பயனாளிகளே... உங்கள் இல்லம் தேடி தாயுமானவர் வர்றார்: தஞ்சை கலெக்டர் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் முதலமைச்சர் தாயுமானவர் திட்டம் மூலம் இல்லம் தேடி குடிமைப் பொருட்கள் இரண்டு தினங்களில் விநியோகம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று ஜூன் 2ம் தேதி மற்றும் இன்று 3ம் தேதிகளில் ‘தாயுமானவர் திட்டம்’ மூலம் இல்லம் தேடி வரும் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் ‘தாயுமானவர் திட்டம்’ மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று நேற்று ஜூன் 2 மற்றும் இன்று 3ம் தேதி ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படடுள்ளதாவது:
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
தமிழகத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவதில் உள்ள சிரமங்களைக் குறைக்கும் நோக்கில், அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ கடந்த 12.08.2025 முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
49,901 குடும்ப அட்டைகள் பயன்பெறுகின்றன
இத்திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 1,183 நியாய விலைக் கடைகளைச் சேர்ந்த 49,901 குடும்ப அட்டைகளில் உள்ள மொத்தம் 75,706 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளர்களுக்கு, அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான பயனாளிகள் தொடர்ந்து பயனடைந்து வருகின்றனர்.
2 நாட்கள் நேரடி விநியோகம்
இதன் தொடர்ச்சியாக, அடுத்து நேற்று 02.06.2026 மற்றும் இன்று 03.06.2026 ஆகிய தேதிகளில், தகுதியுடைய முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் முதலமைச்சர் தாயுமானவர் திட்டம் மூலம் இல்லம் தேடி குடிமைப் பொருட்கள் இரண்டு தினங்களில் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள இத்திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகள் அனைவரும், இந்த இரண்டு தினங்களில் தங்களின் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி கேட்டுக் கொண்டுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















