மேலும் அறிய

நாகையில் தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - பாதுகாப்பு கேட்டு பணியாளர்கள் சாலை மறியல்

தூய்மை பணி வாகனத்தில் குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்டும் பொழுது உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதால் தீப்பிடித்து விபத்து.

நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளின் 36 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள்  கோட்டை வாசல் ஊர கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. இன்று காலை நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 165 நபர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது குப்பைகளை கோட்டை வாசல்படி அருகே உள்ள குப்பை கிடங்கு எடுத்துச் சென்று அங்கு கொட்டப்பட்டது. பணியில் கும்பகோணத்தை சேர்ந்த நகராட்சி டிப்பர் வாகன ஓட்டுனர் ஜோதி மற்றும் நாகூர் அமிர்தா நகரை சேர்ந்த  ஒப்பந்த துப்புரவு பணியாளர் விஜய் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக குப்பை கிடங்கு வழியாக செல்லக்கூடிய உயர் அழுத்த மின் கம்பத்தில் டிப்பர் லாரி உரசி உள்ளது. இதில் தீப்பிடித்த டிப்பர் வாகனத்தில் இருந்த தூய்மை பணியாளர் விஜய் மின்சாரம் தாக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வாகன ஓட்டுனர் ஜோதி மின்சாரம் தாக்கியதில் படு காயமடைந்தார். அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும் 108 வாகனத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் வாகனத்தின் தீயை அணைத்து விஜயின் சடலத்தை மீட்டு நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு போராடிய ஓட்டுநர் ஜோதியை நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகையில் தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - பாதுகாப்பு கேட்டு பணியாளர்கள் சாலை மறியல்
 
 
தகவல் அறிந்த துப்புரவு பணியாளர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன்  நாகை புதிய பேருந்து நிலையம் எதிரில் மருத்துவக் கல்லூரி வாசலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த துப்புரவு பணியாளருக்கு நீதி கேட்டும் அவரது குடும்பத்திற்கு அரசு பணி வழங்க வலியுறுத்தியும் அவர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் நகராட்சி வாகனங்களை பேருந்து நுழைவாயிலின் முழுவதுமாக அடைத்து வாகனங்களை நிறுத்தியதால் பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.  இந்த நிலையில் நாகை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் நகர் மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயிரிழந்தவருக்கு உரிய நிவாரணமும் அவர்களது குடும்பத்திற்கு அரசு பணியும் வழங்க வேண்டும் மேலும் காயமடைந்த ஓட்டுனருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் பணி நியமன ஆணை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக நகர்மன்ற தலைவர் மாரிமுத்து உறுதி அளித்தார். மாலைக்குள் தங்களது கோரிக்கை வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

 
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget