மேலும் அறிய

பறிமுதல் செய்த வாகனங்களை திருடி சாராய வியாபாரியிடம் விற்ற போலீஸ் தலைமறைவு

’’திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட காவலர் முருகனை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் ஜவகர் தற்காலிக பணியிடம் நீக்கி உத்தரவிட்டுள்ளார்’’

மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் புதுச்சேரி மது வகைகளை வாகனங்கள் மூலம் கடத்தி வந்து தமிழக பகுதியில் விற்பனை செய்வது வாடிக்கையாகி வரும் நிலையில் காவல் துறையினரும் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி மதுபானங்களை இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் என சாராய கடத்தல்காரர்கள் TR பட்டினம் மற்றும் வாஞ்சூர் பகுதியில் இருந்து கடத்தி வந்து நாகை மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் வயல், கருவேலங்காடு, மயான பகுதிகளிலும் விற்பனை செய்து வருகின்றனர். காவல்துறையினர் தடுப்பு நடவடிக்கை எடுத்து வந்தாலும் ஒரு சில காவலர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதால் தடை செய்யப்பட்ட மது வகைகள் கடத்தி வரப்படும் விற்பனை செய்யப்படுவதும் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டும் கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல் கண்காணிப்பாளர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தொடர்பு கருத்து தெரிவித்துவரும் நிலையில் அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
 
பறிமுதல் செய்த வாகனங்களை திருடி சாராய வியாபாரியிடம் விற்ற போலீஸ் தலைமறைவு
சாராய வியாபாரி ராஜ்குமார்

நாகை மாவட்டத்தில்  மது கடத்தல் குற்ற வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றவாளிகளை ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் குற்றவாளிகளை சிறையில் அடைத்தும் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் நாகை காடம்பாடியில் உள்ள பழைய ஆயுதப்படை மைதானம் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படுவதுடன் பின்னர் அந்த வாகனங்கள் ஏலம்  விடப்படும். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மது கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு பழைய ஆயுதப்படை மைதான வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் ஏலம் விட கணக்கு எடுக்கப்பட்டது. அப்போது இரண்டு இருசக்கர வாகனங்கள் காணாமல் போயிருப்பதை போலிசார் கண்டறிந்தனர்.
 
பறிமுதல் செய்த வாகனங்களை திருடி சாராய வியாபாரியிடம் விற்ற போலீஸ் தலைமறைவு
 
இது குறித்து நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் முருகன் இருசக்கர வாகனங்களை சாராய வியாபாரியான நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜ்குமார்  என்பவரிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து வாகனங்களை மீட்ட போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர்.
 

பறிமுதல் செய்த வாகனங்களை திருடி சாராய வியாபாரியிடம் விற்ற போலீஸ் தலைமறைவு
 
வேலியே பயிரை மேய்ந்த அதிர்ச்சி சம்பவத்தில் ஈடுபட்ட காவலர் முருகனை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் ஜவகர் தற்காலிக பணியிடம் நீக்கி உத்தரவிட்டார். மேலும்  தலைமறைவாக இருந்துவரும் காவலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.  குற்ற சம்பவங்களை தடுக்கும் காவலரே குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது நாகை மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget