மேலும் அறிய

ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

Anjaneya statue:  ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

 ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்த வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் திருட்டு போனதாக கடந்த 2012-ம் ஆண்டு செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு காவல்துறை இயக்குநர் உத்தரவின் பேரில் இந்த சிலை திருட்டு வழக்கின் புலன் விசாரணை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், செந்துறை வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து திருடப்பட்ட ஐம்பொன் சிலைகளில் ஒன்றான ஆஞ்சநேயர் சிலை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு அங்கிருந்து ஏலம் விடப்பட்டது தெரியவந்தது.

மேலும் அந்த ஆஞ்சநேயர் சிலையை ஆஸ்திரேலியாவை சேர்ந்த அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்டறிந்தனர்.

இதையடுத்து வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து திருட்டு போன ஆஞ்சநேயர் சிலையின் புகைப்படத்தையும், கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் ஏலம் விடப்பட்ட ஆஞ்சநேயர் சிலையின் புகைப்படத்தையும், தொல்லியல் துறை நிபுணர்களுடன் உதவியோடு ஒப்பீடு செய்து பார்த்தபோது, இரண்டு புகைப்படங்களிலும் இருப்பது ஒரே சிலை என்பது உறுதியானது.

எனவே, கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் ஏலம் விடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை பொட்டவெளி வெள்ளூர் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலை தான் என்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் உறுதி செய்தனர். பின்னர் அந்த சிலையை மீட்க காவல்துறை தலைமை இயக்குநர் மூலம் மத்திய அரசின் உள்துறைக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டது.

சம்பந்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை ஏலம் எடுத்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த தனிநபர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் தொடர் சட்ட நடவடிக்கைகள் காரணமாக சம்பந்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து இந்திய அரசின் உள்துறை, இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஆஸ்திரேலியாவில் இருந்த ஆஞ்சநேயர் சிலை ஏஜென்சிகளின் பரிசோதனைக்கு பிறகு இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 17-ம் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் டெல்லி சென்ற தனிப்படை போலீஸார் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை இந்திய தொல்லியல் துறையிடம் இருந்து பெற்று சென்னை கொண்டு வந்தனர்.

இந்த சிலையை சிலை கடத்தல் வழக்குகளை விசாரணை செய்யும் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஒப்படைத்தனர். அப்போது நீதிபதி இந்த சிலையை கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்க உத்தரவி்ட்டார். இதையடுத்து ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்Gambhir plan for Ruturaj |”நீ அடிச்சி ஆடு ருதுராஜ்”கம்பீர் MASTER STROKE அலறும் AUSSIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
Embed widget