மேலும் அறிய

அதிர்ச்சி... விடுப்பு தராததால் கொரோனா தொற்றுடன் பணியாற்றும் செவிலியர்கள்

கூடுதல் செவிலியர்களை பணியமர்த்தக்கோரியும், தொடர்ச்சியாக பணியாற்றுபவர்களுக்கு தேவையான விடுப்பினை வழங்கக் கோரியும் செவிலியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட முயன்ற போது, அவர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 28 செவிலியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று. தொற்றுடன் பணி புரிவதாக வேதனை தெரிவிக்கும் செவிலியர்கள்!


மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியில் உள்ள செவிலியர்கள் 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டும் தனிமைபடுத்திக் கொள்ள விடுப்பு வழங்கவில்லை என்று செவிலியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து, தற்போது கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை நோய் தமிழகத்திற்கு அடுத்த ஒரு பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களை நோயிலிருந்து காக்க மருத்துவமனைகளில் மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு பகலாக தங்கள் உயிரை துச்சமென நினைத்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு ஒப்பந்த ஊழியராக பணி புரிந்த செவிலியர்கள் 1200 பேரை பணி நிரந்தரம் செய்து கொரோனா சிறப்பு வார்டுகளில் பணியில் ஈடுபட வலியுறுத்தியுள்ளனர்.

அதிர்ச்சி... விடுப்பு தராததால் கொரோனா தொற்றுடன் பணியாற்றும் செவிலியர்கள்

மேலும், கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்து, 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அரசாணை வெளியீட்டு அவர்களின் ஊதிய செலவினங்களுக்காக ரூபாய் 75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் 105 செவிலியர்கள் பணியில் உள்ளனர். இவர்களில் 61 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இதில், 15க்கும் மேற்பட்டோர் மகப்பேறு உள்ளிட்ட காரணங்களால் விடுப்பில் சென்றுவிட்டனர். எஞ்சிய 90 செவிலியர்கள் 3 ஷிப்டுகளில் பணியாற்றி வருகின்றனர். தற்போது, கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை, மயூரா ஹாலில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் மற்றும் கொரோனா வகைப்படுத்தும் மையத்திலும் இந்த செவிலியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். விடுப்பு எடுக்காமல் பணிக்கு சென்றுவந்த  செவிலியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்று மேலும் 18 செவிலியர்களுக்கு  கொரோனா தொற்று கண்டறியபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதிர்ச்சி... விடுப்பு தராததால் கொரோனா தொற்றுடன் பணியாற்றும் செவிலியர்கள்

செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக கொரோனா தொற்று ஏற்பட்ட செவிலியர்களை தனிமைபடுத்திகொள்ள மருத்துவமனை நிர்வாகம் விடுப்பு வழங்காததால் தொடர்ந்து தொற்றுடன் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். கூடுதல் செவிலியர்களை பணியமர்த்தக்கோரியும், தொடர்ச்சியாக பணியாற்றுபவர்களுக்கு தேவையான விடுப்பினை வழங்கக் கோரியும், தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கக் வலியுறுத்தி செவிலியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தயாராகினர். 

அதிர்ச்சி... விடுப்பு தராததால் கொரோனா தொற்றுடன் பணியாற்றும் செவிலியர்கள்

இதுகுறித்த தகவல் அறிந்த மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலர் செவிலியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தததைத் தொடர்ந்து போராட்டம் செய்ய வந்த செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டு தங்கள் பணியை தொடர்ந்தனர். இதனால்  மருத்துவமனை வளாகத்தில் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதிர்ச்சி... விடுப்பு தராததால் கொரோனா தொற்றுடன் பணியாற்றும் செவிலியர்கள்

தொற்று உறுதிசெய்யப்பட்ட செவிலியர்களை எதன் அடிப்படையில் பணியில் அமர்த்தினார்கள் என்கிற கேள்வி ஒருபுறம் எழுந்திருக்கும் நிலையில், செவிலியர் பற்றாக்குறையை போக்க அங்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் .

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget