மேலும் அறிய

அதிர்ச்சி... விடுப்பு தராததால் கொரோனா தொற்றுடன் பணியாற்றும் செவிலியர்கள்

கூடுதல் செவிலியர்களை பணியமர்த்தக்கோரியும், தொடர்ச்சியாக பணியாற்றுபவர்களுக்கு தேவையான விடுப்பினை வழங்கக் கோரியும் செவிலியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட முயன்ற போது, அவர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 28 செவிலியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று. தொற்றுடன் பணி புரிவதாக வேதனை தெரிவிக்கும் செவிலியர்கள்!


மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியில் உள்ள செவிலியர்கள் 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டும் தனிமைபடுத்திக் கொள்ள விடுப்பு வழங்கவில்லை என்று செவிலியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து, தற்போது கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை நோய் தமிழகத்திற்கு அடுத்த ஒரு பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களை நோயிலிருந்து காக்க மருத்துவமனைகளில் மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு பகலாக தங்கள் உயிரை துச்சமென நினைத்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு ஒப்பந்த ஊழியராக பணி புரிந்த செவிலியர்கள் 1200 பேரை பணி நிரந்தரம் செய்து கொரோனா சிறப்பு வார்டுகளில் பணியில் ஈடுபட வலியுறுத்தியுள்ளனர்.

அதிர்ச்சி... விடுப்பு தராததால் கொரோனா தொற்றுடன் பணியாற்றும் செவிலியர்கள்

மேலும், கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்து, 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அரசாணை வெளியீட்டு அவர்களின் ஊதிய செலவினங்களுக்காக ரூபாய் 75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் 105 செவிலியர்கள் பணியில் உள்ளனர். இவர்களில் 61 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இதில், 15க்கும் மேற்பட்டோர் மகப்பேறு உள்ளிட்ட காரணங்களால் விடுப்பில் சென்றுவிட்டனர். எஞ்சிய 90 செவிலியர்கள் 3 ஷிப்டுகளில் பணியாற்றி வருகின்றனர். தற்போது, கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை, மயூரா ஹாலில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் மற்றும் கொரோனா வகைப்படுத்தும் மையத்திலும் இந்த செவிலியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். விடுப்பு எடுக்காமல் பணிக்கு சென்றுவந்த  செவிலியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்று மேலும் 18 செவிலியர்களுக்கு  கொரோனா தொற்று கண்டறியபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதிர்ச்சி... விடுப்பு தராததால் கொரோனா தொற்றுடன் பணியாற்றும் செவிலியர்கள்

செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக கொரோனா தொற்று ஏற்பட்ட செவிலியர்களை தனிமைபடுத்திகொள்ள மருத்துவமனை நிர்வாகம் விடுப்பு வழங்காததால் தொடர்ந்து தொற்றுடன் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். கூடுதல் செவிலியர்களை பணியமர்த்தக்கோரியும், தொடர்ச்சியாக பணியாற்றுபவர்களுக்கு தேவையான விடுப்பினை வழங்கக் கோரியும், தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கக் வலியுறுத்தி செவிலியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தயாராகினர். 

அதிர்ச்சி... விடுப்பு தராததால் கொரோனா தொற்றுடன் பணியாற்றும் செவிலியர்கள்

இதுகுறித்த தகவல் அறிந்த மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலர் செவிலியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தததைத் தொடர்ந்து போராட்டம் செய்ய வந்த செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டு தங்கள் பணியை தொடர்ந்தனர். இதனால்  மருத்துவமனை வளாகத்தில் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதிர்ச்சி... விடுப்பு தராததால் கொரோனா தொற்றுடன் பணியாற்றும் செவிலியர்கள்

தொற்று உறுதிசெய்யப்பட்ட செவிலியர்களை எதன் அடிப்படையில் பணியில் அமர்த்தினார்கள் என்கிற கேள்வி ஒருபுறம் எழுந்திருக்கும் நிலையில், செவிலியர் பற்றாக்குறையை போக்க அங்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் .

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget