School Leave : கனமழை அபாயம்...! நாகப்பட்டினத்தில் 1-9 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை...!
கனமழை அபாயம் காரணமாக நாகப்பட்டினத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் தமிழ்நாட்டிலும் டெல்டா பகுதிகளிலும் கனமழை ஓரிரு தினங்களாக பெய்து வருகிறது.
இந்த நிலையில், இன்றும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. நாகப்பட்டினத்திலும் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















