மேலும் அறிய

தஞ்சை: கோமாரி நோயால் உயிரிழக்கும் கால்நடைகள் - மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்

’’மருந்துகள் மாதாந்தோறும் வந்து இறங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் மருத்துவர்கள் தான் உரிய சிகிச்சை அளிப்பதில்லை’’

தஞ்சாவூர் மாவட்டத்தில், கோமாரி நோய் தாக்குதலால் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அதிகளவில் கால்நடை மருத்துவ முகாம்களை நடத்தி, கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என  கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வலச்சேரிக்காடு, திருச்சிற்றம்பலம், உப்புவிடுதி, மேலக்காடு, சித்துக்காடு, செருவாவிடுதி (வடக்கு), செருவாவிடுதி (தெற்கு), பொக்கன் விடுதி (வடக்கு), பொக்கன்விடுதி (தெற்கு), களத்தூர், கல்லூரணிக்காடு, ஆணைக்காடு, புனல்வாசல், வலசக்காடு, சின்ன ஒட்டங்காடு, மேல ஒட்டங்காடு, துறவிக்காடு மற்றும் பல ஊர்களில் இருந்து கால்நடைகளை அழைத்து வந்து, திருச்சிற்றம்பலம் கால்நடை மருத்துவமனையில் காட்டிச் செல்வது வழக்கம்.

தஞ்சை: கோமாரி நோயால் உயிரிழக்கும் கால்நடைகள் - மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்

மருத்துவமனையில் நிரந்தர மருத்துவர், உதவியாளர்கள் இல்லாததால், பெரும்பாலும் வருகிற கால்நடைகளுக்கு அங்கு மருத்துவம் பார்ப்பதும் இல்லை. மேலும், மருந்துகள் மாதாந்தோறும் வந்து இறங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் மருத்துவர்கள் தான் உரிய சிகிச்சை அளிப்பதில்லை எனக் கூறி சிபிஎம் ஒன்றிய செயலாளர் எம். இந்துமதி தலைமையில் கிராமத்தினர் முற்றுகையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த கால்நடை மருத்துவர் பொதுமக்களை சமாதானம் செய்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

திண்டுக்கல் ஆட்சியர் வீட்டின் முன் மாணவிகள் தர்ணா-தாளாளர் ஜோதி முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சை: கோமாரி நோயால் உயிரிழக்கும் கால்நடைகள் - மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்

இதனை தொடர்ந்து, தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது. மேலும் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதேபோல குடியிருப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கோழிகள், ஆடு, மாடுகள் நோய் வந்து திடீர் திடீரென இறந்து விடுகின்றன. பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் மனைவி செல்வி  2 பசுமாடுகளை வளர்த்து வந்தார்.  இதில், ஒரு பசு மாடு திடீரென இறந்து விட்டது. மற்றொரு பசுமாடு நுரை தள்ளிய நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இதேபோல காலகம், திருப்பூரணிக்காடு, மிதியகுடிகாடு, ஆணைக்காடு கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே உடனடியாக கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்திட வேண்டும் என கொன்றைக்காடு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அக்கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கர்ணன் கூறுகையில், எங்கள் பகுதியில் கஜா புயலால் பெரும்பகுதி பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றால் வேலை இழந்து வருமானம் இன்றி தவித்து வந்தோம். ஆடு, மாடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வந்தோம். தற்போது கோமாரி நோய் தாக்குதலால் மாடுகளை இழந்து வருகிறோம். இதனால் பெரும் இன்னலை சந்தித்துவரும் குடும்பத்திற்கு அரசு  உரிய நிவாரணம்  வழங்கிட வேண்டும்.  

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோமாரி நோய் தாக்குதலால், நூற்றுக்கணக்கான மாடுகள்  இறந்து விட்டதாக தெரிவிக்கும் கால்நடை வளர்ப்போர், அரசு உடனடியாக அனைத்து வட்டாரங்களிலும் கோமாரி நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் நாட்டு மாடுகள் ரகங்கள் தற்போது குறைந்துவிட்ட நிலையில், கலப்பின பசுக்களுக்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.மேலும், கலப்பின மாடுகள் தரும் பால் கசப்புச்சுவை உள்ளதாக மாறிவிட்டது.  எனவே, மாவட்ட நிர்வாகம் கால்நடைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தஞ்சாவூரில் 54 கடைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு - பட்டினி போராட்டத்தில் ஈடுபட வியாபாரிகள் முடிவு

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்Athulya Ravi News | நடிகை அதுல்யா ரவி வீட்டில் நடந்த சம்பவம்!  CCTV-ல் பதிவான பகீர் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
TNPL 2024: DD vs TGC: விக்கெட்டுகளை குவித்த ஈஸ்வரன்! திருச்சி அணிக்கு 161 ரன்கள் இலக்கு வைத்த திண்டுக்கல் டிராகன்ஸ்!
TNPL 2024: DD vs TGC: விக்கெட்டுகளை குவித்த ஈஸ்வரன்! திருச்சி அணிக்கு 161 ரன்கள் இலக்கு வைத்த திண்டுக்கல் டிராகன்ஸ்!
Cuddalore PMK Siva Shankar:மீண்டும் ஒரு கொடூரம்:கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; தப்பியோடிய மர்ம கும்பல்!
Cuddalore PMK Siva Shankar:மீண்டும் ஒரு கொடூரம்:கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; தப்பியோடிய மர்ம கும்பல்!
Samantha: சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீங்க பொறுப்பு ஏற்பீங்களா என விஷ்ணு விஷால் மனைவி ஜூவாலா கட்டா கேள்வி!
Samantha: சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீங்க பொறுப்பு ஏற்பீங்களா என விஷ்ணு விஷால் மனைவி ஜூவாலா கட்டா கேள்வி!
Union Budget: புதிய நாடாளுமன்றத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் - தேதியை அறிவித்த மத்திய அரசு
Union Budget: புதிய நாடாளுமன்றத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் - தேதியை அறிவித்த மத்திய அரசு
Embed widget