மேலும் அறிய

திருக்குவளை தாலுகாவிற்கு தனி நீதிமன்றம் - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திறந்து வைத்தார்

இளம் வக்கீல்கள் தன்னிடம் வரும் வழக்குகளை முழுமையாக படிக்க வேண்டும். அப்பொழுது தான் நீதிமன்றத்தில் திறமையாக வாதாட முடியும்.

திருக்குவளை தாலுகாவிற்கு தனி நீதிமன்றம் மற்றும் நாகையில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் உள்ளிட்ட நான்கு கட்டிடங்களை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிஅரசர் டி.ராஜா திறந்து வைத்தார்.

திருக்குவளை மாவட்ட ஒருங்கிணைந்த குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் திறப்பு விழா நாகப்பட்டினம் நீதிமன்ற வளாகத்தில்  நடைபெற்றது. முன்னதாக நாகப்பட்டினம் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சோழர்கால புகழ்பெற்ற சூடாமணி விஹாகரத்தை அமைச்சர் ரகுபதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொறுப்பு) ராஜா ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.


திருக்குவளை தாலுகாவிற்கு தனி நீதிமன்றம் - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திறந்து வைத்தார்

அப்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொறுப்பு) ராஜா தெரிவிக்கும் போது: நாகப்பட்டினம் சிறந்த மாநகரமாக திகழ்ந்துள்ளதற்கு நிறைய வரலாற்று சான்றுகள் உள்ளது. நாகப்பட்டினம் நீதிமன்றம் அமைந்துள்ள வளாகத்தில் சோழர்கள் ஆட்சி காலத்தில் சிறந்து விளங்கிய புத்தக விகார் அமைந்துள்ளது. இங்குள்ள சூடாமணி விஹார் வெளிநாட்டில் இருந்து நாகப்பட்டினம் வந்து வணிகம் செய்ய போதுமான வசதிகளை செய்து கொடுத்துள்ளது. அதே போல் சைவ சமயத்தை வளர்த்த திருஞானசம்பந்தர் பிறந்த மண். தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கிய மறைமலைஅடிகளார் பிறந்த மண் என நாகப்பட்டினத்திற்கு நிறைய பெருமை உள்ளது. இந்த நாகப்பட்டினம் மண்ணில் திருக்குவளையில் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் உட்பட 4 நீதிமன்றங்கள் திறப்பது மகிழ்ச்சியாக உள்ளது. திருக்குவளை நீதிமன்றத்தில் 209 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளை விசாரித்து விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும்.


திருக்குவளை தாலுகாவிற்கு தனி நீதிமன்றம் - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திறந்து வைத்தார்

இளம் வக்கீல்கள் தங்களது வாழ்வில் வெற்றி பெற 4 வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நேரம், காலம் பார்க்காமல் கடுமையாக உழைக்க வேண்டும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் உயர நேரம், காலம் பார்க்க கூடாது. நிறைய படிக்க வேண்டும். எந்த புத்தகத்தையும் ஒதுக்க கூடாது. படிக்க, படிக்க தான் அறிவு வளரும். அதே போல் நேரம் கிடைக்கும் போது எல்லாம் நீதிமன்றத்திற்கு வர வேண்டும். மூத்த வக்கீல்கள் வாதாடுவதை கேட்க வேண்டும். ஒவ்வொரு வக்கீல்களும் தனது திறமைக்கு ஏற்ப வாதாடுவார்கள். இதை இளம் வக்கீல்கள் பார்க்க பார்க்க நிறைய கருத்துக்களை கற்று கொள்ள முடியும். சக வக்கீல்களுடன் சண்டை போடுவதை விட்டு சகோதரர்களாக பழக வேண்டும். எல்லா வக்கீல்களிடம் அன்புடன் பழக வேண்டும். மரியாதையுடன் பேச வேண்டும். தமிழ்மொழியுடன் ஆங்கில மொழியையும் கற்று கொள்ள வேண்டும். ஆங்கில மொழி உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் போது பயன்தரும். இளம் வக்கீல்கள் தன்னிடம் வரும் வழக்குகளை முழுமையாக படிக்க வேண்டும். அப்பொழுது தான் நீதிமன்றத்தில் திறமையாக வாதாட முடியும் என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

காத்திருந்தது போதும்! 3,274 ஓட்டுநர், நடத்துனருக்கு அரிய வாய்ப்பு! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு
காத்திருந்தது போதும்! 3,274 ஓட்டுநர், நடத்துனருக்கு அரிய வாய்ப்பு! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு
Police Encounter: கடலூரில் கொள்ளையன் மீது துப்பாக்கிச் சூடு - போலீசார் அதிரடி, காரணம் என்ன?
Police Encounter: கடலூரில் கொள்ளையன் மீது துப்பாக்கிச் சூடு - போலீசார் அதிரடி, காரணம் என்ன?
Trump Zelensky: சண்டை வேணாமே..! மீண்டும் ஜெலன்ஸ்கியிடம் பேசிய ட்ரம்ப், ”நாங்க இருக்கோம், அப்படியே..”
Trump Zelensky: சண்டை வேணாமே..! மீண்டும் ஜெலன்ஸ்கியிடம் பேசிய ட்ரம்ப், ”நாங்க இருக்கோம், அப்படியே..”
Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காத்திருந்தது போதும்! 3,274 ஓட்டுநர், நடத்துனருக்கு அரிய வாய்ப்பு! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு
காத்திருந்தது போதும்! 3,274 ஓட்டுநர், நடத்துனருக்கு அரிய வாய்ப்பு! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு
Police Encounter: கடலூரில் கொள்ளையன் மீது துப்பாக்கிச் சூடு - போலீசார் அதிரடி, காரணம் என்ன?
Police Encounter: கடலூரில் கொள்ளையன் மீது துப்பாக்கிச் சூடு - போலீசார் அதிரடி, காரணம் என்ன?
Trump Zelensky: சண்டை வேணாமே..! மீண்டும் ஜெலன்ஸ்கியிடம் பேசிய ட்ரம்ப், ”நாங்க இருக்கோம், அப்படியே..”
Trump Zelensky: சண்டை வேணாமே..! மீண்டும் ஜெலன்ஸ்கியிடம் பேசிய ட்ரம்ப், ”நாங்க இருக்கோம், அப்படியே..”
Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
CSK Vs MI IPL 2025: சென்னையில் கோலோச்சும் மும்பை, ஹர்திக் படையை தாக்கு பிடிப்பாரா கெய்க்வாட்..! ஐபிஎல் ஆண்ட பரம்பரைகள்
CSK Vs MI IPL 2025: சென்னையில் கோலோச்சும் மும்பை, ஹர்திக் படையை தாக்கு பிடிப்பாரா கெய்க்வாட்..! ஐபிஎல் ஆண்ட பரம்பரைகள்
Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு-  நாளைய வானிலை எப்படி?
இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
Embed widget