மேலும் அறிய

சரபங்கா திட்டத்திற்கு 2வது நீர்வழிப் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசு - பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

காவிரி டெல்டாவை அழிக்கும் மேட்டூர் அணை சரபங்கா திட்டத்திற்கு 2வது நீர்வழிப் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் உள்நோக்கம் கொண்ட சட்ட விரோத மேட்டூர் அணை சரபங்கா திட்டத்திற்கு கடந்த அஇஅதிமுக ஆட்சிகாலத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
மேச்சேரி மற்றும் நங்கவள்ளி ஆகிய இரண்டு குழாய் வழி பாதைகள் மூலம் கொண்டு போவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி பெறாமல் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கும் முரணாக இத்தத் திட்டத்தை செயல்படுத்த முனைவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆணையத்திடம் புகார் மனு அளித்து வலியுறுத்தி உள்ளோம். இது குறித்து விவாதிப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் எடுத்த முடிவை திமுக தலைமையிலான அரசு நிறுத்தி வைத்துள்ளது. மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கையும் காலதாமதப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சித்து வருகிறது. 

சரபங்கா திட்டத்திற்கு 2வது நீர்வழிப் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசு -  பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
 
சரப்பங்கா திட்டத்தில் முதல் கட்ட பணி மேச்சேரி வழியாக தண்ணீரை கொண்டு செல்வதற்கான முதல் கட்ட குழாய் வழிபாதை அமைக்கும் பணி 2022ல் ரூபாய் 562 கோடி மதிப்பீட்டில் முடிவு பெற்றுள்ளது. 
 
இரண்டாவது நீர் வழிப்பாதை நங்கவள்ளி வழியாக கொண்டு செல்வதற்கு கூடுதலாக சுமார ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஒதுக்கீடு செய்து நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணைகளை கடந்த 27 ஆம் தேதி திமுக அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக திமுக எதிர்கட்சியாக இருக்கிறபோது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எ கே எஸ் விஜயன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளார். இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் கட்ட பணியை விரைவுபடுத்தி முடிப்பதற்கு துணை போன திமுக அரசு, இரண்டாவது கட்ட பணிக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தி இரண்டாவது வழி பாதையை நங்கவள்ளி வழியாக துவக்குவதற்கு அரசாணைகளை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. 
 
இந்த திட்டம் நிறைவேற்றப்படுமேயானால் ஒட்டுமொத்தமாக காவிரி டெல்டா பேரழிவை சந்திக்கும். மேட்டூர் அணையில் 80 அடி தண்ணீர் நிரம்புகிற நிலையில் அணையில் இருந்து சரபங்கா உபரிநீர் திட்டம் என்கிற பெயரில் அணையை உடைத்து பாசனநீரை இராட்சச இயந்திரங்களைக் கொண்டு இறவை பாசனம் மூலம் கொண்டு செல்வதற்காக கடந்த ஆட்சியில் போடப்பட்ட திட்டம் சட்டவிரோதமானது என்று அறிந்திருக்கிற திமுக அரசு தற்போது காவிரி டெல்டாவை எப்படியும் அழித்துவிட வேண்டும் என்று செயல்படுகிறது.
 
ஒரு பக்கம் கர்நாடகம் தண்ணீர் தர மறுத்து வஞ்சக நடவடிக்கையில் ஈடுபட்டதால் குருவை கருகத் தொடங்கி இருக்கிறது. சம்பா இந்த ஆண்டு சாகுபடி துவங்க முடியாத நிலையில் பரிதவிக்கிறார்கள். தற்போது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் மேலாண்மை ஆணையம் அனுமதி இல்லாமல் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு முரணாக போடப்படுகிற சரப்பங்கா திட்டத்தை நிறைவேற்றுவதற்கு திமுக அரசு முன்வருவது விவசாயிகளுக்கு பெரும் துரோகம் இழைப்பதாகும். குறிப்பாக இந்த திட்டத்தை ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக எதிர்த்து விட்டு தற்போது ஒப்பந்தக்காரர் நலனை முன்னிறுத்தி துணை போவதும், டெல்டா விவசாயிகளை அழிக்க நினைப்பது எந்த வகையில் நியாயம்? இது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.
 
சேலம் விவசாயிகள் நலனுக்காக இத்திட்ட நிறைவேற்றப்படுமே ஆனால் 16 கண் மதத்திற்கு கீழே வெளியேறும் தண்ணீரை தடுத்து திட்டத்திற்கு இரவு பாசனங்களும் மேற்கொள்வது உண்மையான உபரி நீர் திட்டமாகும் என்பதை முதல்வர் உணர வேண்டும். இது குறித்து மேட்டூர் அணையில் இருந்து நீர் பாசன துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு நேரடியாக விளக்கம் அளித்துள்ளோம். எனவே இத்திட்டத்திற்கான அரசாணைகள் முழுமையும் ரத்து செய்யப்பட்டு திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். இல்லையேல் தீவிர போராட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக களமிறங்குவோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
Virat Kohli: ஹெல்மட்டை பதம் பார்த்த பதிரானா! பழி வாங்கிய விராட் கோலி - எப்படி?
Virat Kohli: ஹெல்மட்டை பதம் பார்த்த பதிரானா! பழி வாங்கிய விராட் கோலி - எப்படி?
Baakiyalakshmi serial Actress: அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கீங்களா? ரசிகரின் கேள்விக்கு உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
Baakiyalakshmi serial Actress: அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கீங்களா? ரசிகரின் கேள்விக்கு உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடிAdmk Pmk Alliance: ”பாமகதான் வேணுமா?” எடப்பாடிக்கு பிரேமலதா செக்! திமுக கூட்டணியில் தேமுதிக?TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
Virat Kohli: ஹெல்மட்டை பதம் பார்த்த பதிரானா! பழி வாங்கிய விராட் கோலி - எப்படி?
Virat Kohli: ஹெல்மட்டை பதம் பார்த்த பதிரானா! பழி வாங்கிய விராட் கோலி - எப்படி?
Baakiyalakshmi serial Actress: அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கீங்களா? ரசிகரின் கேள்விக்கு உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
Baakiyalakshmi serial Actress: அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கீங்களா? ரசிகரின் கேள்விக்கு உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
Myanmar Earthquake: 144 பேர் உயிரிழப்பு; 732 பேர் படுகாயம்..மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்!
Myanmar Earthquake: 144 பேர் உயிரிழப்பு; 732 பேர் படுகாயம்..மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்!
IPL 2025 CSK vs RCB: ரசிகன்.. வெறியன்.. விரோதி! கிரிக்கெட்டில் செத்துப் போகிறதா ஜென்டில்மேன் குணம்?
IPL 2025 CSK vs RCB: ரசிகன்.. வெறியன்.. விரோதி! கிரிக்கெட்டில் செத்துப் போகிறதா ஜென்டில்மேன் குணம்?
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
Embed widget