தொடர் விலைவீழ்ச்சி! 143 தென்னை மரங்களை கண்ணீரோடு வெட்டி சாய்த்த விவசாயி!

இந்நிலையில், ஒரு மரத்தில் தேங்காய் பறிக்க ஆள் கூலி குறைந்தது 40 ரூபாயும், வெட்டி தேங்காயை அள்ள அரை நாள் சம்பளம் 300 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் பெரும் வருவாய் இழப்பு தான் ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தேங்காய் விலை பெரும் வீழ்ச்சியடைந்துள்ளதால், இனி இதனால் பலன் இல்லை என முடிவு செய்து மாற்று பயிர் சாகுபடி செய்யலாம் என திட்டமிட்டுள்ளேன். இருந்தாலும், அனைத்து மரங்களும் நன்றாக காய்க்க கூடிய மரங்கள். பிள்ளைகளை போல் வளர்த்த தென்னை மரங்களை வெட்டி மரக்கடைக்கு அனுப்புவது வேதனையாக தான் உள்ளது. மனதில் கோடாரி வெட்டு விழுந்தது போல் உணர்கிறேன். ஆனால் வேறு வழியின்றி இவற்றை வெட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்று வேதனையுடன் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

அஜித் வீட்டில் விஜய்.. ”நான் இருக்கேன் மா” கையை இருகிப்பிடித்து ஆறுதல் சொன்ன தவெக தலைவர்..
அஜித் வீட்டில் விஜய்.. ”நான் இருக்கேன் மா” கையை இருகிப்பிடித்து ஆறுதல் சொன்ன தவெக தலைவர்..
Hari Nadar : ‘சிறைக்கு சென்றவருடன் அமைச்சர் பெரியகருப்பன்’ ஹரி நாடாரை அருகே வைத்துக்கொண்டது ஏன்..? – பரபரப்பு பின்னணி..!
‘சிறைக்கு சென்றவருடன் அமைச்சர் பெரியகருப்பன்’ ஹரி நாடாரை அருகே வைத்துக்கொண்டது ஏன்..?
அன்றே மோசடி செய்த நிகிதா.. அதுவும் அவர் பேர்ல? அஜித்குமார் மரண வழக்கில் புதிய திருப்பம்
அன்றே மோசடி செய்த நிகிதா.. அதுவும் அவர் பேர்ல? அஜித்குமார் மரண வழக்கில் புதிய திருப்பம்
Police Attack New Video: தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?
Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அஜித் வீட்டில் விஜய்.. ”நான் இருக்கேன் மா” கையை இருகிப்பிடித்து ஆறுதல் சொன்ன தவெக தலைவர்..
அஜித் வீட்டில் விஜய்.. ”நான் இருக்கேன் மா” கையை இருகிப்பிடித்து ஆறுதல் சொன்ன தவெக தலைவர்..
Hari Nadar : ‘சிறைக்கு சென்றவருடன் அமைச்சர் பெரியகருப்பன்’ ஹரி நாடாரை அருகே வைத்துக்கொண்டது ஏன்..? – பரபரப்பு பின்னணி..!
‘சிறைக்கு சென்றவருடன் அமைச்சர் பெரியகருப்பன்’ ஹரி நாடாரை அருகே வைத்துக்கொண்டது ஏன்..?
அன்றே மோசடி செய்த நிகிதா.. அதுவும் அவர் பேர்ல? அஜித்குமார் மரண வழக்கில் புதிய திருப்பம்
அன்றே மோசடி செய்த நிகிதா.. அதுவும் அவர் பேர்ல? அஜித்குமார் மரண வழக்கில் புதிய திருப்பம்
Police Attack New Video: தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
Embed widget