மேலும் அறிய

Buddha statue: தஞ்சை மாவட்டம் கீழப்பழையாறையில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலை தலை

கி.மு. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் அரசாண்ட அசோகரின் காலத்திலேயே தென்னிந்தியாவில் புத்த மதம் பரவியதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.

தஞ்சாவூர்: தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் வட்டத்துக்குள்பட்ட பட்டீஸ்வரம் அருகே கீழப்பழையாறையில் கி.பி. 10-11 ஆம் நூற்றாண்டைச் சாா்ந்த புத்தா் சிலையின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற உதவிப் பதிவாளரும், ஆய்வாளருமான முனைவா் பா.ஜம்புலிங்கம் தெரிவித்துள்ளதாவது:

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயில் புலவா் ச. செல்வசேகருடன் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட களப்பணியின்போது தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் அருகே கீழப்பழையாறையில் ஒரு தென்னந்தோப்பில் 50 செ.மீ. உயரமுள்ள ஒரு புத்தா் சிலையின் தலைப்பகுதியைக் காணமுடிந்தது. இது கி.பி. 10-11 ஆம் நூற்றாண்டைச் சாா்ந்தது.

சோழ நாட்டில் காணப்படுகிற புத்தா் சிலைகளின் கூறுகளான சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதற்கு மேல் ஞானத்தை உணா்த்தும் தீச்சுடா், நெற்றியில் திலகக்குறி ஆகியவற்றுடன் இந்தச் சிலை உள்ளது. மூக்கும், காதுகளின் கீழ்ப்பகுதியும் சிதைந்துள்ளன. இந்தச் சிலை, உடற்பகுதியுடன் பழையாறையில் முன்பிருந்த புத்தா் கோயிலிலோ, விகாரத்திலோ வழிபாட்டில் இருந்திருக்கலாம்.

ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டம், திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் 60-க்கும் அதிகமான புத்தா் சிலைகள் உள்ளன. அவற்றில் தஞ்சாவூா் மாவட்டத்தில் அருந்தவபுரம், கோபிநாதப்பெருமாள்கோயில், சோழன்மாளிகை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், பெரண்டாக்கோட்டை, மணலூா், மதகரம், மாத்தூா், மானம்பாடி, முழையூா், விக்ரமம், வையச்சேரி ஆகிய இடங்களில் புத்தா் சிலைகள் உள்ளன. 

அருந்தவபுரம், கோபிநாதப்பெருமாள்கோயில், மணலூா் ஆகிய இடங்களில் தலையின்றியும், பெரண்டாக்கோட்டை, முழையூா், வையச்சேரி ஆகிய இடங்களில் வெறும் தலைப்பகுதியும் உள்ளன. பட்டீஸ்வரம், பெரண்டாக்கோட்டை, மானம்பாடி, விக்ரமம் ஆகிய இடங்களில் உள்ள சிலைகள் வழிபாட்டில் உள்ளன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் பழையாறைப் பகுதியில் அதிகமான புத்தா் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை இப்பகுதியில் பௌத்தம் செழித்து இருந்ததை உணா்த்தும் சான்றுகளாக உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தோன்றிய புத்த மதம் உலகம் முழுவதும் பரவிய வரலாறு சுவாரசியமானது. இன்று இந்தியாவைவிட சீனா, ஜப்பான், இலங்கை போன்ற அயல்நாடுகளில் அதிகம் பின்பற்றப்படும் இந்த மதம், ஒரு காலத்தில் நம் தமிழகம் எங்கும் பரவிப் படர்ந்திருந்தது. 

கி.மு. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் அரசாண்ட அசோகரின் காலத்திலேயே தென்னிந்தியாவில் புத்த மதம் பரவியதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. சௌராஷ்டிரா, கின்னாரிலுள்ள அவரது கல்வெட்டு ஒன்று அவர் தென்னிந்தியாவிற்கு மருத்துவ வசதிகளைச் செய்து கொடுத்ததற்கான வாசகங்களோடு உள்ளது. பெஷாவரிலுள்ள இன்னொரு கல்வெட்டு, புத்த மதத்தை சோழ, பாண்டிய அரசாட்சிகளில் பரப்புவதற்காக மதகுருமார்களையும் சீடர்களையும் அனுப்பியதை எடுத்துரைக்கிறது.

ஆனால், இதற்கெல்லாம் முன்னரே சங்க இலக்கியமான புறநானூற்று செய்யுள் ஒன்றில் பௌத்த மதம் பற்றிய சிறு குறிப்பு காணப்படுகிறது. கி.பி 2 முதல் 7-ம் நூற்றாண்டு வரை உருவான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற ஐம்பெருங்காப்பியங்கள் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்களில் புத்த மதத்தின் செல்வாக்கு பளிச்சிடுகிறது. குறிப்பாக, சீத்தலை சாத்தனாரின் ‘மணிமேகலை’ காவியம் புத்த மதத்தின் கொள்கைகளை விரிவாகப் பேசுகிறது.

