மேலும் அறிய

’கார்ட் மேல இருக்க 16 டிஜிட் நம்பர் சொல்லுங்க’ - விவசாயி வங்கிக்கணக்கில் 1.24 லட்சம் மோசடி

’’மூன்று முறை வந்த OTP எண் தகவலையும் அந்த மர்மநபர் கேட்டு தெரிந்து கொண்டு, செல்போனை துண்டித்து விட்டார்’’

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கீழமேடு, கோட்டைக்குளத்தை சேர்ந்தவர் துரைமாணிக்கம் (70) விவசாயி. இவரது மகன் இளங்கோ (49), இவர், பட்டுக்கோட்டை, சாமியார்மடம் பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். இளங்கோவனின்,  செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் நாங்கள் பாங்க் ஆப் பரோடா வங்கியிலிருந்து பேசுகிறோம். உங்கள் பழைய ஏடிஎம் கார்டு காலாவதியானதால், புதியதாக ஏடிஎம் கார்டு தருகிறோம். பழைய ஏடிஎம் கார்டு எண் மற்றும் தகவல்களை தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார். உடனே இளங்கோ தனது வங்கி கணக்கு புத்தகத்தை படம் எடுத்து அனுப்பியுள்ளார். அதனை  சோதனை செய்து பார்த்த அந்த நபர், உங்களது கணக்கில் குறைவாக பணம் உள்ளது. அதனால் புதிய ஏடிஎம் கார்டை பின்னர் அனுப்புவதாக கூறியுள்ளார். மேலும், உங்களிடம் வேறு வங்கி கணக்கு உள்ளதா என்று கேட்டுள்ளார்.  ஆனால் இளங்கோ தன்னிடம் ஏடிஎம் இல்லை.

தனது தந்தையிடம் ஏடிஎம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அதற்கு தொலைபேசியில் பேசிய நபர் இளங்கோவின் தந்தை ஏடிஎம் கார்டை புகைப்படம் எடுத்து அனுப்பச் சொல்லி இருக்கிறார். அதன்படி இளங்கோவும் தனது தந்தை துரைமாணிக்கத்தின் பட்டுக்கோட்டை இந்தியன் வங்கி ஏடிஎம் கார்டு தகவல்களை தெரிவித்து புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளார்.  போனில் பேசிய மர்மநபர்,  உங்களது செல்போனுக்கு OTP எண் வரும் வந்தவுடன் கூறுங்கள் என்றார். அதனை தொடர்ந்து  மூன்று முறை வந்த OTP எண் தகவலையும் அந்த மர்மநபர் கேட்டு தெரிந்து கொண்டு, செல்போனை துண்டித்து விட்டார்.

அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் மூன்று தவணையாக 1.24 லட்சம், இளங்கோவனின் தந்தை துரை மாணிக்கத்தின் வங்கி கணக்கிலிருந்த பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்த இளங்கோவும், தந்தை துரைமாணிக்கமும், வங்கி கணக்கில் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து அதிர்ச்சியடைந்தனர். விவசாயம் செய்தும், டீக்கடையில் உழைத்து சம்பாதித்து, வங்கியில் சேமித்த பணம் திருட்டு போனதால், தந்தையும், மகனும் மன வேதனையடைந்தனர். இது குறித்து, இளங்கோ, தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணையும், எங்கிருந்து வந்தது, யார் பேசினார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநிலத்தை சேர்ந்த கும்பல், விவசாயயின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை நுாதன முறையில் திருடப்பட்டது. இது போன்ற செயல்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசார் கூறுகையில், மர்மநபர்கள், செல்போனில் பேசும் போது, அவர்களுக்கு ஏற்றவாறு பேசுகின்றனர். அதிகாரிகள் போல் பேசுவதால், பொது மக்கள், மர்மநபர்கள்  சொல்வதை கேட்கும் நிலை ஏற்படுகின்றது. இதனால் வங்கியில் வேறு ஏதேனும் பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காக, ஏழை, விவசாயிகள், மர்ம நபர்கள் பேசுவதற்கு செயல்படுகின்றனர். வங்கியிலிருந்தோ, ஏடிஎம் மையங்களிலிருந்தோ யாராவது பேசினால், மர்ம நபர்கள் பேசுவதை துண்டித்த விடவேண்டும். அந்த செல் போன் நம்பர் குறித்து புகார் செய்ய வேண்டும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget