மேலும் அறிய

’கார்ட் மேல இருக்க 16 டிஜிட் நம்பர் சொல்லுங்க’ - விவசாயி வங்கிக்கணக்கில் 1.24 லட்சம் மோசடி

’’மூன்று முறை வந்த OTP எண் தகவலையும் அந்த மர்மநபர் கேட்டு தெரிந்து கொண்டு, செல்போனை துண்டித்து விட்டார்’’

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கீழமேடு, கோட்டைக்குளத்தை சேர்ந்தவர் துரைமாணிக்கம் (70) விவசாயி. இவரது மகன் இளங்கோ (49), இவர், பட்டுக்கோட்டை, சாமியார்மடம் பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். இளங்கோவனின்,  செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் நாங்கள் பாங்க் ஆப் பரோடா வங்கியிலிருந்து பேசுகிறோம். உங்கள் பழைய ஏடிஎம் கார்டு காலாவதியானதால், புதியதாக ஏடிஎம் கார்டு தருகிறோம். பழைய ஏடிஎம் கார்டு எண் மற்றும் தகவல்களை தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார். உடனே இளங்கோ தனது வங்கி கணக்கு புத்தகத்தை படம் எடுத்து அனுப்பியுள்ளார். அதனை  சோதனை செய்து பார்த்த அந்த நபர், உங்களது கணக்கில் குறைவாக பணம் உள்ளது. அதனால் புதிய ஏடிஎம் கார்டை பின்னர் அனுப்புவதாக கூறியுள்ளார். மேலும், உங்களிடம் வேறு வங்கி கணக்கு உள்ளதா என்று கேட்டுள்ளார்.  ஆனால் இளங்கோ தன்னிடம் ஏடிஎம் இல்லை.

தனது தந்தையிடம் ஏடிஎம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அதற்கு தொலைபேசியில் பேசிய நபர் இளங்கோவின் தந்தை ஏடிஎம் கார்டை புகைப்படம் எடுத்து அனுப்பச் சொல்லி இருக்கிறார். அதன்படி இளங்கோவும் தனது தந்தை துரைமாணிக்கத்தின் பட்டுக்கோட்டை இந்தியன் வங்கி ஏடிஎம் கார்டு தகவல்களை தெரிவித்து புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளார்.  போனில் பேசிய மர்மநபர்,  உங்களது செல்போனுக்கு OTP எண் வரும் வந்தவுடன் கூறுங்கள் என்றார். அதனை தொடர்ந்து  மூன்று முறை வந்த OTP எண் தகவலையும் அந்த மர்மநபர் கேட்டு தெரிந்து கொண்டு, செல்போனை துண்டித்து விட்டார்.

அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் மூன்று தவணையாக 1.24 லட்சம், இளங்கோவனின் தந்தை துரை மாணிக்கத்தின் வங்கி கணக்கிலிருந்த பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்த இளங்கோவும், தந்தை துரைமாணிக்கமும், வங்கி கணக்கில் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து அதிர்ச்சியடைந்தனர். விவசாயம் செய்தும், டீக்கடையில் உழைத்து சம்பாதித்து, வங்கியில் சேமித்த பணம் திருட்டு போனதால், தந்தையும், மகனும் மன வேதனையடைந்தனர். இது குறித்து, இளங்கோ, தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணையும், எங்கிருந்து வந்தது, யார் பேசினார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநிலத்தை சேர்ந்த கும்பல், விவசாயயின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை நுாதன முறையில் திருடப்பட்டது. இது போன்ற செயல்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசார் கூறுகையில், மர்மநபர்கள், செல்போனில் பேசும் போது, அவர்களுக்கு ஏற்றவாறு பேசுகின்றனர். அதிகாரிகள் போல் பேசுவதால், பொது மக்கள், மர்மநபர்கள்  சொல்வதை கேட்கும் நிலை ஏற்படுகின்றது. இதனால் வங்கியில் வேறு ஏதேனும் பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காக, ஏழை, விவசாயிகள், மர்ம நபர்கள் பேசுவதற்கு செயல்படுகின்றனர். வங்கியிலிருந்தோ, ஏடிஎம் மையங்களிலிருந்தோ யாராவது பேசினால், மர்ம நபர்கள் பேசுவதை துண்டித்த விடவேண்டும். அந்த செல் போன் நம்பர் குறித்து புகார் செய்ய வேண்டும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Embed widget