மேலும் அறிய

4 ஆண்டுகளில் தஞ்சாவூர் விதை தரக்கட்டுப்பாட்டு பிரிவு மேற்கொண்டுள்ள சூப்பர் பணிகள்

கடந்த 4 ஆண்டுகளில்,  விதை சட்ட விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்ட 745 மெட்ரிக் டன் அளவுள்ள 382 லட்சம் மதிப்புள்ள விதைகளுக்கு விதை விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் விதை தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு கடந்த 4  ஆண்டுகளாக செய்து வரும் சாதனைகள் விவசாயிகள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளது. 

தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்க செய்திடும் பொருட்டு விதை ஆய்வு பிரிவு தஞ்சாவூர் மாவட்ட அளவில் விதை ஆய்வு துணை இயக்குநர் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. விதைச் சான்றழிப்பு மற்றும் உயிர்மச்சான்று துறையின் விதைச் சட்டம் அமலாக்க பணியினை விதை ஆய்வு துணை இயக்குநர் செயல்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்க, விதை ஆய்வு பிரிவு விதை விற்பனையாளர்களுக்கு விதை உரிமம் வழங்குதல், விதையின் தரத்தினை உறுதி செய்திட விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தல், விதையின் தரத்தினை உறுதி செய்யும் பொருட்டு விதை விற்பனை நிலையங்களில் விதை மாதிரிகள் பகுப்பாய்விற்காக எடுத்தல்.


4 ஆண்டுகளில் தஞ்சாவூர் விதை தரக்கட்டுப்பாட்டு பிரிவு மேற்கொண்டுள்ள சூப்பர் பணிகள்

விதை விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளித்தல், பணிவிதை மாதிரிகள் பகுப்பாய்விற்கு அனுப்பிட விதை விற்பனையாளர்களை ஊக்குவித்தல், தரமற்ற விதை குவியல்கள் மீது விதை சட்டத்தின்படி துறை ரீதியாகவும், நீதிமன்றம் மூலமாகவும்  நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

விதை சட்ட அமுலாக்கம், விதைச் சான்றழிப்பு மற்றும் உயிர்மச்சான்று  துறையின் விதை ஆய்வு பிரிவு விதைச்சட்டம் 1966, விதை கட்டுப்பாட்டு 1983 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 அமலாக்கம் செய்து வருகிறது. விதைக்கட்டுப்பாட்டு ஆணையின் படி விதை கொள்முதல் செய்தல் , இருப்பு வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றிற்கு விதை விற்பனை உரிமம் வழங்கப்படுகிறது. விதை விற்பனை நிலையங்களிலிருந்து விதை ஆய்வாளர்கள் மூலம் விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்காக விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி தரத்தினை உறுதி செய்கிறது. தரமற்ற விதைக் குவியல்கள் கண்டறிதல், விற்பனை தடை உத்தரவு பிறப்பிப்பதோடு, உரிய நபரின் மீது விதைச் சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

சான்று பெற்ற விதைகள் பயன்பாடு மற்றும் முக்கியத்துவம், விதைச்சட்ட அமுலாக்கம், விதைப்பரிசோதனையின் நோக்கம் மற்றும் விதை விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றிய பயிற்சியானது விதை ஆய்வாளர்களால்  வழங்கப்படுகிறது.  கடந்த 4 ஆண்டுகளில் இதுபோன்ற சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன்படி 2021-22 முதல் 2014-25 வரையிலான கடந்த 4 ஆண்டுகளில் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை, 1983 இன் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் விதை விற்பனையாளர்களுக்கு 602 விதை விற்பனை உரிமங்களை வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விதை விற்பனை நிலையங்கள் விதை ஆய்வாளர்கள் மூலம் 12448 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விதைக் குவியல்களிலிருந்து கடந்த 4 ஆண்டுகளில் 9437 அலுவலக விதை மாதிரிகள் மற்றும் 3400 பணிவிதை மாதிரிகள் முளைப்புதிறன் ஆய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளது. அறிவிக்கை செய்யப்பட்ட விதைப் பரிசோதனை ஆய்வகத்தில் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு தரமற்ற விதைக் குவியல்களுக்கு எதிராக 429 துறை நடவடிக்கைகள் மற்றும் 26 சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில்,  விதை சட்ட விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்ட 745 மெட்ரிக் டன் அளவுள்ள 382 லட்சம் மதிப்புள்ள விதைகளுக்கு விதை விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தரமற்ற விதைகளை உற்பத்தி செய்த உற்பத்தியாளர் மற்றும் விற்பனை செய்த விதை விற்பனையாளர்கள் மீது நீதிமன்றத்தில் 26 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அனைத்து 26 வழக்குகள் விதை சட்ட விதிகளின்படி முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget