மேலும் அறிய

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் நடவு செய்த பெண் மின்னல் தாக்கி உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்

’’இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு, தமிழக அரசு, இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை’’

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, ஆலடிக்குமுளை ஊராட்சி,  சமத்துவபுரம் அருகே உள்ள வயலில் மின்னாடி கொள்ளை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மங்களம்(45) நறுவழிக்கொள்ளை பகுதியைச் சேர்ந்த வெங்கடசுப்பையா மனைவி லாதா (44) , மின்னடி கொள்ளை பகுதியைச் சேர்ந்த புதுமைநாயகி, நறுவழிக்கொள்ளை பகுதியைச் சேர்ந்த கண்ணன் (42) ஆகியோர் நடவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். விவசாய கூலி தொழிலாளர்களான இவர்கள் மற்றும் சிலரும், தினந்தோறும் விவசாயப்பணிக்காக அங்கு செல்வது வழக்கம். பல்வேறு இடங்களில் சம்பா-தாளடி நடவுப்பணி நடைபெறுவதால், விவசாயப்பணி மும்முரமாகி வருகிறது.  மேலும், நாற்றுக்கள் நடவு செய்வதற்கு நாட்களாகி வருவதால், நடவுப்பணி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  இதற்கிடையில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டிரஸ், பொருட்கள், வாங்குவதற்கும், சீர் வரிசைகள் செய்யவும், பணம் தேவைப்படுவதால், ஏழை கூலி விவசாய தொழிலாளர்கள், பலத்த மழை பெய்தாலும், விடாமல் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகின்றது. மாவட்டத்தில் 128.80 மிமீ அளவில் மழை பெய்துள்ளது.  இதே போல் பட்டுக்கோட்டையை அடுத்த ஆலடிக்குமுளை பகுதியில் பலத்த இடியுடன் மழை பெய்தது அப்போது மின்னல் தாக்கியதில் வயலில் நடவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மங்களம் (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மேலும் லதா, புதுமைநாயகி,கண்ணன் ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனே, அருகிலுள்ள அரசு மருத்தவமனைக்கு சிகிச்சைகாக அழைத்து சென்றனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சூர்யாபுகழேந்தி, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன் ஆகியோர் கொடுத்த தகவல் அளித்தார். இதனையறிந்த பட்டுக்கோட்டை போலீசார்  சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர் கூறுகையில், சம்பா-தாளடி நடவுப்பணி இப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. நடவு செய்வதற்கு பெரும்பாலும் பெண்கள் வருவார்கள். திடீரென பலத்த மழை பெய்ததால், அதைப்பற்றி கவலைப்படாமல், பிளாஸ்டிக் கேரி பைகளை மாட்டி கொண்டு, தலை நனையாமல், நடவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பலத்த சத்ததுடன் இடியுடன் மின்னல் தோன்றியது. அப்போது வயலில் நடவுப்பணியில் இருந்த ஒரு பெண், மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் அருகில் நடவு பணியில் ஈடுபட்டிருந் மூன்று பேர் மீது லேசாக தாக்கியதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு, தமிழக அரசு, இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

தஞ்சாவூர்: குடிப்பதற்கு பணம் தராததால் மனைவியை கொன்று கணவன் தற்கொலை

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget