மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 5 நாட்களுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல்

’’ஆண்டு கணக்கை முடிக்க வேண்டிய காரணத்தால் நெல் கொள் முதல் நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு’’

தமிழ்நாட்டில் நுகர்பொருள் வாணிபக்கழகம் கட்டுப்பாட்டில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றனர். இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து கொண்டு அவற்றுக்கான பணத்தினை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்று தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது.


மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 5 நாட்களுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல்

இந்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை ஆங்காங்கே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய கால தாமதம் ஆவதால்  மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் அடுக்கிவைத்து விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். இதனால் அவ்வப்போது பெய்யும் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடையும் வேளையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 5 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நேரடி கொள்முதல் நிலையங்களும் 5 தினங்களுக்கு மூடப்படுவதாக அதிகாரிகள் தெரித்துள்ளனர்.


மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 5 நாட்களுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல்

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கணக்குகள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஒரு ஆண்டு என்ற அடிப்படையில் கொள்முதல் நிலையங்களில் காணக்கீடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படிபடையில் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் 2020-21 ஆம் ஆண்டிற்கான கணக்கு முடிக்கும்  பணிகளுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு கொள்முதல் செய்யும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது எனவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்ட 115 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அவற்றில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொண்டுவந்து  காயவைத்து அடுக்கிவைத்து விற்பனை செய்து வருகின்றனர். கணக்கு முடிவுற்றதும் மீண்டும் 5 தினங்கள் கழித்து 6 ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.


மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 5 நாட்களுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல்

இந்நிலையில் திடீரென கணக்கு முடிப்பு பணிகளுக்காக   5 நாட்களுக்கு கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்து கொள்முதல் நிலையங்களை மூடி உள்ளதால்,  அறுவடை செய்த நெல்லை விற்பதற்காக நாள் கணக்கில் கொள்முதல் நிலைய வாசலில் விவசாயிகள் காத்துகிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு அறுவடை சமயத்தில் அடிக்கடி மழைபெய்வதால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்து நஷ்டம் ஏற்பட்டது. மேலும் தற்போது கொள்முதல் நிலையம் 5 நாட்களுக்கு  மூடப்பட்டதால் மழையில் நெல்லை பாதுகாக்க முடியாத சூழல் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Embed widget