மேலும் அறிய

Nagapattinam: சூடாமணி விகாரம் அமைந்துள்ள பகுதியில் இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு

புத்த விகாரங்கள் ஆங்கிலேயர்கள் காலத்தில் நீதிமன்றமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் நாகையில் உள்ள பழைய நீதிமன்ற வளாகம் சோழர்கள் பயன்படுத்திய முக்கிய இடமாக பார்க்கப்படுகிறது.

நாகையில் சூடாமணி விகாரம் அமைந்துள்ள பகுதியில் இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொன்மையான கட்டிடங்கள், சோழர்கள் வாழ்ந்த பகுதிகள் குறித்த ஆய்வில் முழுமையான தரவுகள் சேகரிக்கப்பட்டு தமிழர் நாகரிகம் வெளிகொண்டு வரப்படும் என தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

சோழர்கள் காலத்தில் மிகப்பெரிய துறைமுக நகரமாக விளங்கி, சூடாமணி விகாரம் கட்டப்பட்டு புத்தமதத்தின் தலைமை பீடமாக நாகை மாவட்டம் இருந்ததாக வரலாறுகள் சொல்லப்படுகிறது. இதனிடையே நாகை நகரத்தில் தற்போது அமைந்துள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் சூடாமணி விகாரம் இருந்ததாகவும், அதில் ஆய்வு மேற்கொண்டு நாகை மண்ணின் பண்பாட்டு அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டுமென வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து கீழடியில் முதன்முதலாக அகழாய்வு செய்து தமிழரின் மிகத் தொன்மையான வரலாற்றுச் சுவடுகளை உலகுக்கு வெளிப்படுத்திய, இந்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நாகை மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

Nagapattinam: சூடாமணி விகாரம் அமைந்துள்ள பகுதியில் இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு
 
8 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் பழைய நீதிமன்ற கட்டிடத்தில் உள்ள சூடாமணி விகாரம், புத்த விகாரம், இருந்ததாக சொல்லப்படும் பகுதிகளில் ஆய்வு நடைபெற்றது. தொடர்ந்து நீதிமன்ற மன்ற வளாகத்தில் உள்ள 115 ஆண்டுகள் பழமையான கடல் மட்டம் அளவிடும் கல், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய கோட்டாட்சியர் அலுவலகம், கடற்கரை சாலையில் உள்ள தொன்மைவாய்ந்த அருங்காட்சியகம், உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
 
நாகை மாவட்டத்தில் உள்ள தொன்மையான கட்டிடங்கள், சோழர்கள் வாழ்ந்த பகுதிகள் குறித்த ஆய்வில் முழுமையான தரவுகள் சேகரிக்கப்பட்டு, எவ்வளவு பழமையானது என்பது தெரியவரும். புத்த விகாரங்கள் ஆங்கிலேயர்கள் காலத்தில் நீதிமன்றமாக மாற்றப்பட்டுள்ளது, ஆனால் நாகையில் உள்ள பழைய நீதிமன்ற வளாகம் சோழர்கள் பயன்படுத்திய முக்கிய இடமாக பார்க்கப்படுகிறது. நமது நாகரிகத்தை நாம் பாதுகாக்க வேண்டுமென்றால் இதுபோன்ற அடையாள சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என இந்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத்ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Nagapattinam: சூடாமணி விகாரம் அமைந்துள்ள பகுதியில் இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு
 
பௌத்த அடையாளங்களை தாங்கி நிற்க கூடிய நாகை மாவட்டத்தில் ஏற்கனவே மேற்கொண்ட அகழாய்வில் மீட்கப்பட்ட புத்த சிலைகளை மீண்டும் நாகை மாவட்டத்திற்கு கொண்டு வந்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும், பழைய நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சூடாமணி விகாரம் அமைந்துள்ள பகுதியை நாகை மாவட்டத்தின் அடையாள சின்னமாக மாற்ற வேண்டும், மக்கள் பார்வைக்கு கொண்டுவர வேண்டும் என ஆய்வில் பங்கேற்ற நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். சென்னை பல்கலைகழக பேராசிரியரும், தொல்லியல் ஆலோசகருமான சேரன், துணை தொல்லியல் கண்காணிப்பாளர் குமரன், உதவி தொல்லியலாளர் பிரசன்னா ஆகியோர் வருகைதந்துள்ள குழுவினர் நாகை மாவட்டத்தின் 3 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
IND vs SA: நாளை நடக்குது முதல் போட்டி.. தெ. ஆப்பிரிக்கா ஆணவத்தை அடக்குமா இந்தியா? ரோ-கோ அசத்தல் தொடருமா?
IND vs SA: நாளை நடக்குது முதல் போட்டி.. தெ. ஆப்பிரிக்கா ஆணவத்தை அடக்குமா இந்தியா? ரோ-கோ அசத்தல் தொடருமா?
Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Embed widget