மேலும் அறிய

ஆரஞ்ச் அலெர்ட்... தஞ்சாவூருக்கு வந்தது தேசிய பேரிடர் மீட்பு குழு

டிட்வா புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கனமழை முதல் மிக கனமழை வரை உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களுக்கு டிட்வா புயலால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை தந்து தயார் நிலையில் உள்ளனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதல் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. தற்போது டித்வா புயல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை வடக்கு திசையில் இருந்து வடக்கு - வடமேற்கு திசை நோக்கி 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது இந்த புயல் ஜாஃப்னாவில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலும், வேதராண்யத்தில் இருந்து தென்கிழக்கு 140 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தும், காரைக்காலில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு - தென்கிழக்கிலும், புதுச்சேரியில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த புயல் தற்போது உள்ளது.  

டிட்வா புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கனமழை முதல் மிக கனமழை வரை உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மாலை வரை தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதில் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் தஞ்சை மாவட்டத்திற்கு சென்னை அரக்கோணம் 4-வது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 35 பேர் இன்று காலை தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளனர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில் முகாமிட்டுள்ள இவர்கள், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் படி மீட்பு பணிகளில் ஈடுபடுத்தவுள்ளனர்.

இதுகுறித்து மீட்புக்குழுவினர் கூறியதாவது: தற்போது டிட்வா புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளோம். மாவட்டத்தில் மழையின் போது மரங்கள் சாய்ந்து விழுந்தாலும், கட்டிடங்கள் இடிந்து விழுந்தாலும் அதில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றவும், புயல் வந்தால் அதில் பாதிப்புகள் ஏற்பட்டால் பொதுமக்களை காப்பாற்றவும் நாங்கள் தயார் நிலையில் உள்ளோம்.

மேலும் ரப்பர் படகுகள், உயிர் காக்கும் லைப் ஷாக்கெட்டுகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜெனரேட்டர் உள்ளிட்ட அனைத்து மீட்பு கருவிகளும் தயார் நிலையில் வைத்துள்ளோம். ஏதாவது உதவி என மாவட்ட நிர்வாகத்தின் பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தவுடன் எங்களுக்கு தகவல் வரும், வந்தவுடன் நாங்கள் அந்த பகுதிக்கு சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்றனர்.

தமிழ்நாட்டில் டித்வா புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மற்றும் மழை அதிகம் பெய்யும் வாய்ப்புள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மழைநீர் அதிகம் தேங்கும் வாய்ப்புள்ள மாவட்டங்களில் அரசு சார்பில் மழைநீரை உடனே அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை
தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக அதிரடி! 7 தாசில்தார்களுக்கு பணியிட மாற்றம்... கலெக்டர் ரேவதி உத்தரவு
தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக அதிரடி! 7 தாசில்தார்களுக்கு பணியிட மாற்றம்... கலெக்டர் ரேவதி உத்தரவு
“தஞ்சையை தூய்மையான மாநகரமாக மாற்றுவோம்”... இணைந்து செயல்பட மேயர் பொறுப்பு அஞ்சுகம் பூபதி அறிவுறுத்தல்
“தஞ்சையை தூய்மையான மாநகரமாக மாற்றுவோம்”... இணைந்து செயல்பட மேயர் பொறுப்பு அஞ்சுகம் பூபதி அறிவுறுத்தல்

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
US Iran War: ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
பதின்ம வயதுப் பெண்களே உஷார்! ரத்த சோகையை சரிசெய்வது எப்படி? மருத்துவர் எச்சரிக்கை
பதின்ம வயதுப் பெண்களே உஷார்! ரத்த சோகையை சரிசெய்வது எப்படி? மருத்துவர் எச்சரிக்கை
Embed widget