மேலும் அறிய

New Year 2025 : பிறந்தது புத்தாண்டு... தஞ்சையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

நள்ளிரவு 12 மணிக்கு 2025-ம் ஆண்டு ஆங்கிலப்புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டு பிறப்பையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

தஞ்சாவூர்: தஞ்சை கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு பிரார்த்தனை:

நள்ளிரவு 12 மணிக்கு 2025-ம் ஆண்டு ஆங்கிலப்புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டு பிறப்பையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தஞ்சை மறைமாவட்டத்தின் தலைமை பேராலயமாக விளங்கும் தஞ்சை திருஇருதய ஆண்டவர் பேராலயத்தில் 2025-ம் ஆண்டின் புத்தாண்டு சிறப்பு வழிபாடு வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. முன்னதாக உதவி பங்குத்தந்தை அமர்தீப்மைக்கேல் தலைமையில் பேராலய மேடையில் நன்றி வழிபாடு நடைபெற்றது. கடந்த ஆண்டில் பெற்ற நன்மைகளுக்கு நன்றி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: New Year 2025 : புத்தாண்டு கொண்டாட்டம்! புதுச்சேரி கோவில்களில் சிறப்பு பூஜை! நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம்


New Year 2025 : பிறந்தது புத்தாண்டு... தஞ்சையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

நள்ளிரவு கூட்டுத் திருப்பலி:

தொடர்ந்து இரவு 11.45 மணிக்கு பேராலய பங்குத்தந்தை பிரபாகர் அடிகளார் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்கும் வகையில் உன்னதங்களிலே கீதம் பாடல் பாடப்பட்டது. அனைத்து மக்களும் கரவொலி எழுப்பி புத்தாண்டை வரவேற்றனர். தொடர்ந்து இறை வார்த்தை வழிபாடு, மறையுறை, நற்கருணை வழிபாடு நடைபெற்றது.

புத்தாண்டு திருப்பலி முடிந்ததும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேராலய பங்குத்தந்தை கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இறைமக்கள் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு பேராலயத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதையும் படிங்க மக்களே: Mettur Dam: புத்தாண்டில் ஒரு ஹாப்பி நியூஸ்... முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை..

தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் நேற்று இரவு புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இரவு 11.15 மணிக்கு 2024-ம் ஆண்டு இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆராதனை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு 2025-ம் ஆண்டு புதிய ஆண்டில் கடவுளுடைய வழிநடத்துதலுக்காக சிறப்பு ஆராதனை நடந்தது. இந்த ஆராதனையை ஆயர் பெஞ்சமின் நடத்தி சிறப்பு செய்தி அளித்தார்.
 
ஆராதனை முடிந்ததும் அனைவருக்கும் கேக், தேநீர் வழங்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சேகர குழு உறுப்பினர்கள், செய்து இருந்தனர். புத்தாண்டையொட்டி ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

வாழ்த்துகளை பரிமாறிய மக்கள்:

தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுருஆலயம், தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலயம், குழந்தை ஏசு திருத்தலம், மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம், வடக்கு வாசல் அருளானந்தர் ஆலயம், மானம்புச்சாவடி சூசையப்பர் ஆலயம், மாதாக்கோட்டை புனித லூர்து சகாய அன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் புத்தாண்டு கூட்டுத்திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

புத்தாண்டையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 2025-ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதுடன் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். தஞ்சை பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம் பகுதியிலும் ஏராளமானோர் கூடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
மகன்கூட மல்லுகட்டும் ராமதாஸ்.. மகனுக்காக மல்லுகட்டும் வைகோ.. அனல்பறக்கும் தமிழ்நாடு அரசியல்
மகன்கூட மல்லுகட்டும் ராமதாஸ்.. மகனுக்காக மல்லுகட்டும் வைகோ.. அனல்பறக்கும் தமிழ்நாடு அரசியல்
Mahindra Car Offer: எல்லா அம்சங்களும் கொட்டிக் கிடக்கே.! இந்த மஹிந்திரா காருக்கு ரூ.2.5 லட்சம் சலுகை, 5 ஸ்டார் ரேட்டிங்
Mahindra Car Offer: எல்லா அம்சங்களும் கொட்டிக் கிடக்கே.! இந்த மஹிந்திரா காருக்கு ரூ.2.5 லட்சம் சலுகை, 5 ஸ்டார் ரேட்டிங்
மதுரைக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்... புதிய சிப்காட், வேலைவாய்ப்பு பெருகும்! தென் மாவட்டங்களில் மாபெரும் மாற்றம்?
மதுரைக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்... புதிய சிப்காட், வேலைவாய்ப்பு பெருகும்! தென் மாவட்டங்களில் மாபெரும் மாற்றம்?
எல்லாரிடமும் திமிராக பேசிய தனுஷ்...8 வருடம் கழித்து உண்மையை சொன்ன நயன்
எல்லாரிடமும் திமிராக பேசிய தனுஷ்...8 வருடம் கழித்து உண்மையை சொன்ன நயன்
Embed widget