அன்றைய தமிழகத்தில் புத்த மத செல்வாக்கு பெற்ற இடங்களாக காஞ்சிபுரமும், நாகப்பட்டினமும் விளங்கின. கி.பி 640களில் காஞ்சி வந்த சீனாவைச் சேர்ந்த யுவான் சுவாங், காஞ்சியில் புத்த ஸ்தூபிகள் மற்றும் விகாரைகள் என்றழைக்கப்படும் கோயில்கள் இருந்ததற்கான சுவடுகளைப் பற்றி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS ADMK: கோட்டைவிடும் அதிமுக, தீவிரம் காட்டாத எடப்பாடி? டேமேஜ் கண்ட்ரோலில் திமுக மும்முரம், ஸ்டாலின் மூவ்
EPS ADMK: கோட்டைவிடும் அதிமுக, தீவிரம் காட்டாத எடப்பாடி? டேமேஜ் கண்ட்ரோலில் திமுக மும்முரம், ஸ்டாலின் மூவ்
Modi in Ghana: கானாவில் 21 குண்டுகள் முழங்க மோடிக்கு வரவேற்பு; ‘ஹரே கிருஷ்ணா‘ பாடல் பாடி வரவேற்ற இந்தியர்கள்
கானாவில் 21 குண்டுகள் முழங்க மோடிக்கு வரவேற்பு; ‘ஹரே கிருஷ்ணா‘ பாடல் பாடி வரவேற்ற இந்தியர்கள்
Shubman Gill: நான் தான் இருக்கேன்ல.. சதம் விளாசி மாஸ் காட்டிய கேப்டன் கில், இங்கிலாந்தில் பாரத் ஆர்மி சம்பவம்
Shubman Gill: நான் தான் இருக்கேன்ல.. சதம் விளாசி மாஸ் காட்டிய கேப்டன் கில், இங்கிலாந்தில் பாரத் ஆர்மி சம்பவம்
Auto Sale June 2025: வாங்கி குவித்த இந்தியர்கள் - டாடா மேல என்னப்ப அவ்ளோ காண்டு? ரைசிங் ஸ்டார்களாகும் கியா, ஸ்கோடா
Auto Sale June 2025: வாங்கி குவித்த இந்தியர்கள் - டாடா மேல என்னப்ப அவ்ளோ காண்டு? ரைசிங் ஸ்டார்களாகும் கியா, ஸ்கோடா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?
Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: கோட்டைவிடும் அதிமுக, தீவிரம் காட்டாத எடப்பாடி? டேமேஜ் கண்ட்ரோலில் திமுக மும்முரம், ஸ்டாலின் மூவ்
EPS ADMK: கோட்டைவிடும் அதிமுக, தீவிரம் காட்டாத எடப்பாடி? டேமேஜ் கண்ட்ரோலில் திமுக மும்முரம், ஸ்டாலின் மூவ்
Modi in Ghana: கானாவில் 21 குண்டுகள் முழங்க மோடிக்கு வரவேற்பு; ‘ஹரே கிருஷ்ணா‘ பாடல் பாடி வரவேற்ற இந்தியர்கள்
கானாவில் 21 குண்டுகள் முழங்க மோடிக்கு வரவேற்பு; ‘ஹரே கிருஷ்ணா‘ பாடல் பாடி வரவேற்ற இந்தியர்கள்
Shubman Gill: நான் தான் இருக்கேன்ல.. சதம் விளாசி மாஸ் காட்டிய கேப்டன் கில், இங்கிலாந்தில் பாரத் ஆர்மி சம்பவம்
Shubman Gill: நான் தான் இருக்கேன்ல.. சதம் விளாசி மாஸ் காட்டிய கேப்டன் கில், இங்கிலாந்தில் பாரத் ஆர்மி சம்பவம்
Auto Sale June 2025: வாங்கி குவித்த இந்தியர்கள் - டாடா மேல என்னப்ப அவ்ளோ காண்டு? ரைசிங் ஸ்டார்களாகும் கியா, ஸ்கோடா
Auto Sale June 2025: வாங்கி குவித்த இந்தியர்கள் - டாடா மேல என்னப்ப அவ்ளோ காண்டு? ரைசிங் ஸ்டார்களாகும் கியா, ஸ்கோடா
அஜித் வீட்டில் விஜய்.. ”நான் இருக்கேன் மா” கையை இருகிப்பிடித்து ஆறுதல் சொன்ன தவெக தலைவர்..
அஜித் வீட்டில் விஜய்.. ”நான் இருக்கேன் மா” கையை இருகிப்பிடித்து ஆறுதல் சொன்ன தவெக தலைவர்..
Hari Nadar : ‘சிறைக்கு சென்றவருடன் அமைச்சர் பெரியகருப்பன்’ ஹரி நாடாரை அருகே வைத்துக்கொண்டது ஏன்..? – பரபரப்பு பின்னணி..!
‘சிறைக்கு சென்றவருடன் அமைச்சர் பெரியகருப்பன்’ ஹரி நாடாரை அருகே வைத்துக்கொண்டது ஏன்..?
அன்றே மோசடி செய்த நிகிதா.. அதுவும் அவர் பேர்ல? அஜித்குமார் மரண வழக்கில் புதிய திருப்பம்
அன்றே மோசடி செய்த நிகிதா.. அதுவும் அவர் பேர்ல? அஜித்குமார் மரண வழக்கில் புதிய திருப்பம்
Police Attack New Video: தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
Embed widget