மேலும் அறிய

ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறு - பொருட்கள் வாங்க முடியாமல் தஞ்சாவூர் மக்கள் கடும் அவதி

’’குடும்பத்தில் உள்ள ஒருவர் மட்டும் பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என உத்தரவு உள்ளதால், காலையில் ரேசன் கடைக்கு சென்றால், மதியம் வரை நேரமாகி விடுகிறது’’

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,153 ரேஷன் கடைகள் உள்ளன. இதன் மூலம் 6 லட்சத்தி 93 ஆயிரத்தி 481 குடும்பத்தினர் மாதந்தோறும் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்னை ஆகியவற்றை வாங்கி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க, பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்பட்டு, குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்ததும், அவை உறுதி செய்யப்பட்ட பின் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பயோ மெட்ரிக் இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள  இணையதளம் (சர்வர்) சரிவர இணைப்புகள் கிடைக்காததால், பொது மக்கள் கடந்த ஒரு வார காலமாக அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பொருட்கள் வழங்க முடியவில்லை.  பொருட்கள் பெற சென்றால், நாளைக்கு வாருங்கள் என திருப்பி அனுப்புகின்றனர். இதனால் பணியாளர்களுக்கும் - பொதுமக்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்ட சில நேரங்களில் தகராறு ஏற்படுகிறது.

மாவட்டத்தில் குறிப்பாக தஞ்சாவூர் சீனிவாசபுரம், வேங்கராயன்குடிக்காடு, நாஞ்சி கோட்டை,  பட்டுக்கோட்டை குறிச்சி, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் போன்ற மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் இணைப்புகள் கிடைக்காததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து ரேஷன் கடை பணியாளர்கள் கூறுகையில், கடந்த ஒரு வார காலமாக சர்வர் குளறுபடியால் பொருட்களை முறையாக வழங்க முடியவில்லை.  இது குறித்து பொது மக்களிடம் கூறினால், அவர்களுக்கு புரியவதில்லை. இதனால் தினந்தோறும் பொது மக்களுக்கும் எங்களுக்கும் தகராற ஏற்படுகிறது. இதுதொடர்பாக மேலதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளோம். தற்போது சர்வர் குளறுபடியாக இருந்தால் வாடிக்கையாளர் ஒருவரை 20 நிமிடம் காத்திருக்குமாறு கூறி, அவரிடம் கையெப்பம் பெற்று அதன்பின்னர் பொருட்கள் வழங்கலாம் என கூறியுள்ளனர். இந்த முறையிலும் காலதாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள்- பணியாளர்கள் இடையே தேவையில்லாத பிரச்சினை ஏற்படுகிறது. இதனை நிவர்த்தி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து பொது மக்கள் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் இன்னமும் பெரும்பாலான பகுதிகளில் இணையதளம் சரியாக கிடைப்பதில்லை. அப்பகுதிகளில் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்துவதால், குளறுபடிகள் ஏற்படுகிறது. ஒரு சில நேரங்களில் வேலை செய்தாலும், மிகவும் தாமதமாகிறது. குடும்பத்தில் உள்ள ஒருவர் மட்டும் பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என உத்தரவு உள்ளதால், காலையில் ரேசன் கடைக்கு சென்றால், மதியம் வரை நேரமாகி விடுகிறது. கடந்த காலங்களில் ரேசன் கார்டை அருகிலுள்ளவர்களிடம் கொடுத்து, பொருட்களை வாங்கி வரச்சொல்வோம். ஆனால் இப்போது இல்லை என்பதால், ரேசன் கடைகளில் பொருட்களை வாங்குவதில் சிரமமாகி விடுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம், அனைத்து ரேசன் கடைகளிலும் இணைய தளம் கிடைக்கும் வகையில் சிறிய அளவில் டவர்  வைக்க வேண்டும் என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget