மேலும் அறிய

மணல் கொள்ளைக்காக திருவையாறு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது - சீமான் குற்றச்சாட்டு

ஆறுகளின் மணல் கொள்ளைக்காகவே திருவையாறு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ரூ.191 கோடி  திட்ட மதிப்பீட்டில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மானாமதுரை - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக கண்டியூர், திருவையாறு, பெரும்புலியூர், கல்யாணபுரம் உள்ளிட்ட 6 கிராமங்களின் வழியே சுமார் 7 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது.

விளைநிலங்களை அழித்து இந்த புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவையாறு அருகே கண்டியூரில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் விளைநிலங்களில் அமைக்கப்படும் சாலை பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த பகுதியில் சாலை அமைப்பதாக கூறி பயிர்களை அழித்து படுகொலை செய்திருக்கிறது இந்த அரசு. இது சர்வாதிகாரம் கிடையாது. இது கொடுங்கோல் செயல். 40 நாட்கள் முதல் 50 நாளில் விளைந்த பயிர்களை, கர்ப்பிணி பெண்களைப் போல் உயிரோடு புதைத்துள்ளனர்.  தஞ்சாவூர் நன்றாக விளைந்தால் தமிழ்நாடு முழுவதும் சோறு போடலாம். தமிழ்நாடு முழுவதும் நல்லா விளைந்தால் உலகத்துக்கே சோறு போடலாம் என்பது முன்னோர் மொழி.


மணல் கொள்ளைக்காக திருவையாறு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது - சீமான் குற்றச்சாட்டு

நீங்க முன்னறிவிப்பு செய்யவில்லை. நடவுக்கு முன்பு அல்லது அறுவடை முடிந்த பிறகு விவசாயிகளை அழைத்து பேசி இந்த புறவழிச்சாலையின் அவசியம் குறித்து கூறி ஒரு உரிய தொகை, இழப்பீடு கிடையாது. உரிய தொகையை கொடுத்து விவசாயிகளின் ஒப்புதலோடு நிலத்தை பெற்று நீங்க சாலையை அமைத்து இருந்தால் அது வேறு மாதிரியான அணுகுமுறை.

அந்த தஞ்சாவூரை அழித்து இந்த சாலை போட அவசியம் என்ன. இதற்கு முதன்மை காரணம் காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி ஆறுகளில் இருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வசதியாக செல்ல அமைக்கப்படுகிறது. இந்த பகுதியில் முதன்மை சாலையில் லாரிகளில் மணலை கொண்டு போகும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது. அதனால் மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த புறவழிச்சாலை மூலம் மணலை திருடி கொண்டு செல்ல சாலை அமைக்கப்படுகிறது.


மணல் கொள்ளைக்காக திருவையாறு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது - சீமான் குற்றச்சாட்டு

இந்த சாலை அதிமுக ஆட்சியில் அமைத்திருந்தால், திமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்தால் என்ன பாடுபடுத்தி இருப்பீர்கள். விவசாயிகள் எளிய மக்கள், உழைக்கும் மக்கள், அரசியல் வலிமை, அதிகார வலிமை அற்ற மக்கள் என்பதால் என்னவெல்லாம் செய்யலாம் என்ற திமிரில் செய்கிறீர்களா, இதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்.

இது கொலைகார செயல், கொடுங்கோல் செயல். ராஜபக்சேவை விட படுகொலையாளர்கள். விவசாயிகளின் போராட்டத்தையும் மீறி சாலை அமைக்கப்பட்டால் நான் வந்து தடுத்து நிறுத்துவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
Embed widget