மேலும் அறிய

அதிர்ச்சி... விடுப்பு தராததால் கொரோனா தொற்றுடன் பணியாற்றும் செவிலியர்கள்

கூடுதல் செவிலியர்களை பணியமர்த்தக்கோரியும், தொடர்ச்சியாக பணியாற்றுபவர்களுக்கு தேவையான விடுப்பினை வழங்கக் கோரியும் செவிலியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட முயன்ற போது, அவர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 28 செவிலியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று. தொற்றுடன் பணி புரிவதாக வேதனை தெரிவிக்கும் செவிலியர்கள்!


மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியில் உள்ள செவிலியர்கள் 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டும் தனிமைபடுத்திக் கொள்ள விடுப்பு வழங்கவில்லை என்று செவிலியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து, தற்போது கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை நோய் தமிழகத்திற்கு அடுத்த ஒரு பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களை நோயிலிருந்து காக்க மருத்துவமனைகளில் மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு பகலாக தங்கள் உயிரை துச்சமென நினைத்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு ஒப்பந்த ஊழியராக பணி புரிந்த செவிலியர்கள் 1200 பேரை பணி நிரந்தரம் செய்து கொரோனா சிறப்பு வார்டுகளில் பணியில் ஈடுபட வலியுறுத்தியுள்ளனர்.

அதிர்ச்சி... விடுப்பு தராததால் கொரோனா தொற்றுடன் பணியாற்றும் செவிலியர்கள்

மேலும், கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்து, 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அரசாணை வெளியீட்டு அவர்களின் ஊதிய செலவினங்களுக்காக ரூபாய் 75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் 105 செவிலியர்கள் பணியில் உள்ளனர். இவர்களில் 61 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இதில், 15க்கும் மேற்பட்டோர் மகப்பேறு உள்ளிட்ட காரணங்களால் விடுப்பில் சென்றுவிட்டனர். எஞ்சிய 90 செவிலியர்கள் 3 ஷிப்டுகளில் பணியாற்றி வருகின்றனர். தற்போது, கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை, மயூரா ஹாலில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் மற்றும் கொரோனா வகைப்படுத்தும் மையத்திலும் இந்த செவிலியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். விடுப்பு எடுக்காமல் பணிக்கு சென்றுவந்த  செவிலியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்று மேலும் 18 செவிலியர்களுக்கு  கொரோனா தொற்று கண்டறியபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதிர்ச்சி... விடுப்பு தராததால் கொரோனா தொற்றுடன் பணியாற்றும் செவிலியர்கள்

செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக கொரோனா தொற்று ஏற்பட்ட செவிலியர்களை தனிமைபடுத்திகொள்ள மருத்துவமனை நிர்வாகம் விடுப்பு வழங்காததால் தொடர்ந்து தொற்றுடன் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். கூடுதல் செவிலியர்களை பணியமர்த்தக்கோரியும், தொடர்ச்சியாக பணியாற்றுபவர்களுக்கு தேவையான விடுப்பினை வழங்கக் கோரியும், தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கக் வலியுறுத்தி செவிலியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தயாராகினர். 

அதிர்ச்சி... விடுப்பு தராததால் கொரோனா தொற்றுடன் பணியாற்றும் செவிலியர்கள்

இதுகுறித்த தகவல் அறிந்த மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலர் செவிலியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தததைத் தொடர்ந்து போராட்டம் செய்ய வந்த செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டு தங்கள் பணியை தொடர்ந்தனர். இதனால்  மருத்துவமனை வளாகத்தில் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதிர்ச்சி... விடுப்பு தராததால் கொரோனா தொற்றுடன் பணியாற்றும் செவிலியர்கள்

தொற்று உறுதிசெய்யப்பட்ட செவிலியர்களை எதன் அடிப்படையில் பணியில் அமர்த்தினார்கள் என்கிற கேள்வி ஒருபுறம் எழுந்திருக்கும் நிலையில், செவிலியர் பற்றாக்குறையை போக்க அங்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் .

தலைப்பு செய்திகள்

மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
தஞ்சையைத் தகித்த வெயில்; தாளாமல் கொட்டிய பெருமழை...  சூறைக்காற்றால் சாய்ந்த பயிர்கள்
தஞ்சையைத் தகித்த வெயில்; தாளாமல் கொட்டிய பெருமழை...  சூறைக்காற்றால் சாய்ந்த பயிர்கள்
காற்றின் கவிதை... கலைஞனின் தவம்... காதுகளைக் குளிரவைக்கும் நாதஸ்வர ரகசியம்!
காற்றின் கவிதை... கலைஞனின் தவம்... காதுகளைக் குளிரவைக்கும் நாதஸ்வர ரகசியம்!
மாதாவின் நகருக்கு வரும் இரும்புக் குதிரைகள்... வேளாங்கண்ணியில் அமையப்போகிறது புதிய ரயில் பாசறை!
மாதாவின் நகருக்கு வரும் இரும்புக் குதிரைகள்... வேளாங்கண்ணியில் அமையப்போகிறது புதிய ரயில் பாசறை!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
TN RAIN ALERT: அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
NEET Re-Exam Issue: நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Embed widget