மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் எந்த அமைச்சரும் சாலையில் நடமாடமுடியாது - மன்னார்குடி ஜீயர்
’கோவில்களில் தலையிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அரசாங்கத்தில் எந்த ஒரு அமைச்சர்களும் சாலைகளில் நடக்க முடியாது’ - மன்னார்குடி ஜீயர் காட்டம் !
![இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் எந்த அமைச்சரும் சாலையில் நடமாடமுடியாது - மன்னார்குடி ஜீயர் No minister can walk on the road if he acts against Hinduism say by Mannargudi Jeeyar இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் எந்த அமைச்சரும் சாலையில் நடமாடமுடியாது - மன்னார்குடி ஜீயர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/04/4aa78ff6feaf37043c39b37645f08119_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மன்னார்குடி ஜீயர்
"தருமபுர ஆதின பட்டின பிரவேச நிகழ்வை உயிரைக் கொடுத்தாவது நடத்துவோம், தருமபுர ஆதின மடத்திற்கு கவர்னர் வருகை தந்ததுதான் பட்டின பிரவேச நிகழ்ச்சி ரத்துக்கு காரணம்" என மதுரை ஆதினம் பேட்டியளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று “மதசார்பற்ற நாடு என கூறிக்கொண்டு, ஒரு மதத்ததிற்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது நல்லதல்ல” என மதுரை ஆதீனம் பேட்டியளித்துள்ளார்.
![இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் எந்த அமைச்சரும் சாலையில் நடமாடமுடியாது - மன்னார்குடி ஜீயர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/03/4b159f635d58cf06d75a74827f5cf133_original.jpg)
தஞ்சாவூர் அடுத்த களிமேடு பகுதியில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்து நடந்த பகுதியையும், அப்பர் மடத்தினை மதுரை ஆதீனம் பார்வையிட்டு மெளன அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதினத்திற்கு சொந்தமான இந்தக் கோயில்களின் சொத்துக்களை வைத்துக்கொண்டு ஆளும் கட்சியினர் மிரட்டுவதாகவும், குத்தகை தொகையை தர முடியாது என மிரட்டுகிறார்கள்.
![இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் எந்த அமைச்சரும் சாலையில் நடமாடமுடியாது - மன்னார்குடி ஜீயர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/13/a5dfb27881d342c5dd0001349d826738_original.jpg)
உன்னால் திருப்பணி செய்ய முடியுமா, ஊருக்குள் நுழைய முடியுமா என ஆளும் கட்சியினர் மிரட்டுகிறார்கள். என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாரதப் பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட உள்ளேன். கஞ்சனூரில் என்ன பிரச்னை இருந்தாலும், கவலை இல்லை. எங்களுக்கு கோயிலுக்கு நான் செல்கிறேன். இவர்கள் என்ன தடுக்க முடியும் என அவர் தெரிவித்தார். மேலும் மதசார்பற்ற நாடு என கூறிக்கொண்டு, ஒரு மதத்திற்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது நல்லதல்ல. ஒரு மதத்தை அழித்து விடலாம் என நினைக்கிறார்களா, அது வெள்ளைக்காரனால் கூட முடியவில்லை, இவர்களால் என்ன செய்ய முடியும்” என அவர் தெரிவித்தார்.
பட்டினப் பிரவேசம் நடந்தே தீரும். அதை யாராலும் நிறுத்த முடியாது. இந்து விரோத செயல்களில் ஈடுபடுவது, கோவில்களில் தலையீடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அரசாங்கத்தில் எந்த ஒரு அமைச்சர்களும் சாலைகளில் நடக்க முடியாது. - மன்னார்குடி ஜீயர் பேட்டியளித்துள்ளார்.@SRajaJourno |@gurujourn https://t.co/5Oot9C6SY1
— Arunchinna (@iamarunchinna) May 4, 2022
பின்னர் மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் ஸ்ரீ ராமனுஜர் கூறுகையில், பட்டினப் பிரவேசம் என்பது சம்பிராயத்தில் இருக்கக்கூடியது. பட்டின பிரவேசத்தை யாராலும் தடுக்கமுடியாது. அதை எந்த அரசாங்கமும், எந்த ஒரு இயக்கமும் தடுக்க முடியாது. பட்டினப் பிரவேசம் நடந்தே தீரும். அதை யாராலும் நிறுத்த முடியாது. இந்து விரோத செயல்களில் ஈடுபடுவது, கோயில்களில் தலையீடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அரசாங்கத்தில் எந்த ஒரு அமைச்சர்களும் சாலைகளில் நடக்க முடியாது”. என தெரிவித்தார்
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Adinam ’எனக்கு ரொம்ப வருத்தம்; என்னை வேண்டுமானால் சுடட்டும்’ - கொந்தளித்த மதுரை ஆதினம்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion