மேலும் அறிய

அப்போ ஒலித்த சங்கு... இப்போ மீண்டும் ஒலிக்கிறது; தஞ்சை மாநகராட்சி நிர்வாகத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

இரண்டாம் உலகப்போரின் போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்குவதற்காக ஒலித்த சங்கு, நாளடைவில் பழுதாகி போக, அதை மீண்டும் பழுதுநீக்கி சுதந்திர தினத்தில் ஒலிக்க செய்துள்ளார் தஞ்சை மாநகராட்சி நிர்வாகம். 

சங்கே முழங்கு... சங்கே முழங்கு... எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்ற பாவேந்தர் பாரதிதாசனாரின் வரிகள் உள்ளத்தில் எழுச்சியை ஏற்படுத்தும். அதுபோல் இரண்டாம் உலகப்போரின் போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்குவதற்காக ஒலித்த சங்கு, நாளடைவில் பழுதாகி போக, அதை மீண்டும் பழுதுநீக்கி சுதந்திர தினத்தில் ஒலிக்க செய்துள்ளார் தஞ்சை மாநகராட்சி நிர்வாகம்.
 
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானம் பின்புறம் மின்சார வாரிய அலுவலகம் தற்போது உள்ள இடத்தில் போர் எச்சரிக்கை சங்கு அமைந்துள்ளது. கடந்த 1939 முதல் 1945-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. இந்த உலகப் போரின் போது இரவு நேரங்களில் விமானங்களால் குண்டுகள் வீசப்பட்டன. அப்போது தஞ்சாவூர் நகரம் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதற்காக விளக்குகள் அணைக்கப்படும்‌.

விளக்குகள் அணைக்கப்படுவதற்கு முன்னதாக சங்கு ஒலிக்கும். இந்த சங்கு ஒலித்த உடனே விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட வேண்டும் என்பது உத்தரவு. அவ்வாறு அணைக்கப்பட்டால் நகரம் இருக்கும் இடமே தெரியாது. இந்த காரணத்துக்காகத்தான் தஞ்சாவூரில் போர் சங்கு நிறுவப்பட்டது.


அப்போ ஒலித்த சங்கு... இப்போ மீண்டும் ஒலிக்கிறது; தஞ்சை மாநகராட்சி நிர்வாகத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

முற்றிலும் இரும்பு தூண்களை கொண்டு இந்த சங்கு அமைக்கப்பட்டது. மின்சார உதவியுடன் இந்த சங்கு ஒலித்தது. தஞ்சாவூர் நகரம் முழுவதும் கேட்கும் வகையில் நிறுவப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. போர் முடிவுற்ற பின்னர் சங்கு ஒலிப்பது நிறுத்தப்பட்டது. இருப்பினும் இந்த சங்கு பணியாளர்களின் வேலை நேரத்தை நினைவூட்டும் வகையில் தினமும் காலை 10 மணி, மதியம் 1 மணி, மாலை 5 மணி என மூன்று நேரம் ஒலிக்க வைக்கப்பட்டது. 1980 -ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த சங்கு ஒலிக்கவில்லை. முற்றிலும் நிறுத்தப்பட்டது. கண்டுக் கொள்வார் யாரும் இல்லாததால் பராமரிப்பு இன்றி வெகு காலமாக ஓய்விலேயே கிடந்தது.

இந்த சங்கை மீண்டும் இயக்க வேண்டும். தொழிலாளர்கள் வேலை நேரத்தை அறிந்து கொள்ள வேண்டும். தஞ்சை மாநகரில் மீண்டும் சங்கு ஒலிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்புகள் மாநகராட்சி ஆணையரை சந்தித்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் பரிசீலனை மேற்கொண்டனர். இரண்டாம் உலகப்போரின் போது ஒலித்த சங்கை மீண்டும் இயங்க செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சங்கை ஒலிக்க வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி பழைய சங்கு சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று சுதந்திர தினத்தன்று இந்த சங்கு ஒலிக்க வைக்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு சுவிட்சை அழுத்தி சங்கை ஒலிக்க வைத்தார். இதில் ஆணையர் சரவணக்குமார், மாமன்ற உறுப்பினர் மேத்தா, மாநகாட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், மேலாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து தினமும் காலை 6, 9 மதியம் 12, மாலை 6 இரவு 9 மணி என தினமும் ஐந்து முறை சங்கு ஒலிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார். சங்கை ஒலிக்கச்செய்ய நடவடிக்கை எடுத்த மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.


 

தலைப்பு செய்திகள்

காவல் துறையில் களையெடுப்பு... இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்: பின்னணி என்ன?
காவல் துறையில் களையெடுப்பு... இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்: பின்னணி என்ன?
தஞ்சையில் அதிரடி வேட்டை! ஒரே நாளில் 1 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
தஞ்சையில் அதிரடி வேட்டை! ஒரே நாளில் 1 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
அரசாணை வந்தே 2 மாதமாச்சு... இன்னும் வழங்கப்படாத குறுவை தொகுப்பு நிதி: விவசாயிகள் வேதனை
அரசாணை வந்தே 2 மாதமாச்சு... இன்னும் வழங்கப்படாத குறுவை தொகுப்பு நிதி: விவசாயிகள் வேதனை
தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Embed widget