மேலும் அறிய

பயனாளிகளே... உங்கள் இல்லம் தேடி தாயுமானவர் வர்றார்: தஞ்சை கலெக்டர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் முதலமைச்சர் தாயுமானவர் திட்டம் மூலம் இல்லம் தேடி குடிமைப் பொருட்கள் இரண்டு தினங்களில் விநியோகம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று ஜூன் 2ம் தேதி மற்றும் இன்று  3ம் தேதிகளில் ‘தாயுமானவர் திட்டம்’ மூலம் இல்லம் தேடி வரும் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் ‘தாயுமானவர் திட்டம்’ மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று நேற்று ஜூன் 2 மற்றும் இன்று 3ம் தேதி ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படடுள்ளதாவது:
 
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

தமிழகத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவதில் உள்ள சிரமங்களைக் குறைக்கும் நோக்கில், அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ கடந்த 12.08.2025 முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

49,901 குடும்ப அட்டைகள் பயன்பெறுகின்றன

இத்திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 1,183 நியாய விலைக் கடைகளைச் சேர்ந்த 49,901 குடும்ப அட்டைகளில் உள்ள மொத்தம் 75,706 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளர்களுக்கு, அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான பயனாளிகள் தொடர்ந்து பயனடைந்து வருகின்றனர்.

2 நாட்கள் நேரடி விநியோகம்

இதன் தொடர்ச்சியாக, அடுத்து நேற்று 02.06.2026 மற்றும் இன்று 03.06.2026 ஆகிய தேதிகளில், தகுதியுடைய முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் முதலமைச்சர் தாயுமானவர் திட்டம் மூலம் இல்லம் தேடி குடிமைப் பொருட்கள் இரண்டு தினங்களில் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள இத்திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகள் அனைவரும், இந்த இரண்டு தினங்களில் தங்களின் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
நெற்றியில் பட்டைநாமம், காய்கறி மாலை: விவசாயிகள் நடத்திய நூதன மனு அளிக்கும் போராட்டம்
நெற்றியில் பட்டைநாமம், காய்கறி மாலை: விவசாயிகள் நடத்திய நூதன மனு அளிக்கும் போராட்டம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget