மேலும் அறிய

தஞ்சை மாவட்ட மக்களே உங்கள் கவனத்திற்கு... 19, 20ம் தேதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்

பேராவூரணி வட்டாரத்தில் நாளை 19.06.2025 அன்று பாலத்தளி குரூப் எண்ணானிவயல் நெல்கொள்முதல் நிலையத்திலும், பூவாளூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், களத்தூர் அய்யனார் கோவிலிலும் நடக்கிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 3ம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம் நடக்க உள்ளது. உங்கள் பகுதி இருந்தால் தவறவிடாமல் பயன் பெறுங்கள். நாளையும், நாளை மறுநாளும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி, கும்பகோணம் வட்டாரத்தில் நடக்கிறது.

அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு நிலையான வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையில் அனைத்து நகர்ப்புறங்களிலும், ஊராட்சிப்பகுதிகளிலும்  தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி மக்களுடன் முதல்வர் திட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக மூன்றாவது கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம் அனைத்து சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் ஆதிதிராவிடர் குடியிருப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதிகளில் சம்மந்தப்பட்ட துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டத்தை செயல்படுத்தவும் அரசாணை மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் தொடக்க நிகழ்ச்சி கடந்த 29.01.2025 அன்று  முதலமைச்சர் ஆணைக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் 29.01.2025 அன்று பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராம ஊராட்சிகளிலும், 06.02.2025 அன்று பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராம ஊராட்சிகளிலும், 12.02.2025 அன்று தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளிலும், 07.03.2025 அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளிலும் நடந்தது. 

இதேபோல் 11.03.2025 அன்று திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளிலும், 16.05.2025 அன்று திருவையாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளிலும், 31.05.2025 அன்று பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளிலும் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 05.06.2025 அன்று பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளிலும் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது வரும் 20.06.2025 அன்று பாபநாசம் (ம) கும்பகோணம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள். இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துக் கொண்டு தங்கள் உரிய கோரிக்கைகளை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பாபநாசம் (ம) கும்பகோணம் வட்டாரங்களில் வரும் 20.06.2025 அன்று சருக்கை தென்சருக்கை சமுதாயக்கூடத்திலும், உம்பளபாடி காவேரி (மேட்டுத்தெரு) அரசலாறு தலைப்பு (நீர்வளத்துறை) வளாகத்திலும், கோவிந்தநாட்டுச்சேரி புத்தூர் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்திலும், ரெகுநாதபுரம் ஸ்ரீசன் மஹாலிலும், திருவலஞ்சுழி வெண்ணிலா திருமண மண்டபத்திலும், திருநல்லூர் மகாலெட்சுமி திருமண மண்டபத்திலும், உத்தமதானி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், திப்பிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், உள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வலையப்பேட்டை சமுதாயகூடத்திலும் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடைபெறவுள்ளன.

பேராவூரணி வட்டாரத்தில் நாளை 19.06.2025 அன்று பாலத்தளி குரூப் எண்ணானிவயல் நெல்கொள்முதல் நிலையத்திலும், பூவாளூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், களத்தூர் அய்யனார் கோவிலிலும், பெரியநாயகிபுரம் ஊராட்சி ஆவணம் சமுதாயக்கூடத்திலும். அம்மையாண்டி ஊராட்சி ஏனாதிகரம்பை அரசு உயர்நிலைப்பள்ளியிலும், ஊமத்தநாடு ஊராட்சி உடையநாடு D.G.L திருமண மஹாலிலும் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடைபெறவுள்ளன.

மேற்கண்ட முகாம் நடைபெறும் இடங்களில் முகாம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே நிர்ணயிக்கப்பட்ட சேவைகளுக்கு தொடர்புடைய துறை அலுவலர்கள் முகாம் நடைபெறும் இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கியும். களப்பணியாளர்கள் துறையின் சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விரிவாக எடுத்துரைத்து, தேவையான சேவைகளுக்கேற்ப ஆவணங்கள் குறித்தும் தெளிவுரைகள் பெற்று முன்னரே பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று முகாம் நாளன்று அம்மனுக்களை இணையவழியில் பதிவு செய்து தீர்வு காணப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்விபரங்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சிகள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். எனவே, மேற்கண்ட ஊராட்சிப்பகுதிகளில் 19.06.2025 மற்றும் 20.06.2025 அன்று காலை 10 மணி முதல் நடைபெறவிருக்கும் முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் 30 நாட்களில் மக்களுக்கு வழங்கப்படும். இத்தகவலலை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் சூரியனுக்கு இன்று ‘ஹீட்’ ஏறிடுச்சு! 38 டிகிரி வெப்பம்... ஏசி காற்று கூட செம சூடு
தஞ்சையில் சூரியனுக்கு இன்று ‘ஹீட்’ ஏறிடுச்சு! 38 டிகிரி வெப்பம்... ஏசி காற்று கூட செம சூடு
கோவிலுக்குள் செல்லும் பாதை எங்கே? ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்: கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்
கோவிலுக்குள் செல்லும் பாதை எங்கே? ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்: கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Embed widget