மேலும் அறிய

அப்போ ஒலித்த சங்கு... இப்போ மீண்டும் ஒலிக்கிறது; தஞ்சை மாநகராட்சி நிர்வாகத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

இரண்டாம் உலகப்போரின் போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்குவதற்காக ஒலித்த சங்கு, நாளடைவில் பழுதாகி போக, அதை மீண்டும் பழுதுநீக்கி சுதந்திர தினத்தில் ஒலிக்க செய்துள்ளார் தஞ்சை மாநகராட்சி நிர்வாகம். 

சங்கே முழங்கு... சங்கே முழங்கு... எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்ற பாவேந்தர் பாரதிதாசனாரின் வரிகள் உள்ளத்தில் எழுச்சியை ஏற்படுத்தும். அதுபோல் இரண்டாம் உலகப்போரின் போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்குவதற்காக ஒலித்த சங்கு, நாளடைவில் பழுதாகி போக, அதை மீண்டும் பழுதுநீக்கி சுதந்திர தினத்தில் ஒலிக்க செய்துள்ளார் தஞ்சை மாநகராட்சி நிர்வாகம்.
 
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானம் பின்புறம் மின்சார வாரிய அலுவலகம் தற்போது உள்ள இடத்தில் போர் எச்சரிக்கை சங்கு அமைந்துள்ளது. கடந்த 1939 முதல் 1945-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. இந்த உலகப் போரின் போது இரவு நேரங்களில் விமானங்களால் குண்டுகள் வீசப்பட்டன. அப்போது தஞ்சாவூர் நகரம் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதற்காக விளக்குகள் அணைக்கப்படும்‌.

விளக்குகள் அணைக்கப்படுவதற்கு முன்னதாக சங்கு ஒலிக்கும். இந்த சங்கு ஒலித்த உடனே விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட வேண்டும் என்பது உத்தரவு. அவ்வாறு அணைக்கப்பட்டால் நகரம் இருக்கும் இடமே தெரியாது. இந்த காரணத்துக்காகத்தான் தஞ்சாவூரில் போர் சங்கு நிறுவப்பட்டது.


அப்போ ஒலித்த சங்கு... இப்போ மீண்டும் ஒலிக்கிறது; தஞ்சை மாநகராட்சி நிர்வாகத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

முற்றிலும் இரும்பு தூண்களை கொண்டு இந்த சங்கு அமைக்கப்பட்டது. மின்சார உதவியுடன் இந்த சங்கு ஒலித்தது. தஞ்சாவூர் நகரம் முழுவதும் கேட்கும் வகையில் நிறுவப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. போர் முடிவுற்ற பின்னர் சங்கு ஒலிப்பது நிறுத்தப்பட்டது. இருப்பினும் இந்த சங்கு பணியாளர்களின் வேலை நேரத்தை நினைவூட்டும் வகையில் தினமும் காலை 10 மணி, மதியம் 1 மணி, மாலை 5 மணி என மூன்று நேரம் ஒலிக்க வைக்கப்பட்டது. 1980 -ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த சங்கு ஒலிக்கவில்லை. முற்றிலும் நிறுத்தப்பட்டது. கண்டுக் கொள்வார் யாரும் இல்லாததால் பராமரிப்பு இன்றி வெகு காலமாக ஓய்விலேயே கிடந்தது.

இந்த சங்கை மீண்டும் இயக்க வேண்டும். தொழிலாளர்கள் வேலை நேரத்தை அறிந்து கொள்ள வேண்டும். தஞ்சை மாநகரில் மீண்டும் சங்கு ஒலிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்புகள் மாநகராட்சி ஆணையரை சந்தித்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் பரிசீலனை மேற்கொண்டனர். இரண்டாம் உலகப்போரின் போது ஒலித்த சங்கை மீண்டும் இயங்க செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சங்கை ஒலிக்க வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி பழைய சங்கு சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று சுதந்திர தினத்தன்று இந்த சங்கு ஒலிக்க வைக்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு சுவிட்சை அழுத்தி சங்கை ஒலிக்க வைத்தார். இதில் ஆணையர் சரவணக்குமார், மாமன்ற உறுப்பினர் மேத்தா, மாநகாட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், மேலாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து தினமும் காலை 6, 9 மதியம் 12, மாலை 6 இரவு 9 மணி என தினமும் ஐந்து முறை சங்கு ஒலிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார். சங்கை ஒலிக்கச்செய்ய நடவடிக்கை எடுத்த மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.


 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Seeman About Kaliammal: காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Seeman About Kaliammal: காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம்   ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...”  எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம் ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...” எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Maha Shivratri 2025: ஓம் சிவ ஓம்.. இன்று மகா சிவராத்திரி! சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்!
Maha Shivratri 2025: ஓம் சிவ ஓம்.. இன்று மகா சிவராத்திரி! சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்!
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
Embed widget