மேலும் அறிய

தஞ்சாவூர்: கஞ்சா போதை டிரைவரால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்..!

தஞ்சை நகரில் உலா வரும் கஞ்சாவை முழுமையாக ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கஞ்சா போதையில் இருந்த தனியார் பஸ் டிரைவரால் இளம் பெண் உயிர் பரிதாபமாக பறிக்கப்பட்டுள்ளது. விபத்து என்று நினைத்தாலும் போதையில் இருந்த அந்த டிரைவர் பயணிகளின் உயிருக்கு எமனாக மாறியிருப்பார் என்று தஞ்சை மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

தஞ்சை அருகே களிமேடு பகுதியை சேர்ந்தவர் அகிலாண்டேஸ்வரி (31). இவர் தஞ்சையில் உள்ள ஒரு  தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம் போல் பணி முடிந்து வீட்டுக்கு தனது ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் நினைத்திருக்கவே மாட்டார் எமனின் பார்வை தன் மீது பட்டு விட்டது என்று.

கொண்டிராஜபாளையம் பகுதியில் இவர் ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருந்தபோது தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து  பாபநாசம் நோக்கி சென்ற தனியார் டவுன் பஸ் முன்னால் சென்ற அகிலாண்டேஸ்வரி ஸ்கூட்டி மீது மோதியது. மோதிய வேகத்தில் ஸ்கூட்டியை சுமார் 500 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற அந்த தனியார் பஸ் அப்பகுதியில் இருந்த கார் மீதும் மேலும் சில வாகனங்கள் மீதும் மோதி நின்றது.


தஞ்சாவூர்: கஞ்சா போதை டிரைவரால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்..!

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் அலற கூட வாய்ப்பு இல்லாமல் படுகாயமடைந்த அகிலாண்டேஸ்வரி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அலறினர்.  பொது மக்களில் சிலர் அந்த தனியார் பஸ் டிரைவரை பிடித்தனர். டிரைவர் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் தகவலறிந்து தஞ்சை நகர போக்குவரத்து குற்றப்புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அகிலாண்டேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். போதையில் எப்படி பஸ்சை இயக்கி வந்தார். உடன் பணியாற்றும் கண்டக்டர் ஏன் இதை கண்டுக் கொள்ளவில்லை என்று பல கேள்விகள் எழுகின்றன. ஸ்கூட்டி மீது மோதிய வேகத்தில் பஸ் நிற்காமல் 500 மீட்டர் தூரத்திற்கு சென்று மற்றெரு கார் மீது மோதி நின்றது என்றால் பஸ் எந்தளவிற்கு வேகமாக வந்து இருக்க வேண்டும் என்று விபத்தை பார்த்த மக்கள் கூறுகின்றனர்.

 தஞ்சை போலீசார் சோதனை மேல் சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்தாலும் மாநகர் முழுவதும் கஞ்சா விற்பனை மறைமுகமாக நடந்துதான் வருகிறது என்கின்றனர் பொதுமக்கள். கடந்த வாரத்தில் கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் கரந்தையில் வியாபாரியை வெட்டி பணம் பறித்த சம்பவமும் நினைவுக்கூரத்தக்கது. அந்த வியாபாரி இறந்து கடையடைப்பு போராட்டமும் நடந்தது. இப்படி தஞ்சை நகரில் உலா வரும் கஞ்சாவை முழுமையாக ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget