மேலும் அறிய

நாகை : வெளிமாநிலங்களுக்கு கடத்தல் செய்யவிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான கடல் குதிரைகள் பறிமுதல்

ரூ.20 லட்சம் மதிப்பிலான 1079 கிலோ கடல் குதிரை,கடல் அட்டைகள், சுறாமீன் இறக்கைள் ஆகியவற்றை நாகை கடலோர காவல் குழும போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய முருகானந்தத்தை தேடி வருகின்றனர்.

அக்கரைப்பேட்டை அருகே காட்டுப் பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கடத்தயிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 1079கிலோ
 கடல் குதிரை,கடல் அட்டைகள், சுறாமீன் இறக்கைள் ஆகியவற்றை நாகை கடலோர காவல் குழும போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய முருகானந்தத்தை தேடி வருகின்றனர்.
 
கடந்த 2001-ம் ஆண்டுக்கு முன்பு வரை, இந்தியாவிலும் கடல்அட்டைகளைப் பிடிக்க அனுமதி இருந்தது. அதன் பின்னர் கடந்த 21 வருடங்களாக அவற்றைப் பிடிக்க தடை இருந்து வருகிறது. இதன் வரிசையில் மொத்தம் 53 கடல் வாழ் உயிரினங்கள் பிடிப்பதற்குத் தடை இருக்கிறது.  இவைகளுக்கு சீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அமோக வரவேற்பு உண்டு. இதை அந்நாட்டு மக்கள் உணவுக்காகவும், மருந்துக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவற்றில் பல பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு ரகத்துக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதில் ராஜ கடல் அட்டையானது அதிகமான விலைக்குப் போகும்.
 

நாகை : வெளிமாநிலங்களுக்கு கடத்தல் செய்யவிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான கடல் குதிரைகள் பறிமுதல்
 
 
இவை அதிகமாகப் பிடிக்கப்பட்டால் அந்த இனம் அழிந்துவிடும் என்பது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரப்பு வாதமாக முன் வைக்கப்படுகிறது.  அவை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சுமார் 10 லட்சம் குஞ்சுகளை பொறிக்கும் என மீனவர்கள் தரப்பிலும் சொல்லப்படுகிறது. இந்தத் தடையை நீக்குவதற்காக மீனவர்கள் சார்பாக கோரிக்கை எழுந்து வந்தது ஆனால், மத்திய அரசு செவிசாய்கவில்லை. 
 
கடல் அட்டைகளுக்கு எனத் தனியாக வலை கிடையாது. மீன் பிடிக்கும் வலையில் கடல் அட்டைகள் மாட்டிக் கொண்டு கரைக்குக் கொண்டு வந்தால் மீனவனுக்கு  சிறைவாசமும், ரூபாய்  அபராதமும் விதிக்கப்படும். மீன்களைப் பிடிக்கும்போது, எதிர்பாராமல் வலையில் மாட்டிக் கொள்ளும் அவற்றால் சிறைவாசம் அனுபவித்த மீனவர்கள் ஏராளம். ஆனால், தடை செய்யப்பட்ட ஒன்றைத் திட்டமிட்டு விற்பனை செய்ய ஒரு சிலர் இருக்கதான் செய்கின்றனர். அதேபோலத்தான் தமிழ்நாட்டிலும் இதற்கு ஒரு நெட்வொர்க் இருக்கிறது அதில் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பணத்தாசையில் சிக்கியுள்ளனர். அவர்களை கண்காணிக்கும் பணியில் வனத்துறை கடலோர காவல் துறை என பல்வேறு காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

நாகை : வெளிமாநிலங்களுக்கு கடத்தல் செய்யவிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான கடல் குதிரைகள் பறிமுதல்
 
அப்போது நாகையில் இருந்து கடல் அட்டைகள், சுறா மீன் இறக்கைகள், கடல் குதிரைகள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக நாகை கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் நாகை அக்கரைப்பேட்டை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் நாகை அக்கரைபேட்டை மாரியம்மன்கோயிலுக்கு தென்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள பழைய கட்டிடத்தில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட 812 கிலோ கடல் அட்டைகள், 248 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள், பதப்படுத்தப்பட்ட 15 கிலோ எடையுடைய சுறா மீனின் இறக்கைகள், பதப்படுத்தப்பட்ட 4 கிலோ கடல் குதிரை  ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 

நாகை : வெளிமாநிலங்களுக்கு கடத்தல் செய்யவிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான கடல் குதிரைகள் பறிமுதல்
 
இவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். மேலும் பதப்படுத்த பயன்படுத்தப்பட்ட உபகரணங்களான அடுப்பு -1, சிலிண்ர் -2, எடைபோடும் தராசு- 1, பிளாஸ்டிக் ஐஸ் பெட்டிகள் -34 ஆகியவை இருப்பது தெரியவந்தது-. இவற்றை கடலோர காவல் குழும போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை மேற்கொண்டனர். இதில் நாகை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முருகானந்தம்(51) என்பவர் பதப்படுத்தி வெளி மாநிலங்களுக்கு கடத்த வைத்திருப்பதும், கடலோர காவல் குழும போலீசார் வந்தவுடன் தப்பி சென்றதும் தெரியவந்தது. தப்பியோடிய முருகானந்தத்தை தேடி வருகின்றனர். கைப்பற்றிய பொருட்களை பறிமுதல் செய்து நாகை வனசரக அலுவலத்தில் கடலோர காவல் குழும போலீசார் ஒப்படைத்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
Embed widget