மேலும் அறிய

அப்போ ஒலித்த சங்கு... இப்போ மீண்டும் ஒலிக்கிறது; தஞ்சை மாநகராட்சி நிர்வாகத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

இரண்டாம் உலகப்போரின் போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்குவதற்காக ஒலித்த சங்கு, நாளடைவில் பழுதாகி போக, அதை மீண்டும் பழுதுநீக்கி சுதந்திர தினத்தில் ஒலிக்க செய்துள்ளார் தஞ்சை மாநகராட்சி நிர்வாகம். 

சங்கே முழங்கு... சங்கே முழங்கு... எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்ற பாவேந்தர் பாரதிதாசனாரின் வரிகள் உள்ளத்தில் எழுச்சியை ஏற்படுத்தும். அதுபோல் இரண்டாம் உலகப்போரின் போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்குவதற்காக ஒலித்த சங்கு, நாளடைவில் பழுதாகி போக, அதை மீண்டும் பழுதுநீக்கி சுதந்திர தினத்தில் ஒலிக்க செய்துள்ளார் தஞ்சை மாநகராட்சி நிர்வாகம்.
 
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானம் பின்புறம் மின்சார வாரிய அலுவலகம் தற்போது உள்ள இடத்தில் போர் எச்சரிக்கை சங்கு அமைந்துள்ளது. கடந்த 1939 முதல் 1945-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. இந்த உலகப் போரின் போது இரவு நேரங்களில் விமானங்களால் குண்டுகள் வீசப்பட்டன. அப்போது தஞ்சாவூர் நகரம் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதற்காக விளக்குகள் அணைக்கப்படும்‌.

விளக்குகள் அணைக்கப்படுவதற்கு முன்னதாக சங்கு ஒலிக்கும். இந்த சங்கு ஒலித்த உடனே விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட வேண்டும் என்பது உத்தரவு. அவ்வாறு அணைக்கப்பட்டால் நகரம் இருக்கும் இடமே தெரியாது. இந்த காரணத்துக்காகத்தான் தஞ்சாவூரில் போர் சங்கு நிறுவப்பட்டது.


அப்போ ஒலித்த சங்கு... இப்போ மீண்டும் ஒலிக்கிறது; தஞ்சை மாநகராட்சி நிர்வாகத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

முற்றிலும் இரும்பு தூண்களை கொண்டு இந்த சங்கு அமைக்கப்பட்டது. மின்சார உதவியுடன் இந்த சங்கு ஒலித்தது. தஞ்சாவூர் நகரம் முழுவதும் கேட்கும் வகையில் நிறுவப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. போர் முடிவுற்ற பின்னர் சங்கு ஒலிப்பது நிறுத்தப்பட்டது. இருப்பினும் இந்த சங்கு பணியாளர்களின் வேலை நேரத்தை நினைவூட்டும் வகையில் தினமும் காலை 10 மணி, மதியம் 1 மணி, மாலை 5 மணி என மூன்று நேரம் ஒலிக்க வைக்கப்பட்டது. 1980 -ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த சங்கு ஒலிக்கவில்லை. முற்றிலும் நிறுத்தப்பட்டது. கண்டுக் கொள்வார் யாரும் இல்லாததால் பராமரிப்பு இன்றி வெகு காலமாக ஓய்விலேயே கிடந்தது.

இந்த சங்கை மீண்டும் இயக்க வேண்டும். தொழிலாளர்கள் வேலை நேரத்தை அறிந்து கொள்ள வேண்டும். தஞ்சை மாநகரில் மீண்டும் சங்கு ஒலிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்புகள் மாநகராட்சி ஆணையரை சந்தித்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் பரிசீலனை மேற்கொண்டனர். இரண்டாம் உலகப்போரின் போது ஒலித்த சங்கை மீண்டும் இயங்க செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சங்கை ஒலிக்க வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி பழைய சங்கு சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று சுதந்திர தினத்தன்று இந்த சங்கு ஒலிக்க வைக்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு சுவிட்சை அழுத்தி சங்கை ஒலிக்க வைத்தார். இதில் ஆணையர் சரவணக்குமார், மாமன்ற உறுப்பினர் மேத்தா, மாநகாட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், மேலாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து தினமும் காலை 6, 9 மதியம் 12, மாலை 6 இரவு 9 மணி என தினமும் ஐந்து முறை சங்கு ஒலிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார். சங்கை ஒலிக்கச்செய்ய நடவடிக்கை எடுத்த மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.


 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முன்பட்ட குறுவை: நாற்றங்கால் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சை விவசாயிகள்!
முன்பட்ட குறுவை: நாற்றங்கால் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சை விவசாயிகள்!
"கர்ம வினையின் கணக்குப்பிள்ளை: பாசக்கயிறோடு தீர்ப்பெழுதும் காலதேவன்!"
நல்லெண்ணெய்க்கு தரமான எள் விளைவிக்க என்ன செய்ய வேண்டும்?
நல்லெண்ணெய்க்கு தரமான எள் விளைவிக்க என்ன செய்ய வேண்டும்?
மண்ணின் உயிர் நண்பன் மண்புழு... மண்வளத்தை பெருக்கும் அற்புத சக்தி!
மண்ணின் உயிர் நண்பன் மண்புழு... மண்வளத்தை பெருக்கும் அற்புத சக்தி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்
’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்
CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
TN Weather Update: வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